பியகம பகுதியில் கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான நபர் உயிரிழப்பு

பியகம பகுதியில் கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான நபர் உயிரிழப்பு

பியகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெமுணு மாவத்தை பகுதியில் கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (09) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாடகை அறையொன்றில் தங்கியிருந்த நபர் ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

அவர் தங்கியிருந்த அறைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது முச்சக்கரவண்டி தீப்பற்றி எரிவதைக் கண்டு, அவர் அறையிலிருந்து வெளியே வந்துள்ளார்.

இதன்போது, முகத்தை மூடியவாறு வந்த இருவர் கூர்மையான ஆயுதங்களால் அவரைத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த நபர், முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவர் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தற்போது சடலம் முல்லேரியா வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் மற்றும் கொலைக்கான காரணமோ இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்நிலையில் சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பியகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )