பாமகவின் பொது செயலாளராக முரளி சங்கர் நியனம்

பாமகவின் பொது செயலாளராக முரளி சங்கர் நியனம்

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) பொது செயலாளராக முரளி சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாமக நிறுவனர் டாக்டர் எஸ்.ராமதாசுக்கும், அன்புமணி ராமதாசுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்சியில் உள்ளவர்கள் இரண்டு தரப்பாக பிரிந்துள்ளனர்.

இந்நிலையில், கட்சியில் சரியாக செயல்படாதவர்களையும், அன்புமணி ராமதாசின் ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்து நீக்கி புதிய பொறுப்பாளர்களை ராமதாஸ் நியமித்துள்ளார்.

இதன்படி, பாமக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வடிவேல் ராவணன் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு பதிலாக முரளி சங்கரை அந்தப் பதவிக்கு நியமனம் செய்து டாக்டர் ராமதாசு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும் புதிதாக நியமிக்கப்பட்ட பாமக வடக்கு மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களுடன் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாசு ஆலோசனை நடத்தி வருவதால் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

Share This