அபிநந்தனை சிறைப்பிடித்த பாகிஸ்தான் இராணுவ அதிகாரி கொல்லப்பட்டார்!

2019 ஆம் ஆண்டு இந்திய விமானி அபிநந்தன் வர்தமானைக் சிறைபிடித்த பாகிஸ்தான் மேஜர் மொய்ஸ் அப்பாஸ் ஷா, கைபர் பக்துன்க்வா பகுதியில் பயங்கரவாதிகளுடனான மோதலில் கொல்லப்பட்டார்.
பாகிஸ்தான் இராணுவ வீரர்களுக்கும் அந்நாட்டின் தலிபான்கள் எனப்படும், தெஹ்ரீக் – இ – தலிபான் (TTP) பயங்கரவாத அமைப்பினருக்கும் இடையே நடந்த மோதலில், அப்பாஸ் ஷா கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தெற்கு வஜீரிஸ்தான் மாவட்டத்தில் உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கையின் போது (IBO) பாதுகாப்புப் படையினர், 11 இந்திய ஆதரவு பயங்கரவாதிகளைக் கொன்றனர்.
இந்தத் தாக்குதலில் மொய்ஸ் அப்பாஸ் ஷா உள்பட 14 வீரர்கள் கொல்லப்பட்டதாக தெஹ்ரீக் – இ – தலிபான் அமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இரண்டு பாதுகாப்புப் படையினர் வீரமரணம் அடைந்தனர்” என்று பாகிஸ்தான் இராணுவம் செவ்வாய்க்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் போது இரண்டு பாதுகாப்புப் படையினருடன் சேர்த்து, 11 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
“நடவடிக்கையின் போது, சொந்தப் படையினர் குவாரிஜ் இருப்பிடத்தை திறம்படத் தாக்கியதாகவும், “பதினொரு இந்திய ஆதரவு பெற்ற குவாரிஜ் வீரர்கள், பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர்” என்வும் பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
புல்வாமா தாக்குதலுக்குப் பன்னிரண்டு நாட்களுக்குப் பின்னர், பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பாலகோட்டில் உள்ள பயங்கரவாத பயிற்சி முகாம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியிருந்தது.
இதன்போது, அப்போதைய விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் பயணித்த விமானமும் பாகிஸ்தான் போர் விமானங்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
அபிநந்தன் வர்தமான் விமானத்தை விட்டு வெளியேறும் போது, கட்டுப்பாட்டுக் கோட்டின் (LoC) மறுபுறத்தில் தரையிறங்கியதால் பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.