25 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு நான்கு பேரில் ஒருவருக்கு பக்கவாதம்

25 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு நான்கு பேரில் ஒருவருக்கு பக்கவாதம்

25 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு நான்கு பேரில் ஒருவருக்கும் அவர்களின் வாழ்நாளில் பக்கவாதம் ஏற்படலாம் என்று சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

களுத்துறை போதனா வைத்தியசாலையின் சிறப்பு நரம்பியல் நிபுணர் வைத்தியர் சுரங்கி சோமரத்ன கூறுகையில், பக்கவாத நோயாளிகளில் சுமார் 30 வீதம் பேர் 20 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 29 ஆம் திகதி வரவிருக்கும் உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், பக்கவாதம் ஏற்படுவதைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய பல நடவடிக்கைகளை விவரித்தார்.

பக்கவாதத்திற்கான சுமார் 50 வீத வழக்குகளில், உயர் இரத்த அழுத்தம் ஒரு ஆபத்து காரணியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

பக்கவாதத்தைத் தடுக்கவும் குறைக்கவும், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சரியான நேரத்தில் மருந்துகளை எடுத்துக்கொள்வதையும், சுகாதார நிபுணர்களின் தேவைக்கேற்ப அவர்களின் உடல்நலப் பரிசோதனைகளை சரியான நேரத்தில் மேற்கொள்வதையும் உறுதி செய்ய வேண்டும்.

அதே நேரத்தில் உயர் இரத்த அழுத்தம் இல்லாதவர்கள் உயர் இரத்த அழுத்தத்தை ஒரு ஆபத்து காரணியாகக் கண்டறிந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பக்கவாதத்திற்கு வழிவகுக்கும் ஆபத்து காரணிகளைப் பொறுத்தவரை, விழிப்புணர்வு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் ஆகியவை பக்கவாதத்தைத் தடுப்பதற்கும் குறைப்பதற்கும் முக்கியம் என்று சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Share This