
புதிய ஊரக வேலை உறுதி திட்டம் – நாடளாவிய ரீதியில் காங்கிரஸ் போராட்டம்
இந்தியாவில் புதிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு எதிராக ஜனவரி 8 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயர், விக்ஷித் பாரத் கேரன்ட்டி பார் ரோஜ்கர் அண்ட் அஜீவிகா மிஷன் (கிராமின்) (ஜி ராம் ஜி) என்று மாற்றம் செய்யப் பட்டு உள்ளது. இந்த புதிய ஊரக வேலை உறுதித் திட்ட சட்டமூலம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அனுமதி வழங்கினார்.
இந்நிலையில் மகாத்மா காந்தி பெயரை நீக்கியதை கண்டித்தும், சட்டமூலத்தின் குறிப்பிட்ட அம்சங்களை எதிர்த்தும் காங்கிரஸ் போர்க்கொடி உயர்த்தி உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
