
எப்ஸ்டீன் விவகாரம் – பீட்டர் மண்டேல்சனின் நியமனம் குறித்து ஸ்டார்மருக்கு பெரும் அழுத்தம்
2024 ஆம் ஆண்டு பீட்டர் மண்டேல்சனை அமெரிக்க தூதராக நியமித்த முடிவைத் தொடர்ந்து, பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மேலும் பல கேள்விகளை எதிர்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2009 ஆம் ஆண்டு வணிகச் செயலாளராக இருந்தபோது, குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு சந்தை உணர்திறன் கொண்ட அரசாங்கத் தகவல்களை வழங்கியதாக பீட்டர் மண்டேல்சன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து, பொலிஸார் குற்றவியல் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து மண்டேல்சன் நேரடியாக கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் அவர் எந்த சட்டவிரோத செயலிலும் ஈடுபடவில்லை என்றும், நிதி ஆதாயம் காரணமாக செயல்படவில்லை என்றும் கூறுகிறார்.
பிரதமரின் கேள்வி நேரத்திற்குப் பிறகு, மண்டேல்சனை தூதராக நியமிப்பதற்கு முன் மேற்கொள்ளப்பட்ட சோதனை (vetting) நடைமுறைகள் குறித்து தகவல்களை வெளியிட கன்சர்வேடிவ் கட்சி அழுத்தம் கொடுக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, தொழிலாளர் கட்சியை விட்டு விலகியதைத் தொடர்ந்து, பீட்டர் மண்டேல்சன் பிரபுக்கள் சபையிலிருந்து ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், இதுகுறித்து அரசு எச்சரிக்கையுடன் தகவல்களை வெளியிடும் என்றும் கூறப்படுகிறது.
