மஹிந்தானந்த அளுத்கமகே நீதிமன்றில் முன்னிலை

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், சீன நிறுவனமொன்றிலிருந்து தரமற்ற கரிம உரங்களை கப்பலில் இறக்குமதி செய்த வழக்கில் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி, இன்று திங்கட்கிழமை (19) வழக்கை விசாரிக்க அவரது சட்டத்தரணிகள் சீராக்கல் மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.