
பாலஸ்தீன நடவடிக்கை குழு மீதான தடை நீக்கம்
பாலஸ்தீன நடவடிக்கை (Palestine Action) என்ற பாலஸ்தீன ஆதரவு பிரச்சாரக் குழுவை பயங்கரவாத அமைப்பாக பிரித்தானிய அரசாங்கம் தடை செய்தது சட்டவிரோதமானது என்று லண்டன் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தொடர்புடைய குழுவின் நிறுவனர் மேல்முறையீடு செய்த வழக்கில் நேற்று லண்டன் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் பாலஸ்தீன நடவடிக்கை குழு இவ்வாறு தடைசெய்யப்பட்டிருந்தது.
இஸ்ரேலுடன் தொடர்புடைய பாதுகாப்பு நிறுவனங்களை அதிகளவில் குறிவைத்து சேதம் ஏற்படுத்திய நிலையிலேயே அரசாங்கத்தால் இவ்வாறு பாலஸ்தீன நடவடிக்கை குழுவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
