நிதி நெருக்கடி – அமெரிக்க தூதரகத்தின் சமூக ஊடக புதுப்பிப்புகள் கட்டுப்பாடு

நிதி நெருக்கடி – அமெரிக்க தூதரகத்தின் சமூக ஊடக புதுப்பிப்புகள் கட்டுப்பாடு

அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி ஒதுக்கீட்டு குறைபாட்டினால், அமெரிக்க மத்திய அரசு ஓரளவு மூடப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது பேஸ்புக் பக்கத்தில் வழக்கமான புதுப்பிப்புகளை தற்காலிகமாக கட்டுப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

தூதரகம் வெளியிட்ட பேஸ்புக் பதிவில், முழுமையான செயல்பாடுகள் மீண்டும் தொடங்கும் வரை அவசர மற்றும் பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் மட்டுமே பகிரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் வழக்கமான தகவல் புதுப்பிப்புகள் நிறுத்தி வைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, நிதி பற்றாக்குறை இருந்தாலும், அமெரிக்காவிலும் இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளிலும் உள்ள அமெரிக்க தூதரகங்களில் திட்டமிடப்பட்ட கடவுச்சீட்டு மற்றும் விசா சேவைகள் அனுமதிக்கும் போது தொடரும் என தூதரகம் தெரிவித்துள்ளது.

தூதரக சேவைகள் மற்றும் அதன் செயல்பாட்டு நிலை குறித்து புதிய தகவல்களை அறிந்து கொள்ள travel.state.gov இணையதளத்தை பார்வையிடுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க காங்கிரஸ் நிதி சட்டத்தை நிறைவேற்றத் தவறும்போது, அரசாங்கத்தின் அத்தியாவசியமற்ற சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்படுவதால் இவ்வாறான நிதி ஒதுக்கீட்டு குறைபாடு ஏற்படுகிறது. இவ்வாறான நிலையில் உலகின் பல பகுதிகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களும் இதேபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )