ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் – இருவர் கைது

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் – இருவர் கைது

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளது.

இந்த இரண்டு சந்தேக நபர்களும் நேற்று (01) நவகத்தேகம மற்றும் எலயாபத்துவ பொலிஸ் பிரிவுகளில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நவகத்தேகம மற்றும் உலுக்குளம் பிரதேசங்களைச் சேர்ந்த 42 மற்றும் 46 வயதுடைய இராணுவப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்ற இரண்டு வீரர்கள் ஆவர்.

குற்றப் புலனாய்வுத் துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )