கெஹெல்பத்தர குழுவினருக்கு 90 நாட்கள் தடுப்பு காவல்

கெஹெல்பத்தர குழுவினருக்கு 90 நாட்கள் தடுப்பு காவல்

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இந்த நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட குற்றவியல் கும்பலைச் சேர்ந்த ஐந்து பேர் 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத ஒடுக்குமுறைச் சட்டத்தின் கீழ் அவர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும் என்று குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களும் கடந்த சனிக்கிழமை இந்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.

அவர்களில் மூவர் தற்போது குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் உள்ளனர், மேலும் இருவர் மேற்கு வடக்கு குற்றப் பிரிவின் காவலில் உள்ளனர்.

குற்றவாளிகளான மண்டினு பத்மசிறி பெரேரா எனும் கெஹல்பத்தர பத்மே, நிலங்க சம்பத் சில்வா எனும் பாணதுர நிலங்க மற்றும் ஷாலிந்த மதுஷன் பெரேரா எனும் கமாண்டோ சாலிந்த ஆகியோர் விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், லஹிரு மதுசங்க எனும் தெம்பிலி லஹிரு மற்றும் பிரசங்கா எனும் பக்கோ சமன் என்ற குற்றவாளிகள் மேற்கு வடக்கு குற்றப் பிரிவின் காவலில் உள்ளனர்.

Share This