குப்பைகளால் கழிவு நகராக மாறியுள்ள கண்டி

குப்பைகளால் கழிவு நகராக மாறியுள்ள கண்டி

ஸ்ரீ தலதா மாளிகையில்  புனித தந்த தாது கண்காட்சியை பார்வையிட இலட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருப்பதால், அதிகரித்து வரும் கழிவுகளை அகற்றுவதில் கண்டி நகரம் கடுமையான சிக்கலை எதிர்கொண்டுள்ளது.

நகரத்தின் தெருக்களில் குப்பைகள் சிதறிக்கிடக்கின்றன. பொலிதீன் பைகள், பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் உணவுப் பொதிகள் சாலைகளில் சிதறிக்கிடக்கின்றன.

நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள், தங்களுக்கு குப்பைகளை வீச சரியான இடங்கள் இல்லை எனக் கூறுகின்றனர். சிற்றுண்டிகள், தண்ணீர் போத்தல்கள் மற்றும் பிற பொருட்களைக் கொண்டு வருகின்றன.  ஆனால் கழிவுகளை அங்கேயே விட்டுவிடுகிறார்கள்.

தெருக்களில் மலம் கழித்த பொலிதீன் பைகள் மற்றும் சிறுநீர் நிரப்பப்பட்ட போத்தல்கள் சிதறிக்கிடப்பதாகவும், பாதைகளில் மலம் கழித்தல் மேற்கொள்ளப்படுவதாகவும் நகர்ப்புறவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This