ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சந்தித்த ஜூலி சாங்

இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சாங் இன்று (14) காலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
அதன்படி, ஜூலி சாங் இன்று (14) காலை 10 மணியளவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
சுமார் ஒன்றரை மணித்தியாலத்திற்கும் மேலாக அவர் அங்கு தரித்துள்ளமை தெரியவந்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்திற்கு வருகை தர வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஏற்ப அவர் அங்கு சென்றுள்ளார்.
இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சஞ்சீவ எதிரமான்ன, சீ.பீ. ரத்நாயக்க, ஜயந்த கெட்டகொட மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டீ.வீ. சானக்க ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இவ்வாறான பின்னணியில், இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சாங் நாட்டில் USAID-யின் செயல்பாடுகளை விசாரிக்க ஒரு நாடாளுமன்றத் தேர்வுக் குழு அமைப்பதைத் தடுக்க திரைக்குப் பின்னால் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இலங்கையில் USAID திட்டங்கள் குறித்த தடயவியல் விசாரணையைத் தடுக்கும் முயற்சிகளில் சங் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக இலங்கை அரசாங்கத்தின் தகவல் அறியும் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
USAID மூலம் வழங்கப்படும் உதவி நிதியைப் பயன்படுத்துவது தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆராய ஒரு விரிவான விசாரணை திட்டமிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன உறுதிப்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.