அமெரிக்க , இஸ்ரேலிய பல்கலைகழகங்களை தாக்குவோமென IRGC  எச்சரிக்கை

அமெரிக்க , இஸ்ரேலிய பல்கலைகழகங்களை தாக்குவோமென IRGC எச்சரிக்கை

மத்திய கிழக்கில் உள்ள இஸ்ரேலிய – அமெரிக்கப் பல்கலைக்கழகங்களைக் குறிவைக்கப் போவதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) எச்சரித்துள்ளது.

ஈரானின் தெஹ்ரானில் அமைந்துள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் மீதான தாக்குதலுக்குப் பின்னர் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும் முறையான இலக்குகளாகக் கருதப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது .

மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் அனைத்துப் பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் அண்மித்த பகுதிகளில் வசிப்பவர்கள் அந்த இடங்களை விட்டு வெளியேறுமாறு ஈரான் இஸ்லாமியப் புரட்சிகர பாதுகாப்புப் படை அறிவுறுத்தியுள்ளது.

பிராந்தியத்திலுள்ள அமெரிக்க நிறுவனங்கள் மீதான தாக்குதல்களைத் தவிர்க்க , ஈரான் பல்கலைக்கழகங்கள் மீதான குண்டுத் தாக்குதல்களை அமெரிக்கா கண்டிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கண்டனத்தை மார்ச் 30ஆம் திகதி ஈரான் நேரப்படி நண்பகல் 12:00 மணிக்கு முன்னதாக அமெரிக்கா தெரிவிக்க வேண்டும் எனவும் ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கின்றது .

 

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )