போர் நிறுத்தத்தை உறுதி செய்தது ஈரான்

போர் நிறுத்தத்தை உறுதி செய்தது ஈரான்

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையில் போர் தீவிரமடைந்திருந்த நிலையில், போர் நிறுத்தம் தொடங்கியதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி உறுதிப்படுத்தியுள்ளது.

உள்ளூர் நேரப்படி இன்று காலை 7.30க்கு போர் நிறுத்தம் தொடங்கியதாக ஈரானிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், “போர் நிறுத்த ஒப்பந்தம் இப்போது நடைமுறையில் உள்ளது. தயவுசெய்து அதை மீறாதீர்கள்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ட்ரூத் சோஷியலில் ஒரு பதிவில் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், இஸ்ரேல் போர் நிறுத்த திட்டத்தை பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

Share This