சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

நெடுந்தீவு கடற்பகுதியில் கைதான 07 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் அவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அவர்கள் பயணித்த இரண்டு படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )