சம்மாந்துறை பகுதியில் நரிகள் நடமாட்டம் அதிகரிப்பு

சம்மாந்துறை பகுதியில் நரிகள் நடமாட்டம் அதிகரிப்பு

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு மல்கம்பிட்டி பகுதிகளில் நரிகளின் நடமாட்டம் அதிகமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயல்வெட்டுக்கள் அல்லது அறுவடை முடிந்த வயற்பகுதிக்குள் நரிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

வயலின் அடிக்கட்டை எது? நரி எது? என்று தெரியாத உருமறைப்புடன் அப்பகுதியில் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றது.இவ்வாறான நரிகள் ஒரு சூழற்றொகுதியின் சமனிலைக்கு மிக முக்கியமானது.

நரிகள், மயில்கள் போன்ற பீடைகளைக் கட்டுப்படுத்தியும் மற்ற சிறு வேட்டையாடிகளின் குடித்தொகைகளை சமனிலைப்படுத்தியும் விவசாயிகளுக்கும் மக்களுக்கும் நன்மைகள் பயக்கின்றன என இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் உயிரியல் விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், பிரிவுத் தலைவருமான ஏ.எம்.றியாஸ் அகமட் குறிப்பிட்டுள்ளார்.

பாறுக் ஷிஹான்

Share This