டெல்​லி​யில் கடுமை​யான பனிமூட்​டம் – சென்னையில் விமான சேவைகள் தாமதம்

டெல்​லி​யில் கடுமை​யான பனிமூட்​டம் – சென்னையில் விமான சேவைகள் தாமதம்

இந்தியாவின் டெல்​லி​யில் கடுமை​யான பனிமூட்​டம் நில​வுவ​தால், சென்னை விமான நிலை​யத்​தில் விமான சேவைகளில் தாமதம் ஏற்​பட்​டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சில விமானங்கள், சென்​னை​யில் இருந்து ஹைத​ரா​பாத், பெங்​களூர் உள்​ளிட்ட விமான நிலை​யங்​களுக்​கும் செல்ல இருப்​ப​தால், அந்த சேவையிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

நேற்று அதி​காலை முதல் மதி​யம் வரை, டெல்​லி​யில் இருந்து சென்னை வரவேண்​டிய ஏர் இந்​தியா மற்​றும் இண்​டிகோ ஏர்​லைன்ஸ் 4 விமானங்கள், சுமார் ஒன்​றரை மணி நேரத்​தில் இருந்து 3 மணி நேரம் வரை தாமத​மாக சென்றடைந்ததாகவும் கூறப்படுகின்றது.

சென்​னை​யில் இருந்து டெல்​லி, பெங்​களூர், ஹைத​ரா​பாத் புறப்​பட்டு செல்ல வேண்​டிய இண்​டிகோ, ஏர் இந்​தியா விமானங்கள், சுமார் ஒரு மணி நேரத்​தில் இருந்து 4 மணி நேரம் வரை தாமத​மாக புறப்​பட்டு சென்​றதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

விமானங்கள் தாமதம் குறித்து பயணி​களுக்கு முறையான அறி​விப்பு கொடுக்​காத​தால், பயணி​கள் சிரமத்தை எதிர்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )