அனைத்து நெல் ஆலைகளையும் பதிவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை

அனைத்து நெல் ஆலைகளையும் பதிவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை

சிறிய, நடுத்தர மற்றும் பாரிய அளவிலான அனைத்து நெல் ஆலைகளையும் பதிவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்தார்.

அதற்கு தேவையான விண்ணப்பப் படிவங்களை அனைத்து பிரதேச செயலகங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தலைவர் தெரிவித்தார்.

நெல் கையிருப்பு தொடர்பான துல்லியமான தரவுகளைப் பெறும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக விவசாய அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

நெல் சந்தைப்படுத்தல் சபைச் சட்டத்தின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதன்படி, நெல் கையிருப்புகளை சேகரிக்கும் மக்கள் தொடர்பான முறையான தரவு அமைப்பு எதிர்காலத்தில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும், பதிவு செய்யப்படாத அரிசி ஆலைகளுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Share This