மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக எரிவாயு விலைகள் செங்குத்தாக உயர்வு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக எரிவாயு விலைகள் செங்குத்தாக உயர்வு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் எரிவாயு விலைகள் செங்குத்தாக உயர்ந்துள்ளன.

ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடுவதற்கு ஈரான் நடவடிக்கை எடுத்திருந்தது.

இதனால் குறித்த வழியூடான கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்ட தடங்கலாலும் ஏனைய பிற காரணிகளாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

உலக இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கை கட்டார் கொண்டுள்ளது.

இதில் பெரும்பாலானவை ஹோர்முஸ் நீரிணை வழியாகவே கடல் மார்க்கமாகப் போக்குவரத்து செய்யப்படுகின்றன.

கத்தாரின் முக்கிய வாடிக்கையாளர்கள் ஆசியாவில் இருந்தபோதிலும், அங்கு ஏற்படும் விநியோகத் தடை உலக சந்தையில் பெரும் போட்டியை உருவாக்கி விலையை உயர்த்தியுள்ளது.

அத்துடன் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இஸ்ரேலில் சில எரிவாயு உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டிருப்பது இந்த நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

ஐரோப்பாவில் குளிர்காலம் முடிவுக்கு வருவதால் எரிவாயு பயன்பாடு குறைந்தாலும், அங்குள்ள இருப்பு மிகவும் குறைவாக உள்ளது.

எதிர்வரும் கோடை காலத்தில் இந்த இருப்பை மீண்டும் நிரப்ப வேண்டியுள்ளதால், தற்போதைய விலை உயர்வு ஐரோப்பாவுக்கும் பெரும் சவாலாக அமையும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )