யாழில் எரிபொருள் தாங்கி சாரதி ஐஸ் போதைப் பொருளுடன் கைது

யாழில் எரிபொருள் தாங்கி சாரதி ஐஸ் போதைப் பொருளுடன் கைது

எரிபொருள் தாங்கி சாரதி ஐஸ் பொதைப் பொருளுடன் போதையில் வாகனம் செலுத்திய சாரதி நேற்று (08) சாவகச்சேரி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சங்குபிட்டி பகுதியில் சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்ட வீதிச்சோதனை நடவடிக்கையின் போது ஐஸ்போதைப்பொருளுடன் எரிபொருள் தாங்கி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்

முத்துராஜவெல பகுதியில் இருந்து யாழிற்கு எரிபொருள் ஏற்றிவந்த எரிபொருள் தாங்கியினை யாழ் மன்னார் வீதியில் சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் சோதனையிட்ட போது சாரதியிடம் இருந்து ஐஸ், கஞ்சா போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.

மேலும் சாரதி கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உற்படுத்திய நிலையில் சாரதி ஐஸ் மற்றும் கஞ்சா பயன்படுத்திய நிலையில் வாகனத்தை செலுத்தியமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

கைது செய்யப்பட்ட நபரை இன்று சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்தும் நடவடிக்கையை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This