அநுர அரசில் வாகன ஏல விற்பனையில் மோசடி

வாகன ஏல விற்பனையில் பாரிய மோடிசகள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான குற்றம் சுத்தியுள்ளார்.
கடந்த அரசாங்கங்களின் காலத்தில் அரச நிறுவனங்களுக்கு கொள்வனவு செய்யப்பட்ட அதிசொகுசு வாகனங்களுக்கு பராமரிப்பு செலவு அதிகமாக இருப்பதால் அவற்றில் தேவையற்ற வாகங்களை அரசாங்கம் ஏலத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த வாகனங்களில் ஒரு தொகுதி கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் மோசடி இடம்பெற்றுள்ளதாக ஜகத் விதான எம்.பி குற்றம் சுமத்தியுள்ளார்.
குறிப்பாக இந்த ஏல விற்பனை வெளிப்படைத் தன்மையுடன் இடம்பெறவில்லை என்பதுடன், 450 இலட்சம் பெறுமதியான வாகனங்கள் 150 இலட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. பகிரங்க ஏலத்தில் அனைவருக்கும் அறிவித்து இதனை செய்திருந்தால் பாரிய இலாபத்தை அரசாங்கம் பெற்றிருக்க முடியும்.
ஆனால், அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்குள் வாகனங்களை பகிர்ந்துக்கொள்ள இவ்வாறு செய்துள்ளனர். இது பாரிய மோசடியாகும். தற்போது அந்த வாகனங்கள் எந்த ‘சேல்’ களில் உள்ளன எனத் தெரியவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.