கோட்டை – காங்கேசன்துறை அதிவேக ரயில் சேவை மீண்டும் தினசரி இயங்கும் என அறிவிப்பு

கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை அதிவேக ரயில் சேவை இந்த மாதத்திற்குள் மீண்டும் தினசரி இயங்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த சேவை தற்போது வார இறுதி நாட்களில் மட்டுமே இயக்கப்படும் நிலையில் தினசரி இயக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திறன் மேம்பாடுகளுடன், தினசரி சேவைகள் இம்மாதத்துக்குள் மீண்டும் தொடங்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.