மொறட்டுவ மாநகர சபையின் முன்னாள் மேயருக்கு பிணை

மொறட்டுவ மாநகர சபையின் முன்னாள் மேயர் சமன் லால் பெர்னாண்டோவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது .
2013 ஆம் ஆண்டு துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் மொறட்டுவ மாநகர சபைக்கு ஒதுக்கப்பட்ட 105 மில்லியன் ரூபாவை தனது நெருங்கிய ஒப்பந்ததாரர்கள் எட்டு பேருக்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கடந்த 10 ஆம் திகதி கைது செய்யப்பட்டு பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.