
வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட சேதங்கள் – 266 குள நீர்வழிப் பாதைகளை மதிப்பிடும் பணிகள் ஆரம்பம்
சமீபத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட சேதங்களைத் தொடர்ந்து, 266 குள நீர்வழிப் பாதைகளை மதிப்பிடும் ஆய்வை மேற்கொள்ள நீர்ப்பாசனத் திணைக்களம் ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் மேலாண்மை இயக்குநர், கூறுகையில், ஆய்வுத் திட்டம் அடுத்த மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
துறையின் கீழ் உள்ள முக்கிய நதிப் படுகைகள், நடுத்தர அளவிலான ஆறுகள் மற்றும் சேமிப்புத் தொட்டிகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும்.
விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள தேவையான இடங்களில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம்(NBRO) மற்றும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் உதவியைப் பெற முடியும் என்றும் அவர் கூறினார்.
வெள்ளப்பெருக்கு காரணமாக பல சிறிய நீர்த்தேக்கங்கள் மணலால் நிரம்பியுள்ளதாகவும், சரியான நிலை மதிப்பீடுகள் முடிந்த பின்னரே மணல் அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.
பிரதான நீர்த்தேக்கங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் காணப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட 218 நதி நீர்த்தேக்கங்கள் மற்றும் குளக் கரைகளுக்கு ஏற்பட்ட சேதங்களை நீர்ப்பாசனத் திணைக்களம் ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளது.
மேலும் மறுசீரமைப்புப் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.
சேதமடைந்த பிரதான ஆறுகள் மற்றும் குளக் கரைகளை பழுதுபார்ப்பதற்காக அரசாங்கம் 23 பில்லியன் ரூபாவிற்கு அதிகமாக ஒதுக்கியுள்ளது.
வரவிருக்கும் பெரும்போகத்திற்கு சரியான நேரத்தில் தண்ணீர் திறந்துவிடப்படுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
