இந்தியாவில் இருந்து இலங்கை சென்ற விமானத்தில் கோளாறு

இந்தியாவில் இருந்து இலங்கை சென்ற விமானத்தில் கோளாறு

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு செல்ல தயாரான விமானத்தில் ஏற்பட்ட கோளாறு விமானியின் சாதுர்யத்தினால் தவிர்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்ல தயாரான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்திலேயே கோளாறு ஏற்பட்டுள்ளது.

விமானம் புறப்படுவதற்கு முன்னர் கோளாறினை விமானி கண்டுபிடித்துள்ள நிலையில், பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுமார் 12 மணி நேர தாமதத்தின் பின்னர் மற்றுமொரு விமானம் மூலம் பயணிகள் கட்டுநாயக்க விமானம் நோக்கி சென்றுள்ளனர்.

குறித்த விமானம் 262 பயணிகளுடன் கொழும்பு நோக்கி பயணிக்க தயாராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This