
வர்த்தக நிலையங்களில் தீப்பரவல் – கொழும்பு , கண்டி வீதியின் கிரிபத்கொடை ஊடான போக்குவரத்து தடை
கிரிபத்கொடையில் இரண்டு வர்த்தக நிலையங்களில் இன்று (30) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 05 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கொழும்பு – கண்டி வீதியின் கிரிபத்கொடை பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள 2 வர்த்தக நிலையங்களில் தீப்பரவல் ஏற்பட்ட நிலையில், அந்த பகுதி ஊடான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
CATEGORIES இலங்கை
