<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Wed, 17 Jun 2026 10:05:36 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Oruvan.com</title>
	<link>https://oruvan.com/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>புதிய அரசியலமைப்புக்கான  தேவை இலங்கையில் உள்ளதா?</title>
		<link>https://oruvan.com/is-there-a-need-for-a-new-constitution-in-sri-lanka/</link>
					<comments>https://oruvan.com/is-there-a-need-for-a-new-constitution-in-sri-lanka/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Wed, 17 Jun 2026 10:05:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[புதிய அரசியலமைப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49516</guid>

					<description><![CDATA[<p>இலங்கை குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்டு ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இந்த நீண்ட காலப் பயணத்தின் பின்னரும், நாட்டின் அரசியல் அமைப்பும் ஆட்சிமுறையும் எதிர்கொண்டுவரும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு நிலையானத் தீர்வுகள் இன்னமும் எட்டப்படவில்லை. அதிகாரத்தின் மையப்படுத்தல், ஜனநாயக நிறுவனங்களின் பலவீனம், இனங்களுக்கு இடையிலான நம்பிக்கையின்மை, சமூக அநீதி, பொருளாதார சமத்துவமின்மை மற்றும் பொறுப்புக்கூறல் இல்லாத ஆட்சி ஆகியன தொடர்ந்தும் நாட்டை சவாலுக்கு உள்ளாக்கி வருகின்றன. இலங்கையின் அரசியலமைப்புச் சரித்திரத்தைப் பார்த்தால், 1972 மற்றும் 1978 அரசியலமைப்புகள் பல மாற்றங்களை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/is-there-a-need-for-a-new-constitution-in-sri-lanka/">புதிய அரசியலமைப்புக்கான  தேவை இலங்கையில் உள்ளதா?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கை குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்டு ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இந்த நீண்ட காலப் பயணத்தின் பின்னரும், நாட்டின் அரசியல் அமைப்பும் ஆட்சிமுறையும் எதிர்கொண்டுவரும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு நிலையானத் தீர்வுகள் இன்னமும் எட்டப்படவில்லை.</p>
<p>அதிகாரத்தின் மையப்படுத்தல், ஜனநாயக நிறுவனங்களின் பலவீனம், இனங்களுக்கு இடையிலான நம்பிக்கையின்மை, சமூக அநீதி, பொருளாதார சமத்துவமின்மை மற்றும் பொறுப்புக்கூறல் இல்லாத ஆட்சி ஆகியன தொடர்ந்தும் நாட்டை சவாலுக்கு உள்ளாக்கி வருகின்றன.</p>
<p>இலங்கையின் அரசியலமைப்புச் சரித்திரத்தைப் பார்த்தால், 1972 மற்றும் 1978 அரசியலமைப்புகள் பல மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தாலும், அவை மக்களின் ஜனநாயக எதிர்பார்ப்புகளை முழுமையாகப் பூர்த்தி செய்யத் தவறியுள்ளன.</p>
<div id="attachment_49518" style="width: 1267px" class="wp-caption alignnone"><img fetchpriority="high" decoding="async" aria-describedby="caption-attachment-49518" class=" wp-image-49518" src="https://oruvan.com/wp-content/uploads/2026/06/sri_lanka_cn_july_19.jpg" alt="" width="1257" height="938" /><p id="caption-attachment-49518" class="wp-caption-text">Constitution. Illustration: Ratna Sagar Shrestha.THT</p></div>
<p>குறிப்பாக 1978ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை, அதிகாரங்களை ஒரே நபரிடம் குவித்து வைத்ததன் மூலம் ஜனநாயக நிறுவனங்களின் சுயாதீனத்தையும் நாடாளுமன்றத்தின் முக்கியத்துவத்தையும் குறைத்தது.</p>
<p>நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஆரம்பத்தில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், நடைமுறையில் அது அதிகாரத் துஷ்பிரயோகம், குடும்ப ஆட்சி, ஊழல் மற்றும் அரசியல் பொறுப்பின்மைக்கு வழிவகுத்தது. கடந்த பல ஆண்டுகளாக ஏற்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் இந்த விமர்சனங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளன.</p>
<p>இந்தப் பின்னணியில்தான் 2022ஆம் ஆண்டு உருவான மக்கள் எழுச்சி இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. பொருளாதார நெருக்கடி உச்சத்தை எட்டிய காலகட்டத்தில், இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து அரசியல் மாற்றத்திற்காக குரல் கொடுத்தனர்.</p>
<p><img decoding="async" class="alignnone  wp-image-49521" src="https://oruvan.com/wp-content/uploads/2026/06/Screenshot-2026-06-17-153434.png" alt="" width="1280" height="803" /></p>
<p>இது வெறும் எரிபொருள், மின்சாரம் அல்லது அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறைக்கு எதிரானப் போராட்டமாக மட்டுமல்லாமல், பல தசாப்தங்களாக நிலவி வந்த அரசியல் கலாசாரத்திற்கெதிரான மக்கள் தீர்ப்பாகவும் அமைந்தது.</p>
<p>குறித்த போராட்டம் வெளிப்படுத்திய மிக முக்கியமான செய்தி, மக்கள் இனிமேல் அதிகாரத்தின் மையப்படுத்தலையும், குடும்ப ஆட்சியையும், ஊழலையும் ஏற்கத் தயாராக இல்லை என்பதாகும். அதிகாரம் மக்களிடமிருந்து உருவாகிறது. எனவே, அது மக்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டியது அவசியம் என்ற ஜனநாயகக் கோட்பாட்டை அந்தப் போராட்டம் மீண்டும் வலியுறுத்தியது.</p>
<p>இந்த மக்கள் எழுச்சியின் அரசியல் தாக்கம் 2024ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தல்களிலும் தெளிவாகப் பிரதிபலித்தது. பழைய அரசியல் நடைமுறைகளை நிராகரித்த வாக்காளர்கள், மாற்றத்திற்கான வாக்குறுதிகளை முன்வைத்த புதிய அரசியல் சக்திகளுக்கு ஆதரவு வழங்கினர். குறிப்பாக அரசியலமைப்புச் சீர்திருத்தம், ஊழல் ஒழிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவை தேர்தல் விவாதங்களின் மையமாக மாறின.</p>
<p>இந்நிலையில், இலங்கைக்கு வெறும் அரசியலமைப்புத் திருத்தங்கள் மட்டுமே போதுமானதாக இருக்காது. ஏனெனில், கடந்த காலத்தில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. எனவே, நாட்டிற்கு தேவையானது “சீர்திருத்த அரசியலமைப்பு” அல்ல மாறாக ஒரு “மாற்றத்தை ஏற்படுத்தும் அரசியலமைப்பு” ஆகும்.</p>
<p>அத்தகைய புதிய அரசியலமைப்பின் முதல் நோக்கம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்து, நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாக இருக்க வேண்டும். அதிகாரங்கள் ஒரே நபரிடம் குவியாமல், பல நிறுவனங்களுக்கிடையில் சமநிலையுடன் பகிரப்பட வேண்டும். இதன்மூலம் அதிகாரத் துஷ்பிரயோகத்தைத் தடுக்க முடியும்.</p>
<p><img decoding="async" class="alignnone  wp-image-49520" src="https://oruvan.com/wp-content/uploads/2026/06/SI-SP18-02-11-PDC.jpg" alt="" width="1291" height="996" /></p>
<p>அதேவேளை, நீதித்துறையின் சுயாதீனம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். எந்த அரசாங்கமும் அல்லது அரசியல் சக்தியும் சட்டத்திற்கு மேலானதாக இருக்க முடியாது என்பதைக் காட்டும் வகையில் அரசியலமைப்பின் மேலாதிக்கம் தெளிவாகப் பாதுகாக்கப்பட வேண்டும். நீதிமன்றங்களுக்கு அரசாங்க நடவடிக்கைகள் மற்றும் சட்டங்களை ஆய்வு செய்யும் அதிகாரம் வழங்கப்படுவது ஜனநாயக பாதுகாப்பின் முக்கிய அங்கமாகும்.</p>
<p>புதிய அரசியலமைப்பு மனித உரிமைகள் பாதுகாப்பிற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். கருத்துரிமை, மதச்சார்பற்ற சுதந்திரம், சமத்துவம், சமூக நீதி, பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் போன்றவை வெறும் அறிவிப்புகளாக இல்லாமல், நீதிமன்றங்கள் மூலம் நடைமுறைப்படுத்தக்கூடிய உரிமைகளாக இருக்க வேண்டும்.</p>
<p>இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிலையான தீர்வை உருவாக்குவதிலும் புதிய அரசியலமைப்புக்கு முக்கிய பங்கு உள்ளது. அதிகாரப் பகிர்வு என்பது ஒரு அரசியல் சலுகை அல்ல. அது பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தில் ஜனநாயக நிர்வாகத்தின் அடிப்படைத் தேவையாகும். மாகாணங்கள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளுக்குப் பொருத்தமான அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரங்கள் வழங்கப்படுவதன் மூலம் மக்கள் தங்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் முடிவுகளில் நேரடியாகப் பங்கேற்கும் வாய்ப்பு உருவாகும்.</p>
<p>குறிப்பாக, இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களினதும் கருத்துக்களையும் பங்களிப்புகளையும் உள்ளடக்கியதாகவே புதிய அரசியலமைப்பு அமைய வேண்டும் என்பது தமிழ் மக்களின் நீண்டகால நிலைப்பாடாக இருந்து வருகின்றது. கடந்த காலத்தில் உருவாக்கப்பட்ட 1972 மற்றும் 1978 அரசியலமைப்புகள் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுடன் போதுமான கலந்துரையாடல்கள் இன்றி உருவாக்கப்பட்டதாக பல அரசியல் ஆய்வாளர்களும் சமூக பிரதிநிதிகளும் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p>
<p>அந்த அரசியலமைப்புகளின் பல அம்சங்கள் சிறுபான்மை மக்களிடையே அரசியல் அதிருப்தியையும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தின. குறிப்பாக தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகள் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பான எதிர்பார்ப்புகள் புறக்கணிக்கப்பட்டதாகக் கருதப்பட்ட சூழலில், நாட்டில் இன முரண்பாடுகள் தீவிரமடைந்தன. பின்னர் சில தமிழ் இளைஞர் இயக்கங்கள் ஆயுதப் போராட்டப் பாதையைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணிகளில் இதுவும் ஒன்றாகக் குறிப்பிடப்படுகின்றது.</p>
<p>இந்த வரலாற்றுப் படிப்பினைகள் மீண்டும் நிகழக்கூடாது என்பதற்காகவே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் போது அனைத்து இனங்களும், மதங்களும், பிராந்தியங்களும் பிரதிநிதித்துவம் பெறும் பரந்த ஆலோசனைச் செயல்முறை முன்னெடுக்கப்பட வேண்டும். மக்கள் பங்கேற்பு, அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு, சிவில் சமூக அமைப்புகளின் கருத்துக்கள் மற்றும் சிறுபான்மை சமூகங்களின் அபிலாஷைகள் ஆகிய அனைத்தும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-49237" src="https://oruvan.com/wp-content/uploads/2026/04/684505538_1467410412095050_6208696751975192525_n.jpg" alt="" width="1600" height="1452" /></p>
<p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், புதிய அரசியலமைப்பொன்றை தமது ஆட்சிக்காலத்தில் கட்டாயம் கொண்டுவருவதாக தேர்தல் மேடைகளில் உறுதியளித்திருந்தது. நல்லாட்சி, ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் மக்களின் அதிகாரத்தை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் ஒரு பகுதியாக இந்த வாக்குறுதி முன்வைக்கப்பட்டது.</p>
<p>ஆனால், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளை நெருங்கும் நிலையிலும், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் இதுவரை தென்படவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. அரசியலமைப்பு உருவாக்கம் என்பது நீண்டகால ஆலோசனைகள், சட்ட வரைவுகள், நாடாளுமன்ற விவாதங்கள் மற்றும் மக்கள் அங்கீகாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய சிக்கலான செயல்முறையாகும். எனவே, இந்தப் பணியை தாமதமின்றி ஆரம்பிப்பது அவசியமாகியுள்ளது.</p>
<p>இலங்கையின் அரசியல் நடைமுறையைப் பொறுத்தவரை, ஒரு அரசாங்கம் தனது பதவிக் காலத்தின் மூன்றரை ஆண்டுகளை கடந்தவுடன் அடுத்த பொதுத் தேர்தலை மையப்படுத்திய அரசியல் நடவடிக்கைகள் தீவிரமடையத் தொடங்குகின்றன. அதனால், ஆட்சியின் இறுதிக் காலத்தில் இத்தகைய முக்கியமான அரசியலமைப்பு மாற்றங்களை முன்னெடுப்பது மிகவும் கடினமாக மாறக்கூடும்.</p>
<p>மேலும், இலங்கையின் தேசிய அரசியலில் இன அரசியல் மற்றும் பேரினவாத சிந்தனைகள் இன்னமும் தாக்கத்தை செலுத்தும் சக்திகளாகவே உள்ளன. பல்வேறு அரசியல் முடிவுகள் தேர்தல் கணக்கீடுகளின் அடிப்படையில் எடுக்கப்படும் சூழலில், புதிய அரசியலமைப்புக்கான துணிச்சலானத் தீர்மானங்களை எடுப்பது காலப்போக்கில் மேலும் சிரமமாகலாம்.</p>
<p>எனவே, தற்போதைய அரசாங்கத்துக்கு நடைமுறையில் இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே பயனுள்ள காலமாக எஞ்சியுள்ளதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். அந்தக் காலப்பகுதிக்குள் அரசியலமைப்புத் தொடர்பான ஆலோசனைகள், வரைவுப் பணிகள் மற்றும் சட்ட நடைமுறைகள் அனைத்தும் இறுதிப்படுத்தப்பட வேண்டும்.</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone  wp-image-10468" src="https://oruvan.com/wp-content/uploads/2025/02/parliament-of-sri-lanka-1-1.jpg" alt="" width="1292" height="727" srcset="https://oruvan.com/wp-content/uploads/2025/02/parliament-of-sri-lanka-1-1.jpg 800w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/parliament-of-sri-lanka-1-1-400x225.jpg 400w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/parliament-of-sri-lanka-1-1-650x366.jpg 650w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/parliament-of-sri-lanka-1-1-250x141.jpg 250w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/parliament-of-sri-lanka-1-1-768x432.jpg 768w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/parliament-of-sri-lanka-1-1-150x84.jpg 150w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/parliament-of-sri-lanka-1-1-50x28.jpg 50w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/parliament-of-sri-lanka-1-1-100x56.jpg 100w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/parliament-of-sri-lanka-1-1-200x113.jpg 200w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/parliament-of-sri-lanka-1-1-300x169.jpg 300w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/parliament-of-sri-lanka-1-1-350x197.jpg 350w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/parliament-of-sri-lanka-1-1-450x253.jpg 450w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/parliament-of-sri-lanka-1-1-500x281.jpg 500w, https://oruvan.com/wp-content/uploads/2025/02/parliament-of-sri-lanka-1-1-550x309.jpg 550w" sizes="auto, (max-width: 1292px) 100vw, 1292px" /></p>
<p>இல்லாவிட்டால், பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் அனைத்து இன மக்களினதும் ஆதரவுடனும் பெரும் எதிர்பார்ப்புடனும் ஆட்சிக்கு வந்துள்ள இந்த அரசாங்கம் தனது முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றை நிறைவேற்றத் தவறியதாக மக்கள் மத்தியில் விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடலாம். அதுவே அடுத்தத் தேர்தலில் அரசாங்கத்தின் மக்கள் ஆதரவில் குறிப்பிடத்தக்க சரிவை ஏற்படுத்தும் காரணியாகவும் அமையக்கூடும்.</p>
<p>இதேவேளை, எதிர்கால அரசியலமைப்பு ஒரு நிலையான சட்ட ஆவணமாக மட்டுமல்லாமல், காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளக்கூடிய “வாழும் ஆவணமாக” அமைய வேண்டும். சமூக மாற்றங்கள், தொழிநுட்ப வளர்ச்சிகள், பொருளாதார சவால்கள் மற்றும் புதிய ஜனநாயக எதிர்பார்ப்புகளுக்கு பதிலளிக்கும் திறன் அதற்கு இருக்க வேண்டும்.</p>
<p>இன்றைய இலங்கை ஒரு வரலாற்றுச் சந்திப்புப் புள்ளியில் நிற்கிறது. கடந்த காலத்தின் தோல்விகளையும் தவறுகளையும் மீண்டும் தொடர்வதா, அல்லது புதிய ஜனநாயகப் பாதையைத் தேர்ந்தெடுப்பதா என்ற முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மக்கள் எழுச்சியும் தேர்தல் முடிவுகளும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ள செய்திதான் நாட்டிற்கு புதிய அரசியலமைப்பொன்று அனைத்தின மக்களினதும் பங்களிப்புடன் அவசியம் என்பது.</p>
<p>எனவே, மக்களின் இறையாண்மை உண்மையாக நிலைநிறுத்தப்படும், அதிகாரம் பொறுப்புக்கூறலுடன் செயல்படும், சமூக நீதி உறுதிப்படுத்தப்படும், அனைத்து இனங்களும் சம உரிமையுடன் வாழும் ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணியை இந்த ஆரம்பிக்க வேண்டும் என்பதே ஜனநாயகத்தையும் மக்கள் ஆட்சியையும் நேசிப்பவர்களின் எதிர்பார்ப்பாகும்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/is-there-a-need-for-a-new-constitution-in-sri-lanka/">புதிய அரசியலமைப்புக்கான  தேவை இலங்கையில் உள்ளதா?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://oruvan.com/is-there-a-need-for-a-new-constitution-in-sri-lanka/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஈரான் &#8211; அமெரிக்க போர் முடிவுக்கு வந்தது! டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/iran-us-war-is-over-donald-trumps-announcement/</link>
					<comments>https://oruvan.com/iran-us-war-is-over-donald-trumps-announcement/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 15 Jun 2026 00:18:27 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[donald trum]]></category>
		<category><![CDATA[Iran War]]></category>
		<category><![CDATA[war]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49510</guid>

					<description><![CDATA[<p>போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான ஈரானுடனான ஒப்பந்தம் நிறைவடைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்நிலையில் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி, ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகை விலக்கிக்கொள்ளப்பட்டதாகவும் அறிவித்துள்ளார். உலகெங்கிலும் உள்ள கப்பல்கள் தங்களது செயல்பாடுகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும், எண்ணெய் ஏற்றுமதியை மீட்டெடுப்பதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து, ஹோர்முஸ் நீரிணை எதிர்வரும் வெள்ளிக்கிழமை மீளவும் திறக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/iran-us-war-is-over-donald-trumps-announcement/">ஈரான் &#8211; அமெரிக்க போர் முடிவுக்கு வந்தது! டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான ஈரானுடனான ஒப்பந்தம் நிறைவடைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.</p>
<p>இந்நிலையில் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி, ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகை விலக்கிக்கொள்ளப்பட்டதாகவும் அறிவித்துள்ளார்.</p>
<p>உலகெங்கிலும் உள்ள கப்பல்கள் தங்களது செயல்பாடுகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும், எண்ணெய் ஏற்றுமதியை மீட்டெடுப்பதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.</p>
<p>போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து, ஹோர்முஸ் நீரிணை எதிர்வரும் வெள்ளிக்கிழமை மீளவும் திறக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p>
<p>இரு நாடுகளுக்கும் இடையில் மத்தியஸ்தராகச் செயல்பட்டு வந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலையில் ஒப்பந்தம் எட்டப்பட்டதை உறுதி செய்திருந்தார்.</p>
<p>இந்த ஒப்பந்தம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திடப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>எவ்வாறாயினும், ஒப்பந்தத்தின் துல்லியமான நிபந்தனைகள் வெளியாகவில்லை.</p>
<p>எனினும், லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் முடிவுக்குக் கொண்டுவர இந்த ஒப்பந்தம் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த அறிவிப்பு வெளியானதும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இன்று காலை நேர வர்த்தகத்தில் பிரென்ட் கச்சா எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்கள் நான் வீதம் சரிந்த, அதே நேரத்தில் அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் 4.6 வீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்தது.</p>
<p>இதேவேளை, ஈரான் தனது அணுசக்தித் திட்டம் தொடர்பாக தெளிவான நடவடிக்கைகளை எடுத்தால், அதன் மீதான தடைகளை நீக்கத் தயாராக இருப்பதாக நான்கு ஐரோப்பிய நாடுகள் அறிவித்துள்ளனர்.</p>
<p>இதன்படி, ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெறக்கூடாது என இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாட்டின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.</p>
<p>இந்த நோக்கத்திற்காக அமெரிக்கா, ஈரான் மற்றும் சர்வதேச அணுசக்தி முகமையுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.</p>
<p>மேலும் ஹோர்முஸ் நீரிணையை கட்டுப்பாடின்றி திறக்கக் கோருவதோடு, லெபனானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் உறுதிப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/iran-us-war-is-over-donald-trumps-announcement/">ஈரான் &#8211; அமெரிக்க போர் முடிவுக்கு வந்தது! டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://oruvan.com/iran-us-war-is-over-donald-trumps-announcement/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஆயுத சூப்பர் மார்க்கெட்டும் முள்ளிவாய்க்கால் பேரழிவும்  கொலம்பகேயின் வாக்குமூலத்தால் அம்பலமாகும் சீன முகம்</title>
		<link>https://oruvan.com/mullivaikkal-disaster-former-navy-chief-exposes-chinas-weapons-supermarket-conspiracy/</link>
		
		<dc:creator><![CDATA[Rasmila]]></dc:creator>
		<pubDate>Mon, 08 Jun 2026 07:18:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA["Take Weapons Now]]></category>
		<category><![CDATA[Pay Later" – Admiral Colombage Strips China’s Deadly Mask in Eelam Tamil Genocide]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[போர்]]></category>
		<category><![CDATA[முள்ளிவாய்க்கால்]]></category>
		<category><![CDATA[வடக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49501</guid>

					<description><![CDATA[<p>ஈழத்தமிழினத்தின் வரலாற்றைச் சோகமயமாக மாற்றிய முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னணியில், சர்வதேச விதிகளைப் புறந்தள்ளி சீனா எவ்வாறு ஒரு ‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’ போலச் செயற்பட்டது என்பதை இலங்கைக் கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஜயநாத் கொலம்பகேயின் அண்மைய உரை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றழிக்கப்பட்டு, ஈழத்தமிழினத்தின் வரலாறே குருதியால் எழுதப்பட்டதன் பின்னணியில், உலக வல்லரசுகளின் புவிசார் அரசியல் சதுரங்க ஆட்டம் இருந்தது என்பது உலகறிந்த உண்மை. ஆயினும், தமிழினப் படுகொலைக்குச் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/mullivaikkal-disaster-former-navy-chief-exposes-chinas-weapons-supermarket-conspiracy/">ஆயுத சூப்பர் மார்க்கெட்டும் முள்ளிவாய்க்கால் பேரழிவும்  கொலம்பகேயின் வாக்குமூலத்தால் அம்பலமாகும் சீன முகம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஈழத்தமிழினத்தின் வரலாற்றைச் சோகமயமாக மாற்றிய முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னணியில், சர்வதேச விதிகளைப் புறந்தள்ளி சீனா எவ்வாறு ஒரு ‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’ போலச் செயற்பட்டது என்பதை இலங்கைக் கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஜயநாத் கொலம்பகேயின் அண்மைய உரை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.</p>
<p>முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றழிக்கப்பட்டு, ஈழத்தமிழினத்தின் வரலாறே குருதியால் எழுதப்பட்டதன் பின்னணியில், உலக வல்லரசுகளின் புவிசார் அரசியல் சதுரங்க ஆட்டம் இருந்தது என்பது உலகறிந்த உண்மை. ஆயினும், தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச விதிகளைப் புறந்தள்ளி சீனா எவ்வாறு ‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’டைத் திறந்து பின்னணியில் நின்றது என்பதை, இலங்கை அரசாங்கத்தின் உயர் அதிகாரியாகவும் கடற்படையின் தளபதியாகவும் இருந்த அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தற்போது பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.</p>
<p>கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேசக் கல்வி மையத்தில் அண்மையில் அவர் ஆற்றிய உரை, தமிழ் மக்களின் நெஞ்சில் உள்ள ஆறாத வடுக்களை மீண்டும் கிளறியுள்ளதுடன், சீனாவின் உண்மையான கொடூர முகத்தையும் அம்பலப்படுத்தியுள்ளது.</p>
<p>இந்த வெற்றிக் களிப்புரை, சிங்களத் தேசத்தின் வீரத்தினால் போர் வெல்லப்படவில்லை, மாறாகச் சீனாவின் மூலோபாய வர்த்தக வெறியினாலும் அதன் நிபந்தனையற்ற இராணுவ ஆதரவினாலும்தான் ஈழ நிலம் பேரழிவிற்குள் தள்ளப்பட்டது என்ற கசப்பான உண்மையை உரத்துச் சொல்கிறது.</p>
<p><strong>‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’ சதித் திட்டம்</strong></p>
<p>2006–2009 வரையான காலப்பகுதியில், தமிழ் மக்கள் பாதுகாப்பு வளையங்களுக்குள் முடக்கப்பட்டிருந்த வேளையில், இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகள் ‘பேரழிவு ஆயுதங்களை’ வழங்க மறுத்துத் தடைகளை விதித்திருந்தன. &#8220;பேரழிவு ஆயுதங்கள் இல்லாமல் எவ்வாறு ஒரு போரை எதிர்கொண்டு எதிரிகளை அழிக்க முடியும்?&#8221; என்று கொலம்பகே தனது உரையில் கேலியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.</p>
<p>இலங்கை இராணுவம் திணறிய அந்த இக்கட்டான தருணத்தில்தான், சீனா கொழும்பு மற்றும் காலித் துறைமுகங்களுக்குள் தனது சொந்தப் பாதுகாப்புக் கிடங்குகளை அமைத்து ஆயுத விநியோகத்தை முன்னெடுத்தது.</p>
<p>&#8220;இது ஒரு ஷொப்பிங் பட்டியலை எடுத்துக் கொண்டு ஆயுத சூப்பர் மார்க்கெட்டுக்குச் செல்வது போன்றதாகும். நீங்கள் அங்கு சென்று உங்களுக்குத் தேவையான ஆயுதங்களைச் சேகரித்து உடனடியாகப் போர்க்களத்தில் பயன்படுத்தலாம்&#8221; என்ற கொலம்பகேயின் வாக்குமூலம் அதிர்ச்சியளிக்கக்கூடியது.</p>
<p>முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களின் உடல்கள் சிதறிக்கொண்டிருந்தபோது, கொழும்புத் துறைமுகத்தில் சீனாவின் ஆயுதக் கிடங்குகளின் கதவுகள் அகலத் திறந்திருந்தன. தமிழ் மக்களின் மரணங்களை சீனா தனது புவிசார் அரசியல் சதுரங்கத்தின் இலாபக் கணக்காகவே பார்த்தது என்பதை இந்த வாக்குமூலம் அப்பட்டமாக நிரூபித்துள்ளது.</p>
<p><strong>அபிவிருத்தி என்ற மாயையும் திட்டமிட்ட உள்நுழைவும்</strong></p>
<p>போர் முடிவடைந்த 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் ஒரு நெடுஞ்சாலை கூட இருக்கவில்லை என்பதை கொலம்பகே தனது உரையில் வெளிப்படையாகச் சுட்டிக்காட்டியுள்ளார். போரினால் உலுக்கப்பட்டிருந்த இலங்கை, சர்வதேச சமூகத்திடமிருந்து நிதி உதவிகளைப் பெற முடியாமல் ஒரு வெறிச்சோடிய நிலையை எதிர்கொண்டது. இந்த உள்நாட்டுப் பலவீனத்தையே சீனா தனக்கான நுழைவாயிலாக மாற்றிக்கொண்டது.</p>
<p>இரண்டாயிரத்துப் பதினொன்று முதல் இரண்டாயிரத்துப் பதிமூன்று வரையான மிகக் குறுகிய காலப்பகுதிக்குள் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு &#8211; கட்டுநாயக்க நெடுஞ்சாலை, மத்தள விமான நிலையம் போன்ற பிரமாண்டமான திட்டங்களை சீனா முடுக்கிவிட்டது. இது ஏதோ இலங்கையின் மீதான அன்பினால் செய்யப்பட்ட முதலீடல்ல, மாறாகத் தென்னிலங்கையைத் தனது வர்த்தகக் கடன் பொறிக்குள் நிரந்தரமாகப் பூட்டி வைப்பதற்காகச் சீனா விரித்த மிக நுட்பமான பொருளாதார வலை என்பதை கொலம்பகேயின் உரை நமக்குத் தெளிவுபடுத்துகின்றது.</p>
<p><strong>‘பணம் பிறகு, பிணங்கள் இப்போது’</strong></p>
<p>&#8220;ஆயுதங்களை எடுத்துச் சென்று உடனடியாகப் பயன்படுத்துங்கள், பணத்தைப் பிறகு தாருங்கள்&#8221; என்று கொலம்பகே குறிப்பிடும் சீனாவின் இந்தச் சலுகை, இலங்கை அரசுக்கு வழங்கப்பட்ட வெறும் இராணுவக் கடன் அல்ல.</p>
<p>‘பொருட்களைப் பெற்றுக்கொண்டு பிறகு பணம் செலுத்துங்கள்’ என்ற சீனாவின் ஏற்பாடு, இலங்கை இராணுவத்திற்கு வழங்கப்பட்ட சலுகை அல்ல, அது தமிழ் இனத்தை முற்றாக அழிப்பதற்காக எழுதப்பட்ட மரண சாசனமாகும். தமிழ் மக்களைக் கொன்று குவிக்கச் சீனா செய்த இந்த ஆயுத முதலீடு, போருக்குப் பிந்தைய காலத்தில் பேரினவாத அரசாங்கத்தை முற்றாகத் தன்வசப்படுத்துவதற்கான ஒரு தந்திரோபாய நகர்வாகும்.</p>
<p>போர் முடிந்த மறுகணமே, இந்த ஆயுத விநியோக நிறுவனங்கள் ஒரே இரவில் ‘கட்டுமான நிறுவனங்களாக’ அவதாரமெடுத்தன. பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் கொன்றழிக்கப்பட்டுக் கிடந்தபோது, அந்தப் பிணங்களின் மீதுதான் சீனாவின் கொழும்புத் துறைமுக நகரமும், தெற்கு அதிவேக நெடுஞ்சாலைகளும் நுரைச்சோலை மின்நிலையமும் கட்டப்பட்டுள்ளன என்பதையும் கொலம்பகே தனது உரையின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.</p>
<p>இன்று இலங்கையில் பளபளக்கும் அதிவேக நெடுஞ்சாலைகளின் அடித்தளங்கள், தமிழ் மக்களின் குருதியினாலும் முள்ளிவாய்க்கால் சாம்பலினாலும் மெழுகப்பட்டவை என்பதைச் சிங்களத் தேசமும், சீனப் பேரரசும் மறைக்கத் துடித்தாலும், அவர்களின் சொந்த அதிகாரிகளின் வாக்குமூலங்களே அதை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.</p>
<p><strong>வடக்கு &#8211; கிழக்கைக் குறிவைக்கும் சீனாவின் ‘மென் அதிகார’ வியூகம்</strong></p>
<p>தென்னிலங்கையைத் தனது கடன் பொறிக்குள் சிக்க வைத்து, அம்பாந்தோட்டை துறைமுகம் உட்படப் பல மூலோபாயப் பகுதிகளைத் தன்வசப்படுத்திய சீனாவுக்கு, கடந்த பல வருடங்களாக வடக்கு &#8211; கிழக்கு என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றது. ஈழத்தமிழர்களின் தாயக நிலத்தின் மீது நேரடியாகக் கால்வைக்க முடியாமல் சீனா இப்போதும் தவித்துக் கொண்டிருக்கின்றது.</p>
<p>இதற்குக் காரணம், தமிழ் மக்களின் உறுதியான ஒரே நோக்க அரசியல் கோட்பாடும், தாயகக் கோட்பாடும் ஆகும். தமிழ் மக்களின் இந்த அரசியல் இருப்பை உடைத்துத் தவிடுபொடியாக்கும் சீனாவின் அத்தனை முயற்சிகளுக்கும், வெளிப்புறச் சக்தியான இந்தியாவின் பிராந்தியப் பாதுகாப்பு நலன்களும், தலையீடுகளும் பெரும் முட்டுக்கட்டையாக அமைந்துள்ளன.</p>
<p>அத்துடன், தமிழர் பகுதி அரசியல் தலைமைகளின் இறுக்கமான பிடியும், சீனாவின் நேரடி ஊடுருவலுக்குப் பாரிய தடையாக இருந்து வருகின்றது. இருப்பினும், சீனா தனது காய்நகர்த்தல்களைக் கைவிட்டதாக இல்லை. நேரடியாக வடக்கு &#8211; கிழக்கிற்குள் நுழைய முடியாத சூழ்ச்சி ஆட்டத்தை அது இப்போது மிக நிதானமாகவும் தந்திரமாகவும் அரங்கேற்றத் தொடங்கியுள்ளது.</p>
<p><strong>வாழ்வாதார முகமூடியும் தமிழ் மக்களின் விழிப்புணர்வும்</strong></p>
<p>நேரடி இராணுவ அல்லது பொருளாதாரத் திட்டங்கள் மூலம் நுழைய முற்பட்டால் இந்தியாவின் எதிர்ப்பையும் தமிழ் மக்களின் கொந்தளிப்பையும் சந்திக்க நேரிடும் என்பதைச் சீனா நன்கு அறிந்துள்ளது. இதனால், ‘மென் அதிகார’ (Soft Power) அரசியலைச் சீனா கையில் எடுத்துள்ளது.</p>
<p>வடக்கு &#8211; கிழக்கின் கடற்றொழிலாளர் அமைப்புகள், உள்ளூர் முக்கியப் புள்ளிகள், சில அடிவருடி அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகளைக் கைக்குள் போட்டுகொண்டு படிப்படியாக, மெதுவாக உள்நுழையும் சதித்திட்டங்களை சீனா நகர்த்திக் கொண்டிருக்கின்றது. வறுமையை முதலாக்கி, வாழ்வாதார உதவிகள் என்ற போர்வையிலும், கடலட்டைப் பண்ணைகள், உலர் உணவு விநியோகம் என்ற முகமூடியணிந்தும் தமிழ் மக்களின் மனங்களை வெல்லும் நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன.</p>
<p>இன்றுவரை சர்வதேச அரங்கில் தமிழ் மக்களுக்கான ஐநா மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட தளங்களில் நீதி மறுக்கப்படுவதற்குப் பின்னணியில், இந்த ‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’ நடத்திய சீனாவின் வீட்டோ அதிகாரக் கரங்களே முதன்மையாக இருக்கின்றன என்பதைத் தமிழ் சமூகம் மறந்துவிடக்கூடாது. ஜெனிவாவில் தமிழர்களுக்கு எதிராகப் பகிரங்கமாக நின்றுகொண்டு, யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் வந்து உதவிப் பொருட்கள் வழங்குவது தமிழ் மக்களின் அரசியல் விழிப்புணர்வை மழுங்கடிக்கும் சதியன்றி வேறில்லை.</p>
<p><strong>நிலப்பறிப்பின் நீண்டகாலப் பேராபத்து</strong></p>
<p>கடலட்டைப் பண்ணைகள், முதலீடுகள் என்ற போர்வையில் வடக்கு &#8211; கிழக்கின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்புகளையோ அல்லது கடல் வளங்களையோ ஏதேனுமோர் அடிப்படையில் சீனாவுக்குத் தாரை வார்ப்பது, தமிழ் இனத்தின் எதிர்காலத்திற்குப் பாரிய, நீண்டகாலப் பேராபத்தாய் முடியும்.</p>
<p>தென்னிலங்கையைப் போல நமது தாயக நிலத்தையும் சீனா தனது ஆதிக்கப் பிடிக்குள் கொண்டு வந்தால், தமிழ் மக்களின் சுயாட்சி மற்றும் சுயநிர்ணய உரிமைக்கான அரசியல் கோரிக்கைகள் சர்வதேச அரங்கில் முற்றாக நீர்த்துப் போகச் செய்யப்படும். அதுமட்டுமன்றி, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பிராந்தியப் போர்க்களமாக நமது பூர்வீக நிலம் மாறும் அபாயமும் உண்டு. நிலம் என்பது வெறும் பொருளல்ல, அது தமிழர்களின் இறையாண்மை மற்றும் வரலாற்றுத் தொடர்ச்சியின் அடையாளம் என்பதை உணர்ந்து, அதனைப் பாதுகாப்பது நமது முதன்மைக் கடமையாகும்.</p>
<p>அட்மிரல் கொலம்பகேயின் இந்த வாக்குமூலம் தமிழ் மக்களுக்கு உணர்த்தும் பாடம் என்னவெனில், புவிசார் சர்வதேச அரசியலில் எந்த நாடும் நமக்கு நிரந்தர நண்பனும் அல்ல, பகையாளியும் அல்ல. சீனாவுக்குத் தேவைப்பட்டது தமிழர்களின் தாயக நிலத்தின் மூலோபாய முக்கியத்துவமே தவிர, இங்கு வாழும் தமிழ் மக்களின் உரிமைகளோ, அவர்களின் உயிர்களோ அல்ல. தமது உறவுகளின் எலும்புகளின் மேல் கட்டப்பட்ட சீனக் கட்டுமானங்களையும், அவர்களின் தந்திரோபாய உதவிகளையும் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டிய வரலாற்றுத் தருணம் இதுவாகும்.</p>
<p>உள்நாட்டுக் கைக்கூலிகளைப் பயன்படுத்திச் சீனா நடத்தும் இந்த மெதுவான ஊடுருவல் குறித்துத் தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகளும், சமூக ஆர்வலர்களும் விழிப்படைய வேண்டும். நமது தாயக நிலத்தை மற்றொரு வல்லரசின் சூறையாடலுக்குத் தாரைவார்ப்பது, முள்ளிவாய்க்காலில் மடிந்த ஆன்மாக்களுக்குச் செய்யும் துரோகம்.</p>
<p>சீனா விரிக்கும் சதிவலையைத் தவிடுபொடியாக்கி, நமது அரசியல் அபிலாஷைகளை உறுதியுடன் காப்பதே ஈழத்தமிழினத்தின் இன்றைய அவசரத் தேவையாகும்.</p>
<p>The post <a href="https://oruvan.com/mullivaikkal-disaster-former-navy-chief-exposes-chinas-weapons-supermarket-conspiracy/">ஆயுத சூப்பர் மார்க்கெட்டும் முள்ளிவாய்க்கால் பேரழிவும்  கொலம்பகேயின் வாக்குமூலத்தால் அம்பலமாகும் சீன முகம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பிலிப்பைன்ஸில் 8.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் &#8211; ஆசியா நாடுகள் பலவற்றுக்கும் சுனாமி எச்சரிக்கைகள் விடுப்பு</title>
		<link>https://oruvan.com/8-2-magnitude-earthquake-hits-philippines-tsunami-warnings-lifted-for-many-asian-countries/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 08 Jun 2026 01:03:19 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[earthquake]]></category>
		<category><![CDATA[GFZ]]></category>
		<category><![CDATA[Philippines]]></category>
		<category><![CDATA[Tsunami warnings]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49497</guid>

					<description><![CDATA[<p>பிலிப்பைன்ஸின் கடற்பரப்பில் ஏற்பட்ட 8.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஆசியா நாடுகள் பலவற்றுக்கும் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் அதிகாரிகள், திங்கள்கிழமை அதிகாலையில் சுனாமி அலைகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின்படி, உள்ளூர் நேரப்படி காலை 7:40 மணிக்குச் சற்று முன்னதாக மின்டானோ தீவுக்கு அப்பால் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் அந்தப் பகுதிகளில் இருந்து உடன் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/8-2-magnitude-earthquake-hits-philippines-tsunami-warnings-lifted-for-many-asian-countries/">பிலிப்பைன்ஸில் 8.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் &#8211; ஆசியா நாடுகள் பலவற்றுக்கும் சுனாமி எச்சரிக்கைகள் விடுப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பிலிப்பைன்ஸின் கடற்பரப்பில் ஏற்பட்ட 8.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஆசியா நாடுகள் பலவற்றுக்கும் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.</p>
<p>சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் அதிகாரிகள், திங்கள்கிழமை அதிகாலையில் சுனாமி அலைகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p>
<p>அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின்படி, உள்ளூர் நேரப்படி காலை 7:40 மணிக்குச் சற்று முன்னதாக மின்டானோ தீவுக்கு அப்பால் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.</p>
<p>பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் அந்தப் பகுதிகளில் இருந்து உடன் வெளியேறுமாறும், கடற்கரைகள் மற்றும் துறைமுகங்களிலிருந்து விலகிச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.</p>
<p>இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக ஜேர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது.</p>
<p>முன்னதாக, இந்த நிலநடுக்கத்தை 7.3 ரிக்டர் அளவில் இருக்கும் என ஜேர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் மதிப்பிட்டிருந்தது.</p>
<p>நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது.</p>
<p>தெற்கு பிலிப்பைன்ஸின் சில மாகாணங்களின் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக உயரமான இடங்களுக்கு செல்லுமாறு வலிறுயுத்தப்பட்டுள்ளனர்.</p>
<p>இந்தோனேசியாவின் புவி இயற்பியல் நிறுவனம், அந்நாட்டின் வடகிழக்கு கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.</p>
<p>அதேபோல், ஜப்பானும் தனது பசிபிக் கடற்கரையின் பெரும் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/8-2-magnitude-earthquake-hits-philippines-tsunami-warnings-lifted-for-many-asian-countries/">பிலிப்பைன்ஸில் 8.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் &#8211; ஆசியா நாடுகள் பலவற்றுக்கும் சுனாமி எச்சரிக்கைகள் விடுப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>உலகம் சந்திக்கப் போகும் மிகப்பெரிய ஆபத்து &#8211; எமனாகும் வெப்பநிலை  உயர்வு ; ஐ.நா. எச்சரிக்கை </title>
		<link>https://oruvan.com/the-biggest-threat-the-world-faces-is-rising-temperatures-un-warns/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 04 Jun 2026 04:42:00 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய நாடுகள் சபை]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49483</guid>

					<description><![CDATA[<p>ஐக்கிய நாடுகள் சபை (United Nations) வெளியிட்டுள்ள உலகளாவிய காலநிலை மாற்ற தொர்பான அண்மைய அறிக்கை, உலகம் ஒரு முக்கியமான மற்றும் அபாயகரமான காலநிலை கட்டத்திற்குள் நுழைந்துக் கொண்டிருப்பதை வெளிப்படுத்துகிறது. அறிக்கையின் படி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலக வெப்பநிலை இதுவரை பதிவான வரலாற்று அளவுகளை விட அதிகமாக உயரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையானது, மனித நடவடிக்கைகள் காரணமாக ஏற்பட்டது எனக் கூறியுள்ள ஐ.நா., காலநிலை மாற்றத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதில் பாரிய சிக்கல்கள் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-biggest-threat-the-world-faces-is-rising-temperatures-un-warns/">உலகம் சந்திக்கப் போகும் மிகப்பெரிய ஆபத்து &#8211; எமனாகும் வெப்பநிலை  உயர்வு ; ஐ.நா. எச்சரிக்கை </a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஐக்கிய நாடுகள் சபை (United Nations) வெளியிட்டுள்ள உலகளாவிய காலநிலை மாற்ற தொர்பான அண்மைய அறிக்கை, உலகம் ஒரு முக்கியமான மற்றும் அபாயகரமான காலநிலை கட்டத்திற்குள் நுழைந்துக் கொண்டிருப்பதை வெளிப்படுத்துகிறது.</p>
<p>அறிக்கையின் படி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலக வெப்பநிலை இதுவரை பதிவான வரலாற்று அளவுகளை விட அதிகமாக உயரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த நிலைமையானது, மனித நடவடிக்கைகள் காரணமாக ஏற்பட்டது எனக் கூறியுள்ள ஐ.நா., காலநிலை மாற்றத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதில் பாரிய சிக்கல்கள் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.</p>
<p>இந்த மாற்றத்தை சமநிலைப்படுத்தும் இயற்கை அமைப்புகளின் திறனை விட காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் காரணிகள் அதிகமாக இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதனால் உலகளாவிய சுற்றுச்சூழல் சமநிலை மிகப்பெரிய ஆபத்தில் உள்ளது.</p>
<p>ஐ.நாவின் அறிக்கையின் பிரகாரம் உலக வெப்பநிலை தற்காலிகமாக 1.5°C வரம்பை மீறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இது பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் (Paris Climate Agreement) இலக்குகளுக்கு நேரடி சவாலாகக் கருதப்படுகிறது.</p>
<p>கடுமையான வெப்ப அலைகள் அதிகரிக்கும் எனவும், குறிப்பாக நகர்ப்புறங்களில் வெப்பத் தாக்கம் (urban heat island effect) அதிகமாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-49486" src="https://oruvan.com/wp-content/uploads/2026/06/en_1.jpg" alt="" width="900" height="506" /></p>
<p>அதேபோல், கடல்மட்ட உயர்வு தொடர்ச்சியாக அதிகரிக்கும் நிலையில், குறைந்த உயரம் கொண்டத் தீவுகள் மற்றும் கடற்கரை நகரங்கள் பெரும் அபாயத்தை சந்திக்கும் எனவும் உணவு பாதுகாப்பு, நீர் வளங்கள் மற்றும் சுகாதார அமைப்புகள் அனைத்தும் ஒரே நேரத்தில் அழுத்தத்திற்கு உள்ளாகும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p><strong>உலக வெப்பநிலை உயர்வின் அடிப்படை காரணிகள்</strong></p>
<p>உலகளாவிய ரீதியில் வெப்பநிலை உயர்வின் பின்னணியில் பல மனிதச் செயல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.</p>
<p>முதலாவதாக, எரிசக்தி உற்பத்தியில் நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற எரிபொருட்களின் அதிகப் பயன்பாடு வளிமண்டலத்தில் அதிக அளவிலான கார்பன் டைஆக்சைடை சேர்க்கிறது. இது பசுமை இல்ல விளைவை (greenhouse effect)  அதிகரிக்கிறது.</p>
<p>இரண்டாவதாக, உலகளாவிய தொழிற்துறை வளர்ச்சி, குறிப்பாக உற்பத்தி மற்றும் கட்டுமான துறைகள், மிகப்பெரிய அளவில் கார்பன் வெளியீட்டை உருவாக்குகின்றன.</p>
<p>மூன்றாவதாக, காடுகள் அழிப்பு (deforestation) காரணமாக கார்பனை உறிஞ்சும் இயற்கை சமநிலை குறைகிறது. இதனால் வளிமண்டலத்தில் வெப்பம் அதிகமாக தங்குகிறது.</p>
<p>மேலும், வேகமான நகரமயமாக்கல், வாகனப் போக்குவரத்து அதிகரிப்பு மற்றும் நிலப் பயன்பாட்டு மாற்றங்கள் அனைத்தும் இணைந்து இந்தப் பிரச்சினையை தீவிரப்படுத்துகின்றன.</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone  wp-image-49484" src="https://oruvan.com/wp-content/uploads/2026/06/Screenshot-2026-05-28-162652.png" alt="" width="1295" height="885" /></p>
<p>இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தான் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் செய்துக்கொள்ளப்பட்டது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை எந்தவொரு நாடும் முறையாக பின்பற்றுவதில்லை. முன்னுதாரணமாக செயல்பட வேண்டிய அமெரிக்காவே இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிவிட்டது.</p>
<p><strong>விளைவுகளின் பல்முக தாக்கங்கள்</strong></p>
<p>உலக வெப்பநிலை உயர்வு பனிமலை உருகுதல் வேகத்தை அதிகரிக்கிறது. இதன் நேரடி விளைவாக கடல் மட்டம் உயர்ந்து, கடற்கரைப் பகுதிகள் மெதுவாக நீரில் மூழ்கும் அபாயம் உருவாகிறது.</p>
<p>அதேபோல், உயிரினங்களின் வாழிடங்கள் அழிந்துடன், தற்போதைய சூழவில் பல இனங்கள் அழிவின் ஆபத்தில் உள்ளன. கடல் சூழல் அமைப்புகளும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன.</p>
<p><strong>பொருளாதார தாக்கங்கள்</strong></p>
<p>விவசாயம் இந்த மாற்றத்தால் மிக அதிகமாக பாதிக்கப்படும் துறையாகும். பருவமழை மாற்றம் காரணமாக உணவு உற்பத்தி குறையும், இதனால் உணவுப் பொருட்களின் விலை உயர்வு ஏற்படும் என்பதுடன், கடுமையான உணவுப் பற்றாக்குறையும் ஏற்படும்.</p>
<p>அத்துடன், இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் சேதங்கள் அரசுகளுக்குப் பெரும் நிதிச் சுமையை உருவாக்கும். காப்பீட்டு துறை மற்றும் கட்டமைப்புத் துறைகளும் இதனால் பாதிக்கப்படுகின்றன.</p>
<p><strong>சமூக தாக்கங்கள்</strong></p>
<p>வெப்பநிலை அதிகரிப்பால் மனித வாழ்க்கை முறையில் பெரும் மாற்றங்கள் ஏற்படும். குடிநீர் பற்றாக்குறை, வெப்ப அலை காரணமாக உயிரிழப்பு அபாயம், மற்றும் புதிய நோய்கள் பரவல் அதிகரிக்கக்கூடும். வாழ்வாதாரம் பாதிக்கப்படும் பகுதிகளில் மக்கள் இடம்பெயர்வு (climate migration) அதிகரிக்கும் அபாயம் உள்ளது.</p>
<p><strong>பிராந்திய ரீதியான உலக விளைவுகள்</strong></p>
<p>உலகின் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு அளவுகளில் பாதிக்கப்படுகின்றன. ஐரோப்பா கடுமையான வெப்ப அலைகள் மற்றும் காட்டுத்தீ சம்பவங்களை எதிர்கொள்கிறது. வட அமெரிக்கா சூறாவளி மற்றும் புயல் தாக்கங்களை அதிகமாக சந்திக்கிறது. ஆப்பிரிக்கா கடுமையான வறட்சி மற்றும் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது.</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-49485" src="https://oruvan.com/wp-content/uploads/2026/06/venv_a_2434494_f0020_c.jpg" alt="" width="500" height="334" /></p>
<p>லத்தீன் அமெரிக்காவில் காடுகள் அழிவு மற்றும் உயிரியல் பல்வகைமை குறைவு அதிகரிக்கிறது. ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகள் வெள்ளம், சூறாவளி மற்றும் மக்கள் இடம்பெயர்வு போன்ற சிக்கல்களை அதிகமாக எதிர்கொள்கின்றன.</p>
<p><strong>தீர்வுகள் மற்றும் சர்வதேச கொள்கை நடவடிக்கைகள்</strong></p>
<p>இந்த அபாயத்தைக் கட்டுப்படுத்த பலத் தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன. முதன்மையாக, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (renewable energy) பயன்பாட்டை உலகளவில் விரிவுபடுத்த வேண்டும். சூரிய மற்றும் காற்றாலை ஆற்றல் முக்கிய மாற்று வழிகளாக கருதப்படுகின்றன.</p>
<p>கார்பன் வெளியீட்டை கட்டுப்படுத்த கடுமையானச் சட்டங்கள் மற்றும் சர்வதேச ஒப்பந்தங்கள் தேவைப்படுகிறது. UNFCCC மற்றும் IPCC போன்ற அமைப்புகள் இதற்கான வழிகாட்டுதல்களை வழங்குகின்றன. காடுகள் பாதுகாப்பு மற்றும் மீண்டும் காடு வளர்ப்பு (reforestation) நடவடிக்கைகள் மிக முக்கியமானதாகும்.</p>
<p>பாரிஸ் பருவளை ஒப்பந்தத்தில் இந்த விடயங்கள்தான் அதிகமாக உள்ளடக்கப்பட்டுள்ளது. என்றாலும், அந்நிய முதலீடுகள் மற்றும் வர்த்தகம், தொழில் வளர்ச்சிக்கு இந்த ஒப்பந்தம் முட்டுக்கட்டையாக அமைவதாக பல நாடுகள் அதில் இருந்து வெளியேறியுள்ளன.</p>
<p>பாரிஸ் ஒப்பந்தத்தின் பிரகாரம் எந்தவொரு நாடும் செயல்படவில்லை என அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிருந்தார்.</p>
<p>என்றாலும், பல ஐரோப்பிய நாடுகள் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் பிரகாரம் இன்னமும் தமது செயல்பாடுகளை முன்னெடுப்பதுடன், தமது இலக்குகள் குறித்தும் அறிவிப்புகளை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றன.</p>
<p>தெற்காசிய நாடுகள் உலகளவில் காலநிலை மாற்றத்தால் மிக அதிகமாக பாதிக்கப்படும் பகுதிகளில் ஒன்றாகும்.</p>
<p>இந்தியாவில், வெப்ப அலைகள் அதிகரித்து மனித உயிரிழப்பு அபாயம் தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. பருவமழை மாறுபாடு இந்தியாவில் விவசாய உற்பத்தியை நேரடியாக பாதிப்பதுடன்,  நகரங்களில் நீர் பற்றாக்குறை மற்றும் மின்சார தொடர்பானப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.</p>
<p>இலங்கையில், குறிப்பாக மலையகப் பகுதிகள் மற்றும் கடற்கரை பகுதிகள் அதிக அபாயத்தில் உள்ளன. தேயிலை உற்பத்தி மற்றும் விவசாயம் வெப்பநிலை மாற்றத்தால் பாதிக்கப்படுவதாக பல ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. மண்சரிவு, வெள்ளம் உட்பட பல இயற்கை அனர்த்தங்கள் மலையகப் பகுதியில் காலநிலை மாற்றத்தால் தொடர்ச்சியாக ஏற்படுகின்றன. கடல் மட்ட உயர்வு காரணமாக கடற்கரை சமூகங்கள் இடம்பெயர வேண்டிய நிலை உருவாகலாம் என இலங்கை விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.</p>
<p>காலநிலை மாற்றமானது இந்தியா மற்றும் இலங்கையில் பொருளாதார வளர்ச்சிக்கும் சமூக நிலைத்தன்மைக்கும் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.</p>
<p>எனவே, ஐ.நா. வெளியிட்டுள்ள இந்த அறிக்கை, உலகம் ஒரு முக்கியமான திருப்புமுனையில் இருப்பதை தெளிவாக காட்டுகிறது. காலநிலை மாற்றம் இனி எதிர்கால அபாயமல்ல  அது தற்போதைய நிஜம்.</p>
<p>காலநிலை மாற்றம் தொடர்பில் உலக நாடுகள் உடனடி, ஒருங்கிணைந்த மற்றும் அறிவியல் அடிப்படையிலான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், அடுத்த சில ஆண்டுகளில் உலகம் வரலாற்றில் இல்லாத அளவிலான காலநிலை நெருக்கடியை சந்திக்கும் அபாயம் உள்ளது.</p>
<p><strong>சு.நிசாந்தன்</strong></p>
<p>The post <a href="https://oruvan.com/the-biggest-threat-the-world-faces-is-rising-temperatures-un-warns/">உலகம் சந்திக்கப் போகும் மிகப்பெரிய ஆபத்து &#8211; எமனாகும் வெப்பநிலை  உயர்வு ; ஐ.நா. எச்சரிக்கை </a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தியவன்னத் தவளைகளும் உலகப் போர் ஆபத்தும் ; 2022 இன் படிப்பினைகளை மறந்ததா இலங்கை</title>
		<link>https://oruvan.com/global-war-threats-and-political-inaction-is-sri-lanka-forgetting-the-lessons-of-2022/</link>
		
		<dc:creator><![CDATA[Rasmila]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Jun 2026 07:04:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முகப்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரிசி]]></category>
		<category><![CDATA[இஸ்ரேல்]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[யூரியா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49463</guid>

					<description><![CDATA[<p>&#8211; Dharmaraja Rasmila ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே நீடித்து வரும் பிராந்தியப் போர்ச் சூழல், உலகப் பொருளாதாரத்திற்கு ஏற்படுத்தி வரும் தாக்கம் மிகப் பயங்கரமானது. உலகளாவிய இந்த நெருக்கடி ஒருபுறமிருக்க, இலங்கையின் தற்போதைய நிலையைச் சரியாகப் புரிந்துகொள்ள நாம் 2022 ஆம் ஆண்டின் கசப்பான யதார்த்தங்களை மீண்டும் உற்றுநோக்க வேண்டியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றபோது 110 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் மதிப்பு, அவர் நாட்டை விட்டு வெளியேறும்போது [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/global-war-threats-and-political-inaction-is-sri-lanka-forgetting-the-lessons-of-2022/">தியவன்னத் தவளைகளும் உலகப் போர் ஆபத்தும் ; 2022 இன் படிப்பினைகளை மறந்ததா இலங்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>&#8211; Dharmaraja Rasmila</p>
<p>ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே நீடித்து வரும் பிராந்தியப் போர்ச் சூழல், உலகப் பொருளாதாரத்திற்கு ஏற்படுத்தி வரும் தாக்கம் மிகப் பயங்கரமானது.</p>
<p>உலகளாவிய இந்த நெருக்கடி ஒருபுறமிருக்க, இலங்கையின் தற்போதைய நிலையைச் சரியாகப் புரிந்துகொள்ள நாம் 2022 ஆம் ஆண்டின் கசப்பான யதார்த்தங்களை மீண்டும் உற்றுநோக்க வேண்டியுள்ளது.</p>
<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றபோது 110 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் மதிப்பு, அவர் நாட்டை விட்டு வெளியேறும்போது 370 ரூபாவைக் கடந்து சென்றமை நம் அனைவருக்கும் நினைவிருக்கும். ஆனால், 2022 ஆம் ஆண்டில் இன்றைய நாளைப்போல உலகப் போர்களோ அல்லது சர்வதேசச் சந்தையில் பாரிய எரிபொருள் விலை அதிகரிப்போ இருந்திருக்கவில்லை. கொவிட் பெருந்தொற்றுப் பரவியது உண்மைதான் என்றாலும், அதனை உலகின் ஏனைய நாடுகள் அழுத்தங்களுக்கு மத்தியிலும் மிக அற்புதமாக மேலாண்மை செய்திருந்தன என்றே சொல்லவேண்டும்.</p>
<p>இந்த நிலையில், ஈஸ்டர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இலங்கையின் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்ததை நாம் ஒப்புக்கொண்டேயாகவேண்டும். இருப்பினும், 2022 இல் ஏற்பட்ட அந்தப் பொருளாதார நெருக்கடிக் காலத்தில் ஒரு கிலோ பருப்பு 700 ரூபாவுக்கும் ஒரு கிலோ சீனி 500 ரூபாவுக்கும் விற்கப்பட்டதுடன், அவை தலா ஒன்று அல்லது இரண்டு கிலோ என்ற கட்டுப்பாடுகளுடனேயே மிகக் கடினமாகப் பெறப்பட்டன. உள்நாட்டு வெங்காயத்தில் இருந்து ஒரு கட்டுக் கீரை வரை அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அனைத்தும் உச்சத்தைத் தொட்டன.</p>
<p>அத்துடன், வரலாறு காணாத வகையில் நான்கு வருடங்களுக்கும் மேலாக வாகன இறக்குமதி முற்றிலும் தடைப்பட்டிருந்தது.</p>
<p>இலங்கை வரலாற்றின் மிக மோசமான 70 சதவீதப் பணவீக்கம் அப்போதுதான் பதிவாகியது. இதற்கெல்லாம் சர்வதேசக் காரணிகள் எதுவும் இருக்கவில்லை. மாறாக, ஆட்சியாளர்களின் தவறான நிதி நிர்வாகமும் நிதி ஒழுக்கமின்மையுமே பிரதான காரணங்களாகும்.</p>
<p>திறந்த பொருளாதாரக் கொள்கைக்குள் நுழைந்து 48 ஆண்டுகள் கடந்த பின்னரும், இலங்கை இன்றுவரை வெறும் 6 முதல் 7 பில்லியன் டொலர் வரையிலான ஓர் ஏழ்மையான, சொற்பமான வெளிநாட்டுக் கையிருப்பைக் கொண்ட நாடாகவே நீடிக்கிறது.</p>
<p>அதிலும் கணிசமான பகுதி சீனாவினால் வழங்கப்பட்ட &#8216;சுவாப்&#8217; (Swap) நிதியுதவியாகும். இதற்கு நேர்மாறாக, சீனாவிடம் 3 முதல் 4 ட்ரில்லியன் டொலர்களும், வியட்நாமிடம் 87 முதல் 90 பில்லியன் டொலர்களும் வெளிநாட்டுக் கையிருப்பு உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>தற்போதைய உலகப் போர்ச் சூழலால் சர்வதேசச் சந்தையில் விலைகள் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளன.</p>
<p>யூரியா 151 சதவீதத்தாலும், டீசல் 148 சதவீதத்தாலும், பெட்ரோல் 136 சதவீதத்தாலும், உரம் 135 சதவீதத்தாலும், நிலக்கரி 112 சதவீதத்தாலும், அரிசி 107 சதவீதத்தாலும் விலை அதிகரிப்பைக் கண்டுள்ளன.</p>
<p>குறிப்பாக, உலகளாவிய உர வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பகுதி ஈரான், கட்டார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய வளைகுடா நாடுகள் சூழ்ந்துள்ள &#8216;ஹோர்முஸ் நீரிணை&#8217; வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.</p>
<p>தற்போது இப்பாதையில் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள தடைகளால், உரத் தொழிற்சாலைகளின் உற்பத்திச் செலவு மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது.</p>
<p>போருக்கு முன்னர் 150 டொலராக இருந்த ஒரு தொன் சல்பூரிக் அமிலத்தின் விலை, தற்போது 1,000 டொலரை நெருங்கியுள்ளது.</p>
<p>உலகமே இத்தகைய பாரிய பொருளாதாரப் பேரழிவை எதிர்கொண்டுள்ள இந்த இக்கட்டான தருணத்தில், தியவன்ன நாடாளுமன்றத்தில் ஆட்சி பீடத்தில் உள்ள ஆளுங்கட்சியினர் சிலர் இன்னும் அலங்காரப் பொம்மைகளைப் போல எவ்விதப் பொறுப்பும் இன்றி நாடாளுமன்றில் கதிரைகளைச் சூடாக்கிவருகின்றனர்.</p>
<p>மறுபுறம் எதிர்க்கட்சியினரோ, &#8216;இன்று ஆட்சியைத் தாருங்கள், நாம் உடனே விலைவாசியைக் குறைப்போம்&#8217; என்று எவ்விதத் தெளிவான பொருளாதாரத் திட்டமும் இன்றி ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.</p>
<p>எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தியவன்ன ஏரியில் இருக்கும் தவளைகளைப் போலப் பயனில்லாமல் சத்தமிடுவதைத் தவிர்த்து, உலக நிலைவரத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பிராந்தியப் போர் முடியும் வரையிலாவது உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பது பற்றி ஆராய்ந்து, பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வுகளைத்தேட ஒன்றிணைய வேண்டும், என்பதே இன்றைய காலத்தின் அவசியமான தேவையாகும்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/global-war-threats-and-political-inaction-is-sri-lanka-forgetting-the-lessons-of-2022/">தியவன்னத் தவளைகளும் உலகப் போர் ஆபத்தும் ; 2022 இன் படிப்பினைகளை மறந்ததா இலங்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>உலகப் பொருளாதாரத்தின் அதிர்வுகளும்  இலங்கையினது களநிலை யதார்த்தமும்  வெறும் அரசியல் பேச்சுகள் தீர்வாகுமா?</title>
		<link>https://oruvan.com/stop-the-rhetoric-sri-lanka-warned-of-2022-style-crisis-amid-global-war-and-rising-trade-deficit/</link>
		
		<dc:creator><![CDATA[Rasmila]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Jun 2026 06:52:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முகப்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[அரசியல்வாதிகள்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இஸ்ரேல்]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[எண்ணெய் விலை]]></category>
		<category><![CDATA[எரிபொருள்]]></category>
		<category><![CDATA[எரிவாயு]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49468</guid>

					<description><![CDATA[<p>&#8220;எண்ணெய் விலையைக் குறையுங்கள், வாகனங்களுக்கு வரி விதிக்காதீர்கள், மின்சாரக் கட்டணத்தைக் குறையுங்கள்! நாங்கள் ஆட்சியில் இருந்திருந்தால் இதையெல்லாம் எப்போதோ குறைத்திருப்போம்&#8221; – தற்போதைய அரசியல் சூழலில் இலங்கையின் எதிர்க்கட்சியினரிடம் இருந்து தினமும் கேட்கக்கூடிய வழக்கமான மேடைப் பேச்சுகள் இவைதான். உண்மையாகவே எரிபொருள், மின்சாரம் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைந்தால், இந்த நாட்டின் குடிமக்களாகிய நமக்கும் அது பெரும் மகிழ்ச்சிதான். வரிகள் குறைக்கப்பட்டால் அது சாதாரண அடித்தட்டு மக்களுக்குப் பாரியதொரு நிவாரணமாக அமையும் என்பதில் எவ்வித [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/stop-the-rhetoric-sri-lanka-warned-of-2022-style-crisis-amid-global-war-and-rising-trade-deficit/">உலகப் பொருளாதாரத்தின் அதிர்வுகளும்  இலங்கையினது களநிலை யதார்த்தமும்  வெறும் அரசியல் பேச்சுகள் தீர்வாகுமா?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>&#8220;எண்ணெய் விலையைக் குறையுங்கள், வாகனங்களுக்கு வரி விதிக்காதீர்கள், மின்சாரக் கட்டணத்தைக் குறையுங்கள்! நாங்கள் ஆட்சியில் இருந்திருந்தால் இதையெல்லாம் எப்போதோ குறைத்திருப்போம்&#8221; – தற்போதைய அரசியல் சூழலில் இலங்கையின் எதிர்க்கட்சியினரிடம் இருந்து தினமும் கேட்கக்கூடிய வழக்கமான மேடைப் பேச்சுகள் இவைதான்.</p>
<p>உண்மையாகவே எரிபொருள், மின்சாரம் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைந்தால், இந்த நாட்டின் குடிமக்களாகிய நமக்கும் அது பெரும் மகிழ்ச்சிதான். வரிகள் குறைக்கப்பட்டால் அது சாதாரண அடித்தட்டு மக்களுக்குப் பாரியதொரு நிவாரணமாக அமையும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. அதைப் பற்றி மீண்டும் நாம் புதிதாகச் சொல்வதற்கு எதுவும் இல்லை.</p>
<p>இந்த நாட்டின் குடிமக்களாகிய நமக்கும் அது புரிகிறது, நாமும் அதைத்தான் விரும்புகிறோம். ஆனால், இந்த நேரத்தில் நமது நாடு ஓர் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நாம் தனித்து வாழும் தீவு அல்ல. நாமும் அந்த உலகளாவிய பொருளாதாரச் சங்கிலித் தொடரின் ஓர் அங்கமே. எனவே, சர்வதேச ரீதியாக ஏற்படும் அதிர்வுகள் நம்மை நேரடியாகப் பாதிக்கும் என்பதை நாம் இந்த யதார்த்தமான கோணத்தில்தான் பார்க்க வேண்டியுள்ளது. அதை விடுத்து வெற்று மேடைப் பேச்சுகளைப் பேசிக்கொண்டிருப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை.</p>
<p>சர்வதேச அரசியல் அரங்கில் அமெரிக்காவும் ஈரானும் தற்போது &#8216;நெருப்பும் நீரும்&#8217; போல மிகக் கடுமையான முரண்பாடுகளுடன் மோதிக்கொள்கின்றன.</p>
<p>ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையிலான பிராந்திய யுத்தம் தொடங்கி மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. இந்த யுத்தம் உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தி வரும் பொருளாதாரத் தாக்கம் நமக்கு மட்டுமல்ல, சுமார் 700 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கையிருப்பை மார்புதட்டி வைத்துள்ள இந்தியா போன்ற பிரமாண்டமான நாடுகளுக்கே இப்போது வலிக்கத் தொடங்கியிருக்கிறது.</p>
<p>டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடைவது நாம் அறிந்ததே. கடந்த மூன்று வருடங்களின் பின்னர், ஓர் அமெரிக்க டொலருக்கு 350 ரூபாவைச் செலுத்த வேண்டிய அவல நிலை கடந்த வாரம் நேர்ந்தது.</p>
<p>அதேநேரம், 700 பில்லியன் டொலர் கையிருப்பு வைத்துள்ள இந்தியாவின் நாணய மதிப்பும்கூட இந்த மே மாதத்தில் டொலருக்கு நிகராக 97 ரூபா வரை வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. நம்மிடம் இருப்பதோ வெறும் 7 அல்லது 7.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே. ஓர் எண்ணெய் கப்பலைக்கூட வரவழைப்பதற்கு நம்மிடம் 50 மில்லியன் டொலர் கையிருப்பு இல்லாமல், நாடே எரிபொருள் வரிசைகளில் நின்ற கசப்பான கடந்த கால வரலாறு நமக்கு மறந்துவிடக்கூடாது.</p>
<p>இலங்கை மற்றும் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் நாணய மதிப்புகள் அமெரிக்க டொலருக்கு நிகராக ஏன் வீழ்ச்சியடைகின்றன? உலகளாவிய மற்றும் உள்நாட்டு அழுத்தங்கள் இதற்கு எவ்வாறு காரணமாகின்றன??, என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.</p>
<p>முதலாவதாக, இந்தியாவும் நம்மைப் போலத்தான் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் ஒரு நாடு. இந்த வளைகுடா யுத்தம் காரணமாக சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகி வருகிறது. இப்போதும், இந்த வினாடியிலும் அது நடந்து கொண்டிருக்கிறது. அதன் விளைவாக, எண்ணெய்க்காகச் செலுத்த வேண்டிய டொலரின் அளவு இரு நாடுகளுக்கும் பல மடங்கு அதிகரித்துள்ளது.</p>
<p>இரண்டாவதாக, சர்வதேச முதலீட்டாளர்கள் தற்போது வளர்ந்து வரும் சந்தைகளில் உள்ள தங்களது பங்குகளை விற்றுவிட்டு, அதிக லாபமும் பாதுகாப்பும் தரும் அமெரிக்கச் சொத்துகளில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். அப்படியென்றால் என்ன நடக்கும்? இந்தியாவிலிருந்து வெளியேறும் இந்த முதலீட்டாளர்கள் உள்நாட்டு ரூபாக்களை விற்றுவிட்டு டொலர்களை வாங்குவார்கள். அப்போது ரூபா இன்னும் பலவீனமடையும். அதாவது மூலதனம் முழுவதும் அமெரிக்கா நோக்கிப் பாய்வது நடக்கிறது.</p>
<p>மறுபுறம், நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை ஆண்டுக்காண்டு அதிகரித்துச் செல்வது மற்றுமொரு ஆபத்தான அறிகுறியாகும். ஏற்றுமதி வருமானத்தை விட, இறக்குமதிச் செலவு அதிகரிப்பதே வர்த்தகப் பற்றாக்குறையாகும். கடந்த 2023 இல் 4.9 பில்லியன் டொலராக இருந்த வர்த்தகப் பற்றாக்குறை, 2024 இல் 6.1 பில்லியன் டொலராக உயர்ந்தது.</p>
<p>கடந்த 2025 ஆம் ஆண்டில் ஆடை மற்றும் தேயிலை ஏற்றுமதியும், வெளிநாட்டுப் பண அனுப்புதல்களும் சாதனை அளவில் அதிகரித்த போதிலும், வர்த்தகப் பற்றாக்குறை 7.9 பில்லியன் டொலராக மேலும் மோசமடைந்தது. இதற்கு 2025 இல் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டமையும், நுகர்வுப் பொருட்களுக்கான தேவை எகிறியமையுமே காரணமாகும். ஏற்றுமதி வருமானம் உயர்ந்த போதிலும், நாம் கொண்டு வரும் பொருட்களுக்கான இறக்குமதிச் செலவு பல மடங்கு அதிகரித்தது.</p>
<p>தற்போது 2026 ஆம் ஆண்டின் ஆரம்ப மாதங்களில், இந்த யுத்தச் சூழலால் எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளுடன் கப்பல் கட்டணங்களும், காப்புறுதிச் செலவுகளும் சர்வதேச அளவில் உயர்ந்துவிட்டன. இந்தத் தருணத்தில், ரூபா வீழ்ச்சியைத் தடுக்கவும் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கவும் நாம் எதைச் செய்தாலும் வெளிநாட்டுக் கையிருப்பை, அதாவது டொலரின் அளவை அதிகரிக்க வேண்டியது கட்டாயமாகும். இல்லையென்றால், எண்ணெய்க் கப்பல் ஒன்றைக்கூடக் கொண்டுவருவதற்கு 50 மில்லியன் டொலர் இல்லாமல் மக்கள் வரிசைகளில் நின்ற அதே பழைய நிலைமை மீண்டும் உருவாகிவிடும்.</p>
<p>எனவே, நாடாளுமன்றத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் வெறும் கூச்சல்களைப் போட்டுக் கொண்டிருக்காமல், உலக நிலைவரத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உலகப் பொருளாதார நெருக்கடிக்கு, குறைந்தது இந்த மத்திய கிழக்கு யுத்தம் முடியும் வரையிலாவது எவ்வாறு முகங்கொடுப்பது என்பது பற்றிப் பேச வேண்டும். அதுவரை, குடிமக்களாகிய நாம் எரிபொருள் நுகர்வைக் கண்டிப்பாகக் குறைக்க வேண்டும்.</p>
<p>முடிந்தவரை பயணங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கும். நாம் பரிமாறிக்கொள்ளும் சோற்றுத் தட்டில் ஒரு சோற்றுப் பருக்கையையேனும் குப்பைத் தொட்டியில் போடாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய ஓர் இக்கட்டான காலத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.</p>
<p>வர்த்தகப் பற்றாக்குறைத் தரவுப்பட்டியல்</p>
<p>2023 ஆம் ஆண்டு: 4.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள்</p>
<p>2024 ஆம் ஆண்டு: 6.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள்</p>
<p>2025 ஆம் ஆண்டு: 7.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (வாகன இறக்குமதிக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் விளைவு)</p>
<p>குறிப்பு: 2026 ஆம் ஆண்டின் தற்போதைய உலகச் சூழலில், ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாகக் கப்பல் மற்றும் காப்புறுதிக் கட்டணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றமை இலங்கையின் பொருளாதார மீட்சிக்குக் கூடுதல் சவாலாக மாறியுள்ளது.</p>
<p>&#8211; Dharmaraja Rasmila</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/stop-the-rhetoric-sri-lanka-warned-of-2022-style-crisis-amid-global-war-and-rising-trade-deficit/">உலகப் பொருளாதாரத்தின் அதிர்வுகளும்  இலங்கையினது களநிலை யதார்த்தமும்  வெறும் அரசியல் பேச்சுகள் தீர்வாகுமா?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நெருப்பு வளையத்திற்குள் தகிக்கும் பூமி ; WMO எச்சரிக்கும் இரட்டைப் பேராபத்து தென்னாசியாவுக்குக் காத்திருக்கும் சவால்</title>
		<link>https://oruvan.com/devastating-drought-and-power-crisis-loom-over-south-asia-amid-extreme-ocean-warming/</link>
		
		<dc:creator><![CDATA[Rasmila]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Jun 2026 06:46:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முகப்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[(El Niño]]></category>
		<category><![CDATA[(National Geographic]]></category>
		<category><![CDATA[Oceana]]></category>
		<category><![CDATA[எல் நினோ]]></category>
		<category><![CDATA[கோதுமை]]></category>
		<category><![CDATA[நெல்]]></category>
		<category><![CDATA[பேராபத்து]]></category>
		<category><![CDATA[மழைப்பொழிவு]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49465</guid>

					<description><![CDATA[<p>தொழிநுட்ப வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் மனித நாகரிகத்திற்கு, இயற்கை தனது மிக உக்கிரமான எச்சரிக்கையை விடுக்கத் தொடங்கியுள்ளது. புவிக்கோளத்தின் வளிமண்டல வெப்பமும், பெருங்கடல்களின் கொதிநிலையும் முன்னெப்போதும் இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ள சூழலில், உலக வானிலை அமைப்பு (WMO &#8211; World Meteorological Organization) வெளியிட்டுள்ள புதிய பருவகால அறிக்கை ஒட்டுமொத்த உலக நாடுகளையும் உலுக்கியுள்ளது. இந்த ஆண்டின் மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தொடக்கத்தில் தற்காலிக அமைதி காப்பது போல் தெரிந்த பசிபிக் பெருங்கடல், தற்போது [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/devastating-drought-and-power-crisis-loom-over-south-asia-amid-extreme-ocean-warming/">நெருப்பு வளையத்திற்குள் தகிக்கும் பூமி ; WMO எச்சரிக்கும் இரட்டைப் பேராபத்து தென்னாசியாவுக்குக் காத்திருக்கும் சவால்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தொழிநுட்ப வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் மனித நாகரிகத்திற்கு, இயற்கை தனது மிக உக்கிரமான எச்சரிக்கையை விடுக்கத் தொடங்கியுள்ளது.</p>
<p>புவிக்கோளத்தின் வளிமண்டல வெப்பமும், பெருங்கடல்களின் கொதிநிலையும் முன்னெப்போதும் இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ள சூழலில், உலக வானிலை அமைப்பு (WMO &#8211; World Meteorological Organization) வெளியிட்டுள்ள புதிய பருவகால அறிக்கை ஒட்டுமொத்த உலக நாடுகளையும் உலுக்கியுள்ளது.</p>
<p>இந்த ஆண்டின் மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தொடக்கத்தில் தற்காலிக அமைதி காப்பது போல் தெரிந்த பசிபிக் பெருங்கடல், தற்போது அசுர வேகத்தில் வெப்பமடைந்து வருவதாக செயற்கைக்கோள் தரவுகள் எச்சரிக்கின்றன.</p>
<p>இதன் விளைவாக, உலகமே அஞ்சிய &#8216;எல் நினோ&#8217; (El Niño) காலநிலை அதிகாரப்பூர்வமாக உருவெடுக்கத் தொடங்கியுள்ளது. இது ஒரு தற்காலிக வானிலை மாற்றம் அல்ல &#8211; மாறாக உலகளாவிய உணவுப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சமநிலைக்கு விடுக்கப்பட்டுள்ள &#8216;போர்ப் பிரகடனம்&#8217; என்றே காலநிலை வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.</p>
<p>ஆய்வாளர்களின் புதிய தரவுகளின்படி, மனித நடவடிக்கைகளால் ஏற்கனவே தீவிரமடைந்துள்ள புவி வெப்பமயமாதல், பசிபிக் பெருங்கடலின் இந்த அசாதாரண வெப்ப அலையை மேலும் உந்தித்தள்ளி, வரலாற்றிலேயே மிகக் கொடூரமானதொரு &#8216;சூப்பர் எல் நினோ&#8217; (Super El Niño) பேராபத்தாக உருவெடுக்கும் என்ற அச்சத்தை உலகளாவிய காலநிலை விஞ்ஞானிகள் மத்தியில் வலுப்படுத்தியுள்ளது.</p>
<p><strong>அறிவியலின் இறுதி எச்சரிக்கை</strong></p>
<p>உலகளாவிய கணினி மாதிரிகளின் முன்கணிப்பின்படி, பசிபிக் பெருங்கடலின் &#8216;நினோ 3.4&#8217; (மத்திய பசிபிக் பெருங்கடல் பகுதி) பிராந்தியத்தின் வெப்பநிலை இயல்பை விட 1.5°C வரை அதிகரிக்கும் என 100 வீதம் உறுதியாகக் கணிக்கப்பட்டுள்ளது.</p>
<p>வழக்கமாக வசந்த காலத்தில் நிலவும் காலநிலை முன்கணிப்புச் சவால்களையும் தாண்டி, அனைத்து அறிவியல் மாதிரிகளும் இவ்வளவு ஒத்த கருத்துடன் எச்சரிப்பது உலக வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.</p>
<p>இந்த எல் நினோ தீவிரமடைதலானது, இதே காலகட்டத்தில் இந்தியப் பெருங்கடலில் உருவாகும் &#8216;நேர்மறை இந்தியப் பெருங்கடல் இருமுனை&#8217; (Positive IOD) மாற்றத்துடன் கைகோர்க்கவுள்ளது.</p>
<p>இந்த இரு பேராபத்துகளின் கூட்டுச் சேர்க்கை காரணமாக, உலகெங்கிலும் உள்ள நிலப்பரப்புகளில் 70% முதல் 80% வரை கடுமையான வெப்ப அலைகள் வீசக்கூடும்.</p>
<p>இதன் விளைவாக, உலக வரைபடம் இரு தீவிர எல்லைகளைச் சந்திக்கவுள்ளது. ஒருபுறம் அமேசான் காடுகளும், அவுஸ்ரேலியாவும், தென்கிழக்கு ஆசியாவும் வறட்சியின் பிடியில் கருகவுள்ள நிலையில், மறுபுறம் மத்திய பசிபிக் பகுதிகள் முன்னெப்போதும் இல்லாத பெருவெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.</p>
<p><strong>வரலாற்றை மிஞ்சும் விபரீதம்</strong></p>
<p>கடந்த காலங்களில் 1982-1983 மற்றும் 1997-1998 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட &#8216;சூப்பர் எல் நினோ&#8217; உலகப் பொருளாதாரத்திற்கு மரண அடியைக் கொடுத்ததுடன், பில்லியன் கணக்கான டொலர்கள் இழப்பையும் ஏற்படுத்தியது.</p>
<p>மிக அண்மையில் 2015-2016 இல் ஏற்பட்ட தாக்கத்தால் உலகளவில் கடுமையான உணவுப் பற்றாக்குறையும் கொடிய சூறாவளிகளும் தோன்றின. தற்போதைய பொருளாதாரப் பகுப்பாய்வுகளின்படி, இம்முறை உருவாகும் எல் நினோ தாக்கத்தால் உலகளாவிய வர்த்தகம், விநியோகச் சங்கிலி மற்றும் எரிசக்திச் சந்தை ஆகியவை முன்னெப்போதும் இல்லாத அளவு பாரிய நிதி நெருக்கடியைச் சந்திக்க நேரிடும், என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p>
<p>சூழலியல் பாதுகாப்பு அமைப்பான &#8216;ஒசியானா&#8217; (Oceana) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இதனால் &#8216;கடலின் நுரையீரல்&#8217; என்று அழைக்கப்படும் பவளப்பாறைகள் வெளிறி அழியும் (Coral Bleaching) பேராபத்து இந்த ஆண்டின் பிற்பகுதியில் மிகத் தீவிரமடையவுள்ளது.</p>
<p>கடல்சார் பல்லுயிர் பெருக்கம் மற்றும் மீன்பிடித் தொழிற்துறைக்கு இது மீளமுடியாத பேரிடியாக அமையும்.</p>
<p>அத்துடன், பூமியின் மாபெரும் காபன் உறிஞ்சிகளான காடுகள் கருகி, கட்டுக்கடங்காத காட்டுத்தீயை உருவாக்குவதன் மூலம் வளிமண்டல காபன் உமிழ்வு பல மடங்கு அதிகரிக்கும்.</p>
<p><strong>தென்னாசியாவின் நிலை என்ன?</strong></p>
<p>உலக வானிலை அமைப்பின் கணிப்பின்படி, இந்த இரட்டைத் தாக்கத்தின் மிகப்பெரிய பாதிப்பை இந்தியத் துணைக்கண்டமும் இலங்கையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.</p>
<p>நஷனல் ஜியோகிராபிக் (National Geographic) இதழின் ஆய்வுக் கட்டுரையின்படி, இந்த எல் நினோ சுழற்சியானது தென்னாசியப் பிராந்தியத்தின் உயிர்நாடியான தென்மேற்குப் பருவமழைப் பொழிவை முற்றாகச் சீர்குலைத்து, மிக மோசமான வறட்சிக்கு வழிவகுக்கும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>
<p>இலங்கையின் உள்ளூர் காலநிலை மற்றும் பொருளாதாரத் தரவுகளின்படி, மழைப்பொழிவுக் குறைவால் நெல், கோதுமை மற்றும் இலங்கையின் பிரதான ஏற்றுமதிப் பயிரான தேயிலை ஆகியவற்றின் விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கடுமையான உணவுப் பணவீக்கமும், வாழ்வாதாரப் பாதிப்பும் தலைதூக்கும்.</p>
<p>இலங்கையைப் பொறுத்தமட்டில் நீர்மின் உற்பத்தியை பெருமளவில் நம்பியிருக்கும் நாடு என்ற ரீதியில், பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்து கடுமையான மின்சார நெருக்கடியும் ஏற்பட வாய்ப்புள்ளது. குடிநீர் ஆதாரங்கள் வற்றிப்போதால், மனித &#8211; யானை மோதல்கள் அதிகரிக்கும் அபாயமும் உள்ளது.</p>
<p>இது வெறும் வானிலை அறிக்கை அல்ல. நாடுகள் தங்களின் தழுவல் கொள்கைகளையும் நீர் மேலாண்மைத் திட்டங்களையும் போர்க்கால அடிப்படையில் மாற்றியமைக்க வேண்டும் என்பதற்கான இறுதி எச்சரிக்கை!</p>
<p>இயற்கையின் இந்த உக்கிரத்தை எதிர்கொள்ள உலக நாடுகள் ஒன்றிணைந்து காபன் உமிழ்வைக் குறைப்பதும், உள்நாட்டு அளவில் நீர் மற்றும் உணவு ஆதாரங்களைப் பாதுகாப்பதும் மட்டுமே வரவிருக்கும் பேராபத்தில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் ஒரே கேடயமாகும்.</p>
<p>The post <a href="https://oruvan.com/devastating-drought-and-power-crisis-loom-over-south-asia-amid-extreme-ocean-warming/">நெருப்பு வளையத்திற்குள் தகிக்கும் பூமி ; WMO எச்சரிக்கும் இரட்டைப் பேராபத்து தென்னாசியாவுக்குக் காத்திருக்கும் சவால்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>“மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் &#8211; உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு”</title>
		<link>https://oruvan.com/tensions-rise-again-in-the-middle-east-fuel-prices-rise-in-the-world-market/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 28 May 2026 11:00:37 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[எரிபொருள் விலை]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49429</guid>

					<description><![CDATA[<p>மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரித்து வரும் இராணுவ பதற்றம் காரணமாக, உலகளாவிய எரிபொருள் சந்தையில் கடும் அதிர்வு ஏற்பட்டுள்ளது. ஈரானின் முக்கிய துறைமுக நகரமான பந்தர் அப்பாஸ் பகுதியில் அமெரிக்கா மேற்கொண்டதாகக் கூறப்படும் தாக்குதல்களுக்கு பதிலடியாக, மத்திய கிழக்கில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரானிய இராணுவம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீரென உயர்ந்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/tensions-rise-again-in-the-middle-east-fuel-prices-rise-in-the-world-market/">“மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் &#8211; உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு”</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரித்து வரும் இராணுவ பதற்றம் காரணமாக, உலகளாவிய எரிபொருள் சந்தையில் கடும் அதிர்வு ஏற்பட்டுள்ளது.</p>
<p>ஈரானின் முக்கிய துறைமுக நகரமான பந்தர் அப்பாஸ் பகுதியில் அமெரிக்கா மேற்கொண்டதாகக் கூறப்படும் தாக்குதல்களுக்கு பதிலடியாக, மத்திய கிழக்கில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரானிய இராணுவம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.</p>
<p>இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீரென உயர்ந்துள்ளது.<br />
பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3 புள்ளி 75 சதவீதம் அதிகரித்து, 97 புள்ளி 8 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு வர்த்தகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>உலகின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி பாதைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணை பகுதியைச் சுற்றி பதற்றம் அதிகரித்துள்ளதால், உலக சந்தைகளில் எரிபொருள் விநியோக தடைகள் ஏற்படலாம் என்ற அச்சமும் உருவாகியுள்ளது.</p>
<p>இந்த பதற்ற நிலைமை நீடித்தால், உலகளவில் பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் விலைகள் மேலும் உயரக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.</p>
<p>இதனிடையே, அமெரிக்காவும் ஈரானும் அண்மையில் பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராகி வந்த நிலையில், இரு தரப்புகளுக்கும் இடையே மீண்டும் மோதல் சூழல் உருவாகியுள்ளது.</p>
<p>பந்தர் அப்பாஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக, வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது.</p>
<p>எந்த நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்கத் தளங்கள் குறிவைக்கப்பட்டன என்பது தெளிவாக வெளியிடப்படாதபோதிலும், ஈரானால் ஏவப்பட்ட சில ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை தங்களது பாதுகாப்புப் படைகள் முறியடித்ததாக குவைத் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>
<p>இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் மற்றும் கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் தங்களது பாதுகாப்பு நிலையை உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
<p>உலக பங்குச் சந்தைகளிலும் இந்த பதற்றத்தின் தாக்கம் பிரதிபலித்துள்ளது. பல நாடுகளில் விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து மற்றும் ஆற்றல் துறைகளில் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர்.</p>
<p>மத்திய கிழக்கு பதற்றம் மேலும் தீவிரமடையாமல் இருக்க உடனடி இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் அவசியம் என ஐக்கிய நாடுகள் சபையும் பல உலக நாடுகளும் வலியுறுத்தியுள்ளன.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/tensions-rise-again-in-the-middle-east-fuel-prices-rise-in-the-world-market/">“மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் &#8211; உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு”</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பிரித்தானிய மன்னராட்சி வரலாறு எப்போது உருவானது? ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் நிலைத்திருக்கிறது</title>
		<link>https://oruvan.com/when-did-the-british-monarchy-originate-it-has-survived-for-a-thousand-years/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 28 May 2026 06:08:53 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய மன்னராட்சி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49423</guid>

					<description><![CDATA[<p>உலகில் இன்னும் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கும் பழைமையான ஆட்சிமுறைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுவது பிரித்தானிய முடியாட்சியாகும். இன்று மூன்றாம் சார்ள்ஸ் (Charles III) தலைமையில் இயங்கும் இந்த முடியாட்சி, வெறும் ஓர் அரச குடும்பத்தின் வரலாறு மட்டுமல்ல. அது இங்கிலாந்தின் அரசியல், சட்டம், பேரரசு, மதம் மற்றும் ஜனநாயக வளர்ச்சியோடு நெருங்கிய தொடர்புடையதாகும். பிரித்தானிய முடியாட்சி உண்மையில் எப்போது ஆரம்பமானது? பண்டைய காலம் தொட்டு பிரித்தானிய முடியாட்சி பல கட்டங்களாக வளர்ச்சி பெற்று வந்துள்ளது. இன்றைய ஒன்றுபட்ட பிரித்தானியா [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/when-did-the-british-monarchy-originate-it-has-survived-for-a-thousand-years/">பிரித்தானிய மன்னராட்சி வரலாறு எப்போது உருவானது? ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் நிலைத்திருக்கிறது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>உலகில் இன்னும் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கும் பழைமையான ஆட்சிமுறைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுவது பிரித்தானிய முடியாட்சியாகும். இன்று மூன்றாம் சார்ள்ஸ் (Charles III) தலைமையில் இயங்கும் இந்த முடியாட்சி, வெறும் ஓர் அரச குடும்பத்தின் வரலாறு மட்டுமல்ல. அது இங்கிலாந்தின் அரசியல், சட்டம், பேரரசு, மதம் மற்றும் ஜனநாயக வளர்ச்சியோடு நெருங்கிய தொடர்புடையதாகும்.</p>
<p><strong>பிரித்தானிய </strong><strong>முடியாட்சி </strong><strong>உண்மையில் </strong><strong>எப்போது </strong><strong>ஆரம்பமானது?</strong></p>
<p>பண்டைய காலம் தொட்டு பிரித்தானிய முடியாட்சி பல கட்டங்களாக வளர்ச்சி பெற்று வந்துள்ளது. இன்றைய ஒன்றுபட்ட பிரித்தானியா உருவாகும் முன்பு பிரிட்டிஷ் தீவுகள் பல சிறிய இராச்சியங்களாகப் பிரிந்திருந்தன.</p>
<p>Wessex, Mercia, Northumbria, East Anglia போன்ற இராச்சியங்கள் அரசியல் மற்றும் இராணுவ ரீதியாக வலுவானவையாக இருந்தன. எட்டாம், ஒன்பதாம் நூற்றாண்டுகளில் Viking படையெடுப்புகள் தீவிரமடைந்தபோது, இந்தச் சிறிய இராச்சியங்கள் உயிர்வாழ்வதற்காக ஒன்றிணைய வேண்டிய சூழல் உருவானது.</p>
<p>9ஆம் நூற்றாண்டில் Viking படையெடுப்புகள் அதிகரித்தபோது, Wessex இராச்சியத்தின் மன்னராக இருந்த Alfred the Great மிக முக்கியமான தலைவராக உருவெடுத்தார்.</p>
<p>Viking படைகளுக்கு எதிராக போராடிய அவர், ஆங்கிலப் பகுதிகளை ஒன்றிணைக்கத் தொடங்கினார். அதற்காக “King of the Anglo-Saxons” என்ற அடையாளத்தை அவர் உருவாக்கினார் என பிரித்தானிய வரலாறு தெரிவிக்கிறது.</p>
<p>Æthelstan என்பவரே “முழுமையான இங்கிலாந்தின் முதல் மன்னர்” என்று வரலாற்று நூல்கள் தெரிவிக்கின்றன. கி.பி. 927ஆம் ஆண்டில் பல Anglo-Saxon பகுதிகளை ஒருங்கிணைத்து மைய ஆட்சியை உருவாக்கியதால், இங்கிலாந்து முடியாட்சியின் ஆரம்பம் அங்கிருந்தே தொடங்குகிறது என கருதப்படுகிறது.</p>
<p>இதனால் “பிரித்தானிய முடியாட்சி 1000 ஆண்டுகளுக்கும் மேலானது” என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனால், பிரித்தானிய முடியாட்சி வரலாற்றில் 1066 மிக முக்கியமான ஆண்டாகும்.</p>
<p><strong>முடியாட்சிக்கான </strong><strong>முதல் </strong><strong>முக்கிய </strong><strong>படியாக அமைந்தது</strong></p>
<p>இந்த ஆண்டில் William the Conqueror நோர்மண்டியிலிருந்து இங்கிலாந்தை கைப்பற்றினார். இது “Norman Conquest” என அழைக்கப்படுகிறது. இந்த வெற்றிக்குப் பின்னர் மன்னராட்சி மிகவும் மையப்படுத்தப்பட்டதுடன், நில அமைப்பும் (feudal system) மாற்றப்பட்டது. பிரெஞ்சுக் கலாசாரம் மற்றும் மொழி ஆகியன அரசவையில் ஆதிக்கம் செலுத்தியதுடன், ஆட்சித் திட்டமும் நவீனமயமாகியது.</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-49425" src="https://oruvan.com/wp-content/uploads/2026/05/hq720.jpg" alt="" width="686" height="386" /></p>
<p>இன்றைய பிரித்தானிய அரச குடும்பத்தின் அரசியல் அமைப்பு பல வகையில் 1066 க்குப் பிந்தைய காலத்திலிருந்தே உருவாகத் தொடங்கியது என பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.</p>
<p>1215ஆம் ஆண்டு மன்னர் ஜோன் (King John) மக்னா கார்ட்டா (Magna Carta) என்ற முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.</p>
<p>இது மன்னரின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தியதுடன், சட்டத்தின் மேலாதிக்கத்தை உருவாக்கியது. அத்துடன், பாராளுமன்ற வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைத்தது. இதுவே பின்னர் அரசியலமைப்பு முடியாட்சிக்கான முதல் முக்கிய படியாகவும் அமைந்தது.</p>
<p>தனிமனித சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டிய நவீன ஜனநாயகத்தின் அடிப்படை மைல்கல்லாக மக்னா கார்ட்டா ஒப்பந்தம் கருதப்படுகிறது.</p>
<p>17ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய அரசியலில் மிகப் பெரிய அதிர்வலைகள் ஏற்பட்டிருந்தன. முதலாம் சார்ள்ஸ் மன்னர் (Charles I) மற்றும் பாராளுமன்றத்திற்கிடையிலான மோதல் உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்தது.</p>
<p>இதன் எதிரொலியாக 1649ஆம் ஆண்டு முதலாம் சார்ள்ஸ் மன்னருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதுடன், முடியாட்சியும் தற்காலிகமாக நீக்கப்பட்டு ஓலிவர் க்ரோம்வெல் (Oliver Cromwell) தலைமையில் குடியரசு ஆட்சி நிறுவப்பட்டமை பிரித்தானிய வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் மாற்றமாகும். என்றாலும், 1660ஆம் ஆண்டு முடியாட்சி மீண்டும் கொண்டு வரப்பட்டது.</p>
<p>அதன்பின் மன்னரின் அதிகாரம் குறைக்கப்பட்டதுடன், பாராளுமன்றத்தின் அதிகாரம் அதிகரிக்கப்பட்டு அரசியலமைப்பு ரீதியாக முடியாட்சி உருவாகத் தொடங்கியது. 1688ஆம் ஆண்டு நடந்த “Glorious Revolution” மற்றும் 1689 Bill of Rights (உரிமைகள் சட்டமூலம்) மூலம் மன்னர் முழுமையான அதிகாரம் கொண்ட ஆட்சியாளர் அல்ல, என்பது சட்ட ரீதியாக உறுதிசெய்யப்பட்டது.</p>
<p><strong>ஆயிரம் </strong><strong>ஆண்டுகால </strong><strong>அரசியல் </strong><strong>பரிணாமத்தின் </strong><strong>விளைவாகும்</strong></p>
<p>தனி இராச்சியங்களாக இருந்த இங்கிலாந்தும் ஸ்கொட்லாந்தும் 1707 இல் Acts of Union (ஒன்றியச் சட்டங்கள்) மூலம் இணைக்கப்பட்டு Kingdom of Great Britain (பெரிய பிரிட்டன் இராச்சியம்) உருவாக்கப்பட்டது.</p>
<p>இதன் மூலம் “British Monarchy” (பிரிட்டிஷ் முடியாட்சி) என்ற அதிகாரப்பூர்வ அடையாளம் உருவானது. இதன் முதல் அரசியாக Anne (ஆன்) தெரிவானார். 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில் பிரிட்டிஷ் பேரரசு (British Empire) உலகின் மிகப்பெரிய பேரரசாக வளர்ந்தது.</p>
<p>விக்டோரியா மகாராணியின் (Queen Victoria) ஆட்சிக்காலத்தில் இந்தியா, ஆபிரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா உட்பட உலகின் பல பகுதிகளில் பிரித்தானியப் பேரரசின் ஆட்சி விரிவடைந்தது.</p>
<p>பின்னர் காலனித்துவத்துக்கு எதிராக உலகம் முழுவதும் எழுச்சியடைந்த சுதந்திரப் போராட்டங்கள் காரணமாக கொலனித்துவத்திலிருந்த பல நாடுகள் சுயாட்சி நாடுகளாக உருவாகின.</p>
<p>இன்றுள்ள பிரித்தானிய முடியாட்சி மிகவும் அடையாளப்பூர்வமானது மட்டுமே!. பாராளுமன்ற ஜனநாயகத்துடன் இணைந்ததுடன், அரசியலமைப்பின் கீழ் இயங்கி வருகிறது. அரசாங்கமே நடைமுறை அரசியல் அதிகாரத்தைக் கொண்டுள்ளது. மன்னராட்சி வெறும் சம்பிரதாயத்துக்காகவே பாதுகாக்கப்படுகிறது. என்றாலும், பிரித்தானியாவில் மன்னர்களுக்கு மிகப் பெரிய கௌரவம் இன்றும் உள்ளது.</p>
<p>பிரித்தானிய முடியாட்சி ஒரே நாளில் உருவான அமைப்பு அல்ல. அது Anglo-Saxon இராச்சியங்களிலிருந்து, Norman ஆட்சியிலிருந்து, பாராளுமன்றப் போராட்டங்களிலிருந்து, பேரரசு விரிவாக்கங்களிலிருந்து மெல்ல மெல்ல உருவான ஆயிரம் ஆண்டுகால அரசியல் பரிணாமத்தின் விளைவாகும்.</p>
<p>சில வரலாற்றாசிரியர்கள் கி.பி. 927ஆம் ஆண்டை அதன் தொடக்கமாகக் குறிப்பிடுகின்றனர். மற்றவர்கள் 1066 Norman Conquest-ஐ முக்கிய திருப்புமுனையாகக் கருதுகின்றனர். என்றாலும், அதிகாரப்பூர்வ “British Monarchy” (பிரித்தானிய பேரரசு) 1707ஆம் ஆண்டு தான் உருவானது என்பதே வரலாற்று உண்மையாகும்.</p>
<p>சு.நிசாந்தன்</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/when-did-the-british-monarchy-originate-it-has-survived-for-a-thousand-years/">பிரித்தானிய மன்னராட்சி வரலாறு எப்போது உருவானது? ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் நிலைத்திருக்கிறது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
