<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Thu, 14 May 2026 13:13:49 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Oruvan.com</title>
	<link>https://oruvan.com/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இலங்கையைச் சூழவுள்ள தாழமுக்க மண்டலம் &#8211; வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/low-pressure-area-surrounding-sri-lanka-meteorological-department-announcement/</link>
					<comments>https://oruvan.com/low-pressure-area-surrounding-sri-lanka-meteorological-department-announcement/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 14 May 2026 13:13:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49388</guid>

					<description><![CDATA[<p>இலங்கையைச் சூழவுள்ள பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, நாட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது காணப்படும் மழை மற்றும் காற்றுடனான காலநிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள இந்தத் தாழ் அமுக்க மண்டலம் இன்னும் அதே பகுதியில் நீடிப்பதாகத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும், இது அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் இலங்கையை விட்டு விலகிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய தினம் (14) மேற்கொள்ளப்பட்ட வானிலை பகுப்பாய்வுகளின்படி, [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/low-pressure-area-surrounding-sri-lanka-meteorological-department-announcement/">இலங்கையைச் சூழவுள்ள தாழமுக்க மண்டலம் &#8211; வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையைச் சூழவுள்ள பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, நாட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது காணப்படும் மழை மற்றும் காற்றுடனான காலநிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.</p>
<p>இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள இந்தத் தாழ் அமுக்க மண்டலம் இன்னும் அதே பகுதியில் நீடிப்பதாகத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p>
<p>எவ்வாறாயினும், இது அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் இலங்கையை விட்டு விலகிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>இன்றைய தினம் (14) மேற்கொள்ளப்பட்ட வானிலை பகுப்பாய்வுகளின்படி, நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பரப்புகளிலும், வங்காள விரிகுடாவின் ஆழமான கடல் பரப்புகளிலும் பலத்த காற்றுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p>
<p>வானிலையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் காரணமாக பொதுமக்கள், குறிப்பாகக் கடற்படை மற்றும் மீனவ சமூகத்தினர் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/low-pressure-area-surrounding-sri-lanka-meteorological-department-announcement/">இலங்கையைச் சூழவுள்ள தாழமுக்க மண்டலம் &#8211; வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://oruvan.com/low-pressure-area-surrounding-sri-lanka-meteorological-department-announcement/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>வடகொரியாவின் ‘டெட் ஹேண்ட்&#8217;: ஜனாதிபதி கிம்முக்கு ஏதாவது நேர்ந்தால் தானாகவே அணு ஆயுத தாக்குதல்</title>
		<link>https://oruvan.com/north-koreas-dead-hand-automatic-nuclear-attack-if-anything-happens-to-president-kim/</link>
					<comments>https://oruvan.com/north-koreas-dead-hand-automatic-nuclear-attack-if-anything-happens-to-president-kim/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 14 May 2026 13:01:55 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[வடகொரியாவின் ‘டெட் ஹேண்ட்']]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49386</guid>

					<description><![CDATA[<p>வட​கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுக்கு ஏதாவது நேர்ந்தால், எதிரி நாடு​கள் மீது தானாகவே அணு ஆயுத தாக்​குதல் நடத்​தப்​படும் என்று அந்த நாடு எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. இது வடகொரி​யா​வின் ‘டெட் ஹேண்ட்&#8217; என்​றழைக்​கப்​படு​கிறது. கடந்த 1980-களில் சோவி​யத் யூனியன் (ரஷ்​யா) ‘டெட் ஹேண்ட்&#8217; என்ற அணு ஆயுத கட்​டளை அமைப்பை உரு​வாக்​கியது. எதிரி நாடுகளின் அணு ஆயுத தாக்​குதலால் ரஷ்யா அழிந்​து, அதன் தலை​வர்​கள் உயி​ரிழந்​தால் ‘டெட் ஹேண்ட்&#8217; தானாக செயல்​பட்டு எதிரி நாடு​கள் மீது [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/north-koreas-dead-hand-automatic-nuclear-attack-if-anything-happens-to-president-kim/">வடகொரியாவின் ‘டெட் ஹேண்ட்&#8217;: ஜனாதிபதி கிம்முக்கு ஏதாவது நேர்ந்தால் தானாகவே அணு ஆயுத தாக்குதல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>வட​கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுக்கு ஏதாவது நேர்ந்தால், எதிரி நாடு​கள் மீது தானாகவே அணு ஆயுத தாக்​குதல் நடத்​தப்​படும் என்று அந்த நாடு எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. இது வடகொரி​யா​வின் ‘டெட் ஹேண்ட்&#8217; என்​றழைக்​கப்​படு​கிறது.</p>
<p>கடந்த 1980-களில் சோவி​யத் யூனியன் (ரஷ்​யா) ‘டெட் ஹேண்ட்&#8217; என்ற அணு ஆயுத கட்​டளை அமைப்பை உரு​வாக்​கியது.</p>
<p>எதிரி நாடுகளின் அணு ஆயுத தாக்​குதலால் ரஷ்யா அழிந்​து, அதன் தலை​வர்​கள் உயி​ரிழந்​தால் ‘டெட் ஹேண்ட்&#8217; தானாக செயல்​பட்டு எதிரி நாடு​கள் மீது அணு ஆயுத தாக்​குதல்​களை நடத்​தும்.</p>
<p>இந்த ‘டெட் ஹேண்ட்&#8217; அணு ஆயுத கட்​டளை அமைப்பை தற்​போதைய ரஷ்ய அரசு நவீன தொழில்​நுட்​பத்​துடன் புதுப்​பித்து வைத்​திருக்​கிறது. இதே பாணி​யில் வடகொரி​யா​வும் ‘டெட் ஹேண்ட்&#8217; அமைப்பை உரு​வாக்கி உள்​ளது.</p>
<p>இதுகுறித்து சர்​வ​தேச பாது​காப்பு நிபுணர்​கள் கூறிய​தாவது:</p>
<p>வடகொரி​யா​வின் அரசமைப்​புச் சட்​டத்​தில் திருத்​தங்​கள் செய்​யப்​பட்டுள்​ளன. இதன்​படி பாது​காப்பு சார்ந்த சட்​டங்​களி​லும் பல்​வேறு திருத்​தங்​கள் செய்​யப்​பட்டு உள்​ளன. குறிப்​பாக ரஷ்​யாவை பின்​பற்றி வடகொரி​யாவிலும் ‘டெட் ஹேண்ட்&#8217; அணு ஆயுத கட்​டளை அமைப்பு உரு​வாக்​கப்​பட்டு உள்​ளது.</p>
<p>எதிரி நாடு​களின் தாக்​குதலில் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுக்கு ஏதாவது நேர்ந்தால் ‘டெட் ஹேண்ட்&#8217; அமைப்பு தானாக செயல்​பட்டு, எதிரி நாடு​களின் மீது அணு ஆயுத தாக்​குதல்​கள் நடத்​தப்​படும்.</p>
<p>அமெரிக்​கா, ஈரான் போர், வெனிசூலா ஜனாதிபதி நிக்​கோலஸ் மதுரோ சிறைபிடிக்​கப்​பட்​டது ஆகிய​வற்றை கருத்​தில் கொண்டு ‘டெட் ஹேண்ட்&#8217; அமைப்பு உரு​வாக்​கப்​பட்​டிருப்​ப​தாக வடகொரியா விளக்​கம் அளித்​திருக்​கிறது. இது மிக​வும் ஆபத்தானது.</p>
<p>ஒரு​வேளை ஜனாதிபதி கிம் ஜாங் உன்​னின் உயிருக்கு அச்​சுறுத்​தல் ஏற்​பட்​டால் ‘டெட் ஹேண்ட்&#8217; அமைப்​பால் தென்​கொரி​யா​வுக்கு மிகப்​பெரிய அளவில் பாதிப்பு ஏற்​படும். வடகொரி​யா​வின் அணு ஆயுதங்​களை சுமந்து செல்​லும் ஹ்வா​சாங் ரக ஏவு​கணை​கள் சுமார் 15,000 கிமீ. தொலைவு சீறிப் பாயக்​கூடியவை என்று கூறப்​படு​கிறது. இதனால் வெகுதொலை​வில் உள்ள அமெரிக்​கா​வின் பாது​காப்​புக்​கும் அச்​சுறுத்​தல் ஏற்​படும். இவ்​வாறு சர்​வ​தேச பாது​காப்​பு நிபுணர்​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.</p>
<p>The post <a href="https://oruvan.com/north-koreas-dead-hand-automatic-nuclear-attack-if-anything-happens-to-president-kim/">வடகொரியாவின் ‘டெட் ஹேண்ட்&#8217;: ஜனாதிபதி கிம்முக்கு ஏதாவது நேர்ந்தால் தானாகவே அணு ஆயுத தாக்குதல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://oruvan.com/north-koreas-dead-hand-automatic-nuclear-attack-if-anything-happens-to-president-kim/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>இலங்கையின் மீன்பிடித் துறையை நவீனமயப்படுத்த ஜப்பான் முழுமையான ஆதரவு</title>
		<link>https://oruvan.com/japan-fully-supports-modernizing-sri-lankas-fishing-industry/</link>
					<comments>https://oruvan.com/japan-fully-supports-modernizing-sri-lankas-fishing-industry/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 14 May 2026 10:53:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கையின் மீன்பிடித் துறை]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49382</guid>

					<description><![CDATA[<p>இலங்கையின் கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ள நவீன தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கத் திட்டங்களுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் ஜப்பான் வழங்கும் என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் இசோமாடா அகியோ (ISOMATA Akio) தெரிவித்துள்ளார். ஜப்பான் தூதுவரின் விசேட அழைப்பின் பேரில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தூதுவரின் உத்தியோகபூர்வ வதிவிடத்திற்கு விஜயம் செய்தார். இந்தச் சந்திப்பின் போது இரு தரப்பினருக்கும் இடையில் சிநேகபூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், அமைச்சர் ஜப்பான் தூதுவருடன் இராப்போசனத்திலும் கலந்துகொண்டார். கலந்துரையாடப்பட்ட [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/japan-fully-supports-modernizing-sri-lankas-fishing-industry/">இலங்கையின் மீன்பிடித் துறையை நவீனமயப்படுத்த ஜப்பான் முழுமையான ஆதரவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையின் கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ள நவீன தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கத் திட்டங்களுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் ஜப்பான் வழங்கும் என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் இசோமாடா அகியோ (ISOMATA Akio) தெரிவித்துள்ளார்.</p>
<p>ஜப்பான் தூதுவரின் விசேட அழைப்பின் பேரில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தூதுவரின் உத்தியோகபூர்வ வதிவிடத்திற்கு விஜயம் செய்தார்.</p>
<p>இந்தச் சந்திப்பின் போது இரு தரப்பினருக்கும் இடையில் சிநேகபூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், அமைச்சர் ஜப்பான் தூதுவருடன் இராப்போசனத்திலும் கலந்துகொண்டார்.</p>
<p>கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள் இந்தச் சந்திப்பின் போது பின்வரும் முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.</p>
<p>ஜப்பான் அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் நிதியுதவித் திட்டங்கள் மற்றும் அவற்றை மேலும் வலுப்படுத்துவது குறித்து அமைச்சர் விளக்கமளித்தார்.</p>
<p>கடற்றொழில் அமைச்சின் எதிர்கால இலக்குகள் மற்றும் இலங்கையின் கடல் வளங்களை வினைத்திறனாகப் பயன்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து அமைச்சர் தூதுவரிடம் எடுத்துரைத்தார்.</p>
<p>கடற்றொழில் துறையில் ஜப்பான் பெற்றுள்ள நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களை இலங்கையிலும் அறிமுகப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.</p>
<p>ஜப்பான் தூதுவரின் உறுதிமொழி அமைச்சரின் விளக்கங்களைக் கேட்டறிந்த ஜப்பான் தூதுவர், இலங்கையின் கடற்றொழில் துறையை நவீனமயப்படுத்துவதற்கும், புதிய புத்தாக்கத் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கும் ஜப்பான் அரசாங்கம் எப்போதும் தயாராக இருப்பதாகவும், அதற்கான முழுமையான ஒத்துழைப்புகள் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.</p>
<p>இலங்கை மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்தச் சந்திப்பு அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.</p>
<p>இதன்போது, அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே.கோலித்த கமல் ஜினதாச, அமைச்சரின் பிரத்யேக செயலாளர் ஸ்ரீதரன் பூலோகராஜா, அமைச்சரின் இணைப்பு செயலாளர் கேசன் மதுசங்க ஆகியோரும் உடனிருந்தனர்.</p>
<p><img fetchpriority="high" decoding="async" class="alignnone size-full wp-image-49384" src="https://oruvan.com/wp-content/uploads/2026/05/1001756282.jpg" alt="" width="869" height="522" /></p>
<p>The post <a href="https://oruvan.com/japan-fully-supports-modernizing-sri-lankas-fishing-industry/">இலங்கையின் மீன்பிடித் துறையை நவீனமயப்படுத்த ஜப்பான் முழுமையான ஆதரவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://oruvan.com/japan-fully-supports-modernizing-sri-lankas-fishing-industry/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>“தைவானால் சீனா &#8211; அமெரிக்கா இடையே மோதல் ஏற்படக்கூடும்” &#8211; ட்ரம்ப்பிடம் சீன ஜனாதிபதி எச்சரிக்கை</title>
		<link>https://oruvan.com/taiwan-could-lead-to-conflict-between-china-and-the-us-chinese-president-warns-trump/</link>
					<comments>https://oruvan.com/taiwan-could-lead-to-conflict-between-china-and-the-us-chinese-president-warns-trump/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 14 May 2026 10:51:32 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சீனா - அமெரிக்கா உறவு]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49379</guid>

					<description><![CDATA[<p>சீனா &#8211; அமெரிக்கா உறவுகளில் மிக முக்கிய விடயமாக இருக்கும் தைவான் விவகாரத்தை சரியாக கையாளாவிட்டால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல்களும் சண்டைகளும் ஏற்பட்டு, ஒட்டுமொத்த உறவும் பெரும் ஆபத்தில் சிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். மூன்று நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று சீனா சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெய்ஜிங் சர்வதேச விமான நிலையத்தில் அவரை, [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/taiwan-could-lead-to-conflict-between-china-and-the-us-chinese-president-warns-trump/">“தைவானால் சீனா &#8211; அமெரிக்கா இடையே மோதல் ஏற்படக்கூடும்” &#8211; ட்ரம்ப்பிடம் சீன ஜனாதிபதி எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சீனா &#8211; அமெரிக்கா உறவுகளில் மிக முக்கிய விடயமாக இருக்கும் தைவான் விவகாரத்தை சரியாக கையாளாவிட்டால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல்களும் சண்டைகளும் ஏற்பட்டு, ஒட்டுமொத்த உறவும் பெரும் ஆபத்தில் சிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.</p>
<p>மூன்று நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று சீனா சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெய்ஜிங் சர்வதேச விமான நிலையத்தில் அவரை, சீன துணை ஜனாதிபதி ஹான் ஜெங் வரவேற்றார்.</p>
<p>இதையடுத்து, ஜி ஜின்பிங்கை, டொனால்ட் ட்ரம்ப் இன்று சந்தித்தார்.</p>
<p>இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது ஜி ஜின்பிங் தெரிவித்த கருத்துக்கள் குறித்து சீன அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹுவா வெளியிட்டுள்ள செய்தியில், “டொனால்ட் ட்ரம்ப்புடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, தைவான் ஜலசந்தியில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் பாதுகாப்பதே சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மிகப் பெரிய பொதுவான காரணியாகும் என்று ஜி ஜின்பிங் தெரிவித்தார்.</p>
<p>சீன &#8211; அமெரிக்க உறவுகளில் தைவான் பிரச்சினை மிக முக்கியமான விடயம் என்று குறிப்பிட்ட ஜி ஜின்பிங், அது சரியாகக் கையாளப்பட்டால் இரு தரப்பு உறவு ஸ்திரத்தன்மையை அனுபவிக்கும் என அவர் கூறினார்.</p>
<p>இல்லாவிட்டால், இரு நாடுகளுக்கும் இடையே மோதல்களும் சண்டைகளும் ஏற்பட்டு, ஒட்டுமொத்த உறவும் பெரும் ஆபத்தில் சிக்கும் என்றும் ஜி ஜின்பிங் கூறினார். மேலும், தைவான் சுதந்திரமும் தைவான் ஜலசந்தியில் அமைதி நிலவுவதும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை என்றும் அவர் வலியுறுத்தினார்.</p>
<p>சீன &#8211; அமெரிக்க பொருளாதார உறவுகள் பரஸ்பரம் நன்மை பயக்கக்கூடியவை இரு தரப்புக்கும் வெற்றியைத் தரக்கூடியவை எனத் தெரிவித்த ஜி ஜின் பிங், இரு நாட்டு வர்த்தக குழுக்களிடையே நேற்று நடைபெற்ற கூட்டத்தில், சமநிலையான, சாதகமான முடிவுகள் எட்டப்பட்டிருப்பது இரு நாட்டு மக்களுக்கும் உலகுக்கும் நல்ல செய்தி என கூறினார்.</p>
<p>வர்த்தக போர்களில் யாருக்கும் வெற்றி கிடைக்காது என்பதை கடந்த கால சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளன என தெரிவித்த ஜின்பிங், கருத்து வேறுபாடுகளும் உராய்வுகளும் இருக்கும் இடங்களில் சமமான ஆலோசனை மட்டுமே சரியான தேர்வாக இருக்கும் என்றார்.</p>
<p>நாம் கடினமாக உழைத்து உருவாக்கியுள்ள இந்த நல்ல உறவை; உத்வேகத்தை இரு தரப்பினரும் கூட்டாக தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஜி ஜின்பிங் கேட்டுக்கொண்டார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/taiwan-could-lead-to-conflict-between-china-and-the-us-chinese-president-warns-trump/">“தைவானால் சீனா &#8211; அமெரிக்கா இடையே மோதல் ஏற்படக்கூடும்” &#8211; ட்ரம்ப்பிடம் சீன ஜனாதிபதி எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://oruvan.com/taiwan-could-lead-to-conflict-between-china-and-the-us-chinese-president-warns-trump/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>எரிபொருள் விலை 720 ரூபா &#8211; ஜனாதிபதி மறைமுக அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/fuel-price-to-be-720-rupees-presidents-indirect-announcement/</link>
					<comments>https://oruvan.com/fuel-price-to-be-720-rupees-presidents-indirect-announcement/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Wed, 13 May 2026 12:29:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[எரிபொருள் விலை]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49373</guid>

					<description><![CDATA[<p>எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதே அரசாங்கத்தின் இலக்கு என்றும், அதற்கமைய எரிபொருள் விலையை அதிகரிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். உலகச் சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக, நாட்டில் ஒரு லீற்றர் டீசல் விலை 720 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இருப்பினும், அரசாங்கம் ஒரு லீற்றர் டீசலுக்கு 100 ரூபாய் செலவிட்டு, [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/fuel-price-to-be-720-rupees-presidents-indirect-announcement/">எரிபொருள் விலை 720 ரூபா &#8211; ஜனாதிபதி மறைமுக அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதே அரசாங்கத்தின் இலக்கு என்றும், அதற்கமைய எரிபொருள் விலையை அதிகரிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.</p>
<p>நுவரெலியா மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். உலகச் சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக, நாட்டில் ஒரு லீற்றர் டீசல் விலை 720 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p>
<p>இருப்பினும், அரசாங்கம் ஒரு லீற்றர் டீசலுக்கு 100 ரூபாய் செலவிட்டு, 392 ரூபாய் என்ற விலையில் மக்களுக்கு வழங்கி வருவதால் எரிபொருள் கூட்டுத்தாபனம் நட்டத்தைச் சந்தித்து வருவதாகவும், இதனை நீண்ட காலத்திற்கு முன்னெடுக்க முடியாது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.</p>
<p>அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:</p>
<p>&#8220;பெப்ரவரி மாதத்தில் எரிபொருள் இறக்குமதிக்காக 98 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டது. மார்ச் மாதத்தில் 216 மில்லியன் டொலர்களும், ஏப்ரல் மாதத்தில் 368 மில்லியன் டொலர்களும் செலவாகியுள்ளன. மே மாதத்தில் 522 மில்லியன் டொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 6 மடங்குக்கும் அதிகமான எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. நாம் ஒரு சவாலுடன் தான் பொருளாதாரத்தை நிர்வகிக்க வேண்டியுள்ளது.</p>
<p>டீசல் லீற்றர் ஒன்றின் விலை சுமார் 720 ரூபாய் என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்திருந்தது. ஆனால் நாம் 392 ரூபாய்க்கு வழங்குகிறோம். அரசாங்கம் 100 ரூபாய் சுமையை ஏற்கிறது. அப்போது கூட்டுத்தாபனத்திற்கு 492 ரூபாய் கிடைக்கிறது. அங்கேயும் அவர்களுக்குப் பெரிய நட்டம் உள்ளது. அந்த நட்டத்தை ஈடுசெய்ய வேண்டும். கடந்த கால அரசாங்கங்களின் முறையற்ற நிர்வாகத்தால் ஏற்பட்ட 84 பில்லியன் ரூபாய் நட்டத்தை அரசாங்கமே ஏற்றுள்ளது.</p>
<p>மின்சாரக் கட்டணமும் அப்படித்தான். எரிபொருள் விலை அதிகரிப்பால் இன்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கும் நாம் ஒரு நிவாரணத்தை வழங்குவோம். மின்சாரக் கட்டணம் 18% ஆல் அதிகரிக்கப்பட்ட போது, 95% மக்களுக்கு அந்த அதிகரிப்பு பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 5% மானவர்களுக்கு மாத்திரமே கட்டணம் அதிகரித்தது.</p>
<p>ஆனால் திறைசேரியிலிருந்து தொடர்ச்சியாகப் பணம் வழங்கி எரிபொருள் கூட்டுத்தாபனம் மற்றும் மின்சார சபையைப் பராமரிக்க முடியாது. அவற்றை வினைத்திறன் மிக்கதாக மாற்ற வேண்டும்.</p>
<p>எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் இலக்கு எமக்கு உள்ளது. அதிக விலைக்கு எரிபொருள் இறக்குமதி செய்யப்படும் போது, பழைய முறையிலேயே பயன்பாடு இருந்தால் டொலர்கள் வெளியேறுவது அதிகரிக்கும். எனவே தான் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் சில தீர்மானங்களை எடுத்துள்ளோம். எரிபொருள் தொடர்பான தீர்வுகளை விரைவில் வழங்க முயற்சிப்போம்.&#8221; எனத் தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/fuel-price-to-be-720-rupees-presidents-indirect-announcement/">எரிபொருள் விலை 720 ரூபா &#8211; ஜனாதிபதி மறைமுக அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://oruvan.com/fuel-price-to-be-720-rupees-presidents-indirect-announcement/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய்​ வெற்றி</title>
		<link>https://oruvan.com/chief-minister-vijay-wins-trust-vote/</link>
					<comments>https://oruvan.com/chief-minister-vijay-wins-trust-vote/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Wed, 13 May 2026 10:51:56 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Chief Minister Vijay wins trust vote]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49369</guid>

					<description><![CDATA[<p>தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய்​ தலைமையிலான தவெக அரசு வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் பதிவாகின. 5 பேர் நடுநிலை வகித்தனர். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உரையாற்றினார்கள். எதிர்க்கட்சியான திமுக நம்பிக்கை வாக்கெடுப்பில் இருந்து வெளிநடப்பு செய்தது. இதனையடுத்து, அரசியல் கட்சிகளின் தலைவர்களின் கருத்துக்கு முதல்வர் விஜய் பதிலளித்தார். இதனையடுத்து, பேரவை 99 உள்விதி 5இன் கீழ் எண்ணிக் கணிக்கும் முறையில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/chief-minister-vijay-wins-trust-vote/">நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய்​ வெற்றி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய்​ தலைமையிலான தவெக அரசு வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் பதிவாகின. 5 பேர் நடுநிலை வகித்தனர்.</p>
<p>இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உரையாற்றினார்கள். எதிர்க்கட்சியான திமுக நம்பிக்கை வாக்கெடுப்பில் இருந்து வெளிநடப்பு செய்தது. இதனையடுத்து, அரசியல் கட்சிகளின் தலைவர்களின் கருத்துக்கு முதல்வர் விஜய் பதிலளித்தார்.</p>
<p>இதனையடுத்து, பேரவை 99 உள்விதி 5இன் கீழ் எண்ணிக் கணிக்கும் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார். இதனையடுத்து சட்டப்பேரவை உறுப்பினர்களை 6 பகுதிகளாக பிரித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.</p>
<p>இதில் ஒவ்வொரு பகுதிகளாக ஒவ்வொரு உறுப்பினரின் பெயரையும் குறிப்பிட்டு சபாநாயகர் அழைத்தார். இதில் முதலில் தீர்மானத்தை ஆதரிப்போர் எழுந்து நிற்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. அடுத்ததாக எதிர்ப்பு தெரிவிப்போர், நடுநிலை வகிப்போர் எழுந்து நிற்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். இதன் அடிப்படையில் நம்பிக்கை தீர்மானத்துக்கான வாக்குகள் எண்ணப்பட்டன.</p>
<p>இந்த தீர்மானத்தில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணி ஆதரித்தது. வேலுமணி தரப்பில் ஹரி, எஸ்.காமராஜ், சி.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், இசக்கி சுப்பையா, இரா.காமராஜ், சத்தியபாமா, லீமா ரோஜ், மரகதம் குமரவேல்,சுகுமார், சேகர், திலீபன் ஜெய்சங்கர், நட்ராஜ், நத்தம் விஸ்வநாதன், க.மோகன், ரவி மனோகரன், ராகேஷ், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, ஜெயக்குமார், அருள்மொழித் தேவன், சி.வி.சண்முகம், பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்டோர் அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.</p>
<p>எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஓ.எஸ்.மணியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கருப்பண்ணன், இ.சி.கோவிந்தராஜன், சு.பழனிசாமி, ராமச்சந்திரன், உஷாராணி, ஜெயசுதா, சம்பத் குமார், தளவாய் சுந்தரம், நல்லதம்பி, ராஜசேகர், ராஜேந்திரன், கோ.வெங்கடாசலம், வெற்றிவேல், வேலழகன், ஜெயசங்கரன் உள்ளிட்டோர் தீர்மானத்தை எதிர்த்தனர். பாமக, பாஜக இந்த வாக்கெடுப்பில் நடுநிலை வகித்தது.</p>
<p>இதன் அடிப்படையில் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் பதிவாகின. 5 பேர் நடுநிலை வகித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.</p>
<p>நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது என்ன?- புதி​தாக ஆட்சி பொறுப்​பேற்​றுள்ள முதல்வர் விஜய்​ தலைமையிலான தவெக அரசு மீதான பெரும்பான்மையை நிரூபிப்​ப​தற்​கான வாக்​கெடுப்புக்காக சட்டப்​பேர​வை இன்று (13) காலை 9.30 மணியளவில் கூடியது.</p>
<p>அவை கூடியதும், தமிழக முதல்வர் விஜய், நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முன்மொழிந்தார். அதன் மீது வாக்கெடுப்பு நடப்பதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார். அதன்பின்னர், பேரவையில் விவாதம் தொடங்கியது.</p>
<p>தொடர்ந்து காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் – கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ் குமார் தவெக அரசுக்கு ஆதரவை அறிவித்தார். அவர் பேசுகையில், “தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்க தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், மதச்சார்பற்ற கட்சிகளிடம் மட்டுமே விஜய் ஆதரவு கோரினார்.</p>
<p>அந்த வகையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, ஐயூஎம்எல் என்ற மதச்சார்பற்ற கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு வழங்கியது.</p>
<p>பெரிய கனவுகளுடன் தமிழகத்தில் காலூன்ற விரும்பிய பாஜக ஓரிடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்தச் சூழலில் நிலையான, மதச்சார்பற்ற ஆட்சி வேண்டும் என்பதற்காக தவெக அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது. எங்களின் தலைவர் ராகுல் காந்தியின் வழிகாட்டுதலின்படி தவெக அரசுக்கு என்றும் உறுதுணையாக இருப்போம்,” என்றார்.</p>
<p>தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ் கட்சி எம்எல்ஏ செல்லசாமி பேசுகையில், “தவெக-வை தனிப்பெரும் கட்சியாக தமிழக மக்கள் தேர்வு செய்துள்ளனர். தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதற்காக தவெகவை சிபிஎம் ஆதரிக்கிறது. இந்த அரசு மதச்சார்பின்மை, கூட்டாட்சி, தமிழக சட்டமன்றத்தின் மான்புகளை உயர்த்திப் பிடிக்க வேண்டி இந்த அரசுக்கு முழுமையான ஆதரவைத் தெரிவிக்கிறேன்,” என்றார்.</p>
<p>விசிக எம்எல்ஏ வன்னியரசு பேசுகையில், “தவெக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்று 5 ஆண்டுகள் ஆட்சியை வெற்றிகரமாக நடத்தும் என நான் நம்புகிறேன். முன்கூட்டியே அதற்கு வாழ்த்துகிறேன். பாஜகவின் செயல்திட்டமான ஆளுநர் ஆட்சியைத் தடுக்கும் வகையில் தவெகவுக்கு விசிக ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. தவெக அரசு தொகுதி மறுவரையறைக்கு எதிராக செயல்பட வேண்டும், தமிழகத்தில் ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று கோருகிறோம். மகளிர் உரிமைத் திட்டம், காலை உணவுத் திட்டம் போன்ற முந்தைய நலத் திட்டங்கள் தொடர வேண்டும்” என்றார்.</p>
<p>ஐயூஎம்எல்ஏ எம்எல்ஏ ஷாஜஹான் பேசுகையில், “மக்களின் மௌனப் புரட்சி இப்படியொரு மாற்றத்தை ஏற்படுத்தியது ஒரு வரலாற்று ஆச்சர்யம் தான். வழிபாட்டுத் தலங்கள், பள்ளிக் கூடங்கள், மக்கள் கூடும் இடங்களுக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடைகள் மூடலை வரவேற்கிறோம். மதச்சார்பின்மையை நிலைநாட்ட வேண்டும் என்று இந்த அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறோம். முதல்வர் விஜய் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்தது வாழ்த்துகளுக்கு உரியது” என்றார்.</p>
<p>அமமுக சார்பில் மன்னார்குடியில் போட்டியிட்டு வென்ற எம்எல்ஏ காமராஜ் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தார். அவர் பேசுகையில், “முதல்வர் விஜய்யை ஆளுமை மிக்கவராக தமிழக மக்கள் பார்க்கின்றனர். அதனாலேயே திருச்சியில் 400 ரவுடிகள் சரணடைந்துள்ளனர். தவெகவுக்கு நேற்றும், இன்றும், நாளையும் எனது ஆதரவு உண்டு,” என்றார்.</p>
<p>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ தளி ராமச்சந்திரன் பேசுகையில், ”குடியரசுத் தலைவர் ஆட்சி மூலம் பாஜக கொல்லைப்புறம் வழியாக தமிழகத்தில் ஆட்சி செலுத்திவிடக் கூடாது என்பதற்காக ஆதரவு அளித்துள்ளோம். ஒன்றிய அரசு மாநில உரிமை, சமூக நீதிக்கு எதிராக செயல்படுகிறது. அதற்கு எதிராக முதல்வர் விஜய் துணிவோடு செயல்பட வேண்டும் என்று வேண்டுகிறேன்” என்றார்.</p>
<p>பிரேமலதா கண்டனம்:</p>
<p>தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பேசுகையில், “எதிர்க்கட்சிகளை எதிரி கட்சியாக நினைக்காமல் அனைவரையும் சந்தித்து ஒரு மாண்பை கடைப்பிடித்துள்ளீர்கள். அதற்கு வாழ்த்துகள். முதலில் 717 மதுக்கடைகளை மூடியது வரவேற்கத்தக்கது.</p>
<p>அதேவேளையில், இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் நடைபெறாத குதிரை பேரம் நடந்ததாக வரும் தகவல்களால் நான் மனவேதனை அடைகிறேன். ஜோதிடர் ராதன் பண்டிட்டை அரசு அதிகாரியாக நியமித்ததை தமிழக மக்கள் சார்பாக கண்டிக்கிறேன். இதன்மூலம் தமிழக இளைஞர்களுக்கு நீங்கள் என்ன செய்தி சொல்ல வருகிறீர்கள் என்பதை நீங்கள் (விஜய்) தெளிவுபடுத்த வேண்டும். இந்த அரசு இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறேன்.” என்றார்.</p>
<p>இன்று ஒற்றைத் தாமரைதான்…</p>
<p>பாஜக எம்எல்ஏ போஜராஜன் பேசுகையில், “நம்பிக்கை தீர்மானத்தில் எம் எல் ஏக்கள் அனைவரும் உணர்ச்சிவசப்பட்டு பாஜகவுக்கு எதிரான பிரச்சாரம் போல் பேசிவிட்டார்கள். நான் ஒற்றைத் தாமரை என்றார்கள். நாடாளுமன்றத்தில் 2 பாஜக உறுப்பினர்கள் மட்டுமே ஒரு காலத்தில் இருந்தனர். இன்று மத்தியிலும், பல்வேறு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் இருக்கிறது,” என்றார். நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பாஜக நடுநிலை காத்தது.</p>
<p>வாக்கெடுப்பில் விலகி நின்ற பாமக:</p>
<p>பாமக எம் எல் ஏ சவுமியா அன்புமணி பேசுகையில், “சமூக நீதி, ஜனநாயகம், சமத்துவம் என்பதே பாமகவின் கொள்கை. போதையில்லா தமிழ்நாடு என்பது பாமகவின் நிலைப்பாடு. பாமக கொள்கைகள் தமிழக நலனை முன்னிறுத்துவது ஆகும். தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்க வேண்டும். விகித்தாச்சார பிரதிநித்துவத்தை ஏற்படுத்த வேண்டும். தனியார் வேலைவாய்ப்பில் 80% தமிழக இளைஞர்களுக்கு வழங்க சட்டம் இயற்றுதல் உள்ளிட்டவை பாமகவின் நோக்கங்கள். தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பாமக கொள்கைகளை ஒத்துப்போகும் வாக்குறுதிகள் இருந்தன. தமிழக முன்னேற்றத்திலும், நலனிலும் அக்கறை கொண்டு பாமக வாக்களிப்பதிலிருந்து விலகி நிற்கிறது,” என்றார். பாமகவுக்கு 4 எம்எல்ஏக்கள் உள்ளனர்.</p>
<p>தவெக அரசுக்கு அதிமுக ஆதரவில்லை: இபிஎஸ்</p>
<p>இபிஎஸ் – தவெக அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்தை எதிர்ப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இது குறித்து அவர் பேசுகையில், “அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி 47 பேர் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற்றுள்ளனர். தவெக அரசுக்கு 65% வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை என்பதை நினைவு கூற விரும்புகிறேன்.</p>
<p>அதிமுக அரசின் ஆட்சி காலத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வந்தது. அரசுப் பள்ளியில் கல்வி கற்கும் ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவக் கல்வி கற்க நீட் தேர்வை எதிர்கொள்ள 7.5 % உள் இடஒதுக்கீடு கொண்டு வந்தது. மேலும், அவர்களின் குடும்பச் சூழலை கருத்தில் கொண்டு அவர்களுக்கான கல்விச் செலவுகளையும் அரசு ஏற்றது.</p>
<p>அதிமுகவில் 47 சட்டமன்ற உறுப்பினர்கள் இரட்டை இலை சின்னத்தில் நின்று எம்எல்ஏக்கள் ஆகியுள்ளனர், அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவதாகக் கூறி ஆளுங்கட்சியினர் தங்கள் பக்கம் ஈர்க்க முயற்சிப்பதாக தகவல் கிடைக்கிறது. இதனை தூய சக்தி என்று தன்னை கூறிக் கொள்ளும் முதல்வர் விஜய் ஏற்கக் கூடாது,” என்று பழனிசாமி கூறினார்.</p>
<p>திமுக வெளிநடப்பு:</p>
<p>நம்பிக்கை வாக்கெடுப்பிலிருந்து திமுக வெளிநடப்பு செய்தது. சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகக் கண்டித்தார். மேலும், திமுக அரசு கொண்டு வந்த மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டும், காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டங்கள் தொடர வேண்டும் என்றார்.</p>
<p>முன்னதாக, தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தமிழக வெற்​றிக் கழகம் ​(தவெக) 108 தொகு​தி​களில் வெற்​றி பெற்​றது. தனிப் பெரும்பான்​மைக்கு தேவை​யான 118 இடங்​கள் கிடைக்​காத​தால் காங்கிரஸ், இடது​சா​ரி​கள், விசிக, ஐயூஎம்​எல் ஆகிய திமுக கூட்டணி கட்​சிகளிடம் விஜய் ஆதரவு கோரி​னார். அதில் 5 எம்எல்ஏக்​களை கொண்ட காங்​கிரஸ், திமுக கூட்​ட​ணியை முறித்து கொண்டு தவெக​வுக்கு ஆதரவு அளித்​தது.</p>
<p>மேலும் தவெக​வுக்கு நிபந்​தனையற்ற ஆதரவு அளிப்​ப​தாக தலா 2 எம்​எல்​ஏக்​களை கொண்ட இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட், விசிக, இந்​திய யூனியன் முஸ்​லீம் லீக் ஆகிய கட்​சிகள் அறிவித்தன. இதன்​மூலம் தவெக​வின் பலம் 120-ஆக உயர்ந்​தது. ஆட்சி அமைக்​கத் தேவை​யான பெரும்​பான்மை எண்​ணிக்கை கிடைத்​த​தால் கடந்த 10-ம் திகதி தமிழக முதல்​வ​ராக விஜய் பதவியேற்றார். 9 அமைச்​சர்​களும் பதவி ஏற்​றனர்.</p>
<p>அதைத் தொடர்ந்து சட்​டப்​பேரவை தற்​காலிக தலை​வ​ராக கருப்பையா நியமிக்​கப்​பட்​டார். பின்​னர் நேற்று முன்​தினம் நடை​பெற்ற 17-வது சட்​டப்​பேர​வை​யின் முதல் கூட்​டத்​தொடரில் முதல்வர் விஜய், அமைச்​சர்​கள் உட்பட 233 எம்​எல்​ஏக்​கள் பதவியேற்​றுக் கொண்​டனர்.</p>
<p>இந்​நிலை​யில், புதி​தாக பொறுப்​பேற்​றுள்ள தவெக அரசு தனது பெரும்​பான்​மையை சட்​டப்​பேர​வை​யில் மே 13-ம் திகதிக்குள் ​(இன்று) நிரூபிக்க வேண்​டும் என்று ஆளுநர் அர்​லேகர் ஏற்​கெனவே உத்​தர​விட்​டிருந்தார்.</p>
<p>அதன்​படி தவெக அரசு பெரும்​பான்​மையை நிரூபிக்​கும் தீர்​மானம் சட்​டப்​பேர​வை​யில் இன்று கொண்டு வரப்​பட்டு வாக்​கெடுப்பு நடை​பெற்றது. இதில் தவெக அரசு பெரும்பான்மையை நிறைவேற்றியது.</p>
<p>The post <a href="https://oruvan.com/chief-minister-vijay-wins-trust-vote/">நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய்​ வெற்றி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://oruvan.com/chief-minister-vijay-wins-trust-vote/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>அமெரிக்கா, ஸ்பெயின் மோதல் &#8211; நேட்டோ கூட்டணிக்குள் பிளவு ; ஸ்பெயின் நேட்டோவில் இருந்து வெளியேற்றப்படுமா?</title>
		<link>https://oruvan.com/us-spain-clash-split-within-nato-alliance-will-spain-be-expelled-from-nato/</link>
					<comments>https://oruvan.com/us-spain-clash-split-within-nato-alliance-will-spain-be-expelled-from-nato/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Wed, 13 May 2026 10:48:43 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நேட்டோ கூட்டணி]]></category>
		<category><![CDATA[ஸ்பெயின்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49364</guid>

					<description><![CDATA[<p>உலக அரசியலில் கடந்த சில மாதங்களாக பெரும் கவனத்தை ஈர்த்து வரும் விவகாரங்களில் ஒன்றாக அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் இடையிலான பாதுகாப்பு மற்றும் அரசியல் மோதல் மாறியுள்ளது. ஒருகாலத்தில் நெருக்கமான நட்பு நாடுகளாக கருதப்பட்ட இந்த இரண்டு நாடுகளுக்கிடையே தற்போது உருவாகியிருக்கும் பதற்றம், வட அட்லாண்டிக் பாதுகாப்புக் கூட்டணியான நேட்டோ  (NATO) அமைப்பின் எதிர்காலம் குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது. “ஸ்பெயின் நேட்டோவில் இருந்து வெளியேற்றப்படலாம்”, “அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகளை பரிசீலிக்கிறது”, “ஐரோப்பா அமெரிக்காவிலிருந்து விலக முயல்கிறது” போன்ற [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/us-spain-clash-split-within-nato-alliance-will-spain-be-expelled-from-nato/">அமெரிக்கா, ஸ்பெயின் மோதல் &#8211; நேட்டோ கூட்டணிக்குள் பிளவு ; ஸ்பெயின் நேட்டோவில் இருந்து வெளியேற்றப்படுமா?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>உலக அரசியலில் கடந்த சில மாதங்களாக பெரும் கவனத்தை ஈர்த்து வரும் விவகாரங்களில் ஒன்றாக அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் இடையிலான பாதுகாப்பு மற்றும் அரசியல் மோதல் மாறியுள்ளது.</p>
<p>ஒருகாலத்தில் நெருக்கமான நட்பு நாடுகளாக கருதப்பட்ட இந்த இரண்டு நாடுகளுக்கிடையே தற்போது உருவாகியிருக்கும் பதற்றம், வட அட்லாண்டிக் பாதுகாப்புக் கூட்டணியான நேட்டோ  (NATO) அமைப்பின் எதிர்காலம் குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.</p>
<p>“ஸ்பெயின் நேட்டோவில் இருந்து வெளியேற்றப்படலாம்”, “அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகளை பரிசீலிக்கிறது”, “ஐரோப்பா அமெரிக்காவிலிருந்து விலக முயல்கிறது” போன்ற செய்திகள் உலக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன.</p>
<p>இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், 1949 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பு, மேற்கத்திய நாடுகளின் பாதுகாப்புக் கூட்டணியாக உருவானது. இதன் அடிப்படை நோக்கம், சோவியத் ஒன்றியத்தின் விரிவாக்கத்தை தடுக்க மேற்கத்திய நாடுகளை ஒருங்கிணைப்பதாகும்.</p>
<p><img decoding="async" class="alignnone  wp-image-49367" src="https://oruvan.com/wp-content/uploads/2026/05/71674867_603.jpg" alt="" width="1161" height="654" /></p>
<p>இந்தக் கூட்டணியின் மிக முக்கியமான விதியாக Article 5 கருதப்படுகிறது. அதன்படி, “ஒரு உறுப்பு நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதல், அனைத்து உறுப்பு நாடுகளின் மீதானத் தாக்குதலாகக் கருதப்படும்”. இந்தக் கொள்கை காரணமாகவே நேட்டோ உலகின் மிக சக்திவாய்ந்த இராணுவக் கூட்டணியாக வளர்ந்தது.</p>
<p>அமெரிக்கா இந்தக் கூட்டணியின் முக்கிய நிதி ஆதார சக்தியாக உள்ளது. இராணுவத் தொழிநுட்பம், பாதுகாப்பு நிதி, அணு ஆயுத திறன் மற்றும் உலகளாவிய இராணுவத் தளங்கள் ஆகிய அனைத்திலும் அமெரிக்கா முன்னிலை வகிக்கிறது.</p>
<p>ஸ்பெயின் 1982 ஆம் ஆண்டு நேட்டோவில் இணைந்தது. ஆரம்பத்தில் சில அரசியல் எதிர்ப்புகள் இருந்த போதிலும், பின்னர் அது ஐரோப்பிய பாதுகாப்புக் கட்டமைப்பில் முக்கிய உறுப்பினராக மாறியது.</p>
<p>இந்த நிலையில் தான் அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் இடையே உருவாகியுள்ள பாதுகாப்பு மற்றும் அரசியல் கருத்து மோதல், தற்போது நேட்டோ கூட்டணிக்குள் பாரிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>நேட்டோ அமைப்பில் முக்கிய உறுப்பினராக உள்ள ஸ்பெயின், பாதுகாப்புச் செலவின உயர்வு மற்றும் மத்திய கிழக்கு இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்காவுடன் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளது.</p>
<p><img decoding="async" class="alignnone size-full wp-image-49366" src="https://oruvan.com/wp-content/uploads/2026/05/trump-and-nato-scaled-1.jpg" alt="" width="2560" height="1463" /></p>
<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், நேட்டோ நாடுகள் தங்களின் பாதுகாப்புச் செலவினத்தை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றமை, நேட்டோவின் அனுமதி இன்றிய ஈரான் தொடர்பான இராணுவ நடவடிக்கைகள், அமெரிக்காவின் கடும் அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் இந்த மோதல் போக்கு அதிகரித்துள்ளது.</p>
<p>அத்துடன், நேட்டோ நாடுகள் தங்கள் GDP-இன் 5 சதவீதத்தை பாதுகாப்புக்காகச் செலவிட வேண்டும்,  அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் பாதுகாப்புச் சுமையை  மற்ற நாடுகளும் பகிர வேண்டும், ஐரோப்பிய நாடுகள் அமெரிக்கப் பாதுகாப்பின் கீழ் ‘இலவசப் பயணம்’ செய்யக்கூடாது போன்ற டிரம்பின் கருத்துகள் ஐரோப்பிய நாடுகளின் கௌரவத்துக்கும் பாதிப்பாக உள்ளதால் இவ்வாறு கருத்து மோதல்கள் வலுப்பெற்றுள்ளன.</p>
<p>பெட்ரோ சான்செஸ் (Pedro Sánchez) தலைமையிலான ஸ்பெயின் அரசு, அமெரிக்காவின் இந்தக் கோரிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.  பொருளாதார அழுத்தங்கள், வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் சமூக நலத் திட்டங்களுக்கானச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், பாதுகாப்புச் செலவை பெரிதும் உயர்த்துவது சாத்தியமற்றது என ஸ்பெயின் தெரிவித்துள்ளது.</p>
<p>ஸ்பெயின் அரசியல் அமைப்பில் இடதுசாரி மற்றும் சமூகநலக் கொள்கைகளுக்கு ஆதரவு அதிகமாக உள்ளது. கல்வி, சுகாதாரம், சமூக நலன் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கருத்து ஸ்பெயினில் நீண்டகாலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக “அதிக இராணுவமயமாக்கல்” குறித்து மக்களிடையே கடும் எதிர்ப்புகள் உள்ளன.</p>
<p>நீண்டகாலமாக அமெரிக்கா &#8211; ஸ்பெயின் இடையில் இதுகுறித்து கருத்து மோதல்கள் இருந்துவந்தப் போதிலும், ஈரான் மீதான அமெரிக்காவின் தன்னிச்சயான தாக்குதல் இந்த மோதலை தீவிரப்படுத்தியதில் முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.</p>
<p>மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது இராணுவ முன்னெடுப்புகளை அதிகரித்தபோது, ஸ்பெயினில் அமைந்துள்ள அமெரிக்க &#8211; ஸ்பெயின் கூட்டு இராணுவத் தளங்களான Rota மற்றும் Morón தளங்களை முழுமையாகப் பயன்படுத்த அமெரிக்கா எதிர்பார்த்த போதிலும் அதற்கு ஸ்பெயின் மறுப்புத் தெரிவித்துவிட்டது.</p>
<p>இந்த நிலையிலேயே, ஸ்பெயினை நேட்டோவில் இருந்து இடைநிறுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.</p>
<p>எனினும், இது அதிகாரப்பூர்வ முடிவு அல்ல என்றும், நேட்டோ அமைப்பில் ஒரு உறுப்பு நாட்டை எளிதில் வெளியேற்றும் நடைமுறை இல்லை என்றும் சர்வதேச அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இந்த விவகாரம் ஐரோப்பிய நாடுகளிலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>உக்ரைன் போர், ரஷ்ய அச்சுறுத்தல் மற்றும் அமெரிக்காவின் மாறிவரும் வெளிநாட்டுக் கொள்கைகள் காரணமாக, ஐரோப்பா தனது பாதுகாப்புத் தன்னிறைவைப் பற்றி தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கியுள்ளது.</p>
<p>‘‘அமெரிக்கா &#8211; ஸ்பெயின் கருத்து மோதல் ஒரு சாதாரண இருதரப்புப் பிரச்சினை அல்ல. மாறாக மேற்கத்திய கூட்டணிக்குள் உருவாகும் புதிய அரசியல் பிளவுகளின் அறிகுறியாகும்‘‘ என உலக அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.</p>
<p>இதுவரை ஸ்பெயின் நேட்டோவில் இருந்து வெளியேற்றப்படுவதற்கான நேரடி அபாயம் இல்லாவிட்டாலும், இந்தப் பதற்றம் எதிர்காலத்தில் நேட்டோ கூட்டணியின் திசையை பாதிக்கக்கூடிய முக்கிய அரசியல் சவாலாகப் பார்க்கப்படுகிறது.</p>
<p data-start="23" data-end="136">இந்த மோதல் போக்கின் எதிரொலியாக ஐரோப்பாவில் புதிய பாதுகாப்பு மற்றும் இராணுவக் கூட்டணி உருவாக்கப்பட வேண்டுமா என்ற விவாதம் தற்போது தீவிரமடைந்துள்ளது.</p>
<p data-start="462" data-end="675">நேட்டோ கூட்டணி இன்னும் ஐரோப்பாவின் முக்கிய பாதுகாப்பு அமைப்பாக இருந்தாலும், தற்போதைய அரசியல் போக்கானது ஐரோப்பா தனது பாதுகாப்புத் தன்னிறைவை அதிகரிக்க வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளது.</p>
<p data-start="874" data-end="1005"> “ஐரோப்பாவுக்கு தனித்துவமான பாதுகாப்பு சுயாதீனம் அவசியம்” என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்.  ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் என ஐரோப்பாவின் மூன்று முக்கிய நாடுகள் இந்த விடயத்தில் கைகோர்த்து உள்ளமையால் நிச்சயமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்புக்கான புதிய இராணுவக் கூட்டணி குறித்த பேச்சுகள் தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளது.</p>
<p data-start="1803" data-end="1988" data-is-last-node="" data-is-only-node="">உலக அரசியல் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், ஐரோப்பாவில் உருவாகும் இந்த புதிய பாதுகாப்புச் சிந்தனை, எதிர்கால உலக அதிகார சமநிலையை மாற்றக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.</p>
<p>சு.நிசாந்தன்</p>
<p>The post <a href="https://oruvan.com/us-spain-clash-split-within-nato-alliance-will-spain-be-expelled-from-nato/">அமெரிக்கா, ஸ்பெயின் மோதல் &#8211; நேட்டோ கூட்டணிக்குள் பிளவு ; ஸ்பெயின் நேட்டோவில் இருந்து வெளியேற்றப்படுமா?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://oruvan.com/us-spain-clash-split-within-nato-alliance-will-spain-be-expelled-from-nato/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>உலகக் கிண்ண கால்பந்து தொடரில் பங்கேற்க ஈரான் வீரர்கள் அமெரிக்கா செல்வது உறுதி</title>
		<link>https://oruvan.com/iranian-players-confirmed-to-travel-to-us-for-world-cup/</link>
					<comments>https://oruvan.com/iranian-players-confirmed-to-travel-to-us-for-world-cup/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Tue, 12 May 2026 15:07:56 +0000</pubDate>
				<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[உலகக் கிண்ண கால்பந்து]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49358</guid>

					<description><![CDATA[<p>அமெரிக்க–ஈரான் போர்ப்பதற்றங்கள் தணியாத நிலையில் அடுத்த மாதம் அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து தொடரில் பங்கேற்க ஈரான் வீரர்கள் அங்கு செல்வது உறுதியாகி உள்ளது. இந்நிலையில், அங்கு தங்கள் அணியினர் எப்படி நடத்தப்படுவார்கள் என்பது குறித்தும், அவர்களின் பாதுகாப்பு குறித்தும் ஈரான் கால்பந்துக் கூட்டமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. ஈரான் கால்பந்துக் கூட்டமைப்பின் தலைவர் மெஹதி தாஜ், 2026 உலகக் கிண்ண கால்பந்துத் தொடரில் ஈரான் அணி ‘நிச்சயமாக’ பங்கேற்கும் என்று தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், போட்டியை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/iranian-players-confirmed-to-travel-to-us-for-world-cup/">உலகக் கிண்ண கால்பந்து தொடரில் பங்கேற்க ஈரான் வீரர்கள் அமெரிக்கா செல்வது உறுதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அமெரிக்க–ஈரான் போர்ப்பதற்றங்கள் தணியாத நிலையில் அடுத்த மாதம் அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து தொடரில் பங்கேற்க ஈரான் வீரர்கள் அங்கு செல்வது உறுதியாகி உள்ளது.</p>
<p>இந்நிலையில், அங்கு தங்கள் அணியினர் எப்படி நடத்தப்படுவார்கள் என்பது குறித்தும், அவர்களின் பாதுகாப்பு குறித்தும் ஈரான் கால்பந்துக் கூட்டமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.</p>
<p>ஈரான் கால்பந்துக் கூட்டமைப்பின் தலைவர் மெஹதி தாஜ், 2026 உலகக் கிண்ண கால்பந்துத் தொடரில் ஈரான் அணி ‘நிச்சயமாக’ பங்கேற்கும் என்று தெரிவித்துள்ளார்.</p>
<p>அதே நேரத்தில், போட்டியை நடத்தும் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள், ஈரான் அணியின் பயணம் மற்றும் அணி மீதான அணுகுமுறை தொடர்பான கவலைகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>‘அனைத்து வீரர்களும் தொழில்நுட்ப குழுவினரும், இஸ்லாமிய புரட்சிக் காவல் படையில் கட்டாய இராணுவ சேவை செய்தவர்கள், எந்த சிக்கலும் இல்லாமல் விசா பெற வேண்டும்’ என்றும் மெஹதி தாஜ் தெரிவித்துள்ளார்.</p>
<p>அதே நேரத்தில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் விதித்த பயணத் தடையாலும் ஈரான் குடிமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>விசா, பாதுகாப்பு மற்றும் ஈரான் வீரர்கள், அதிகாரிகள் மீதான அணுகுமுறை குறித்து உறுதிமொழிகள் பெறப்பட்டுள்ளதாகவும், ‘எங்கள் நம்பிக்கைகள், கலாசாரம் மற்றும் கொள்கைகளில் இருந்து பின்வாங்காமல் உலகக் கிண்ணத்தில் பங்கேற்போம்’ என்றும் மெஹதி தாஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>இதற்கு முன் கடந்த மாதம், கனடா நாட்டில் நடைபெற்ற சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க தாஜுக்கு அனுமதி மறுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/iranian-players-confirmed-to-travel-to-us-for-world-cup/">உலகக் கிண்ண கால்பந்து தொடரில் பங்கேற்க ஈரான் வீரர்கள் அமெரிக்கா செல்வது உறுதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://oruvan.com/iranian-players-confirmed-to-travel-to-us-for-world-cup/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>இலங்கை ஜனாதிபதி அநுரவின் வாழ்த்துக்கு தமிழக முதல்வர் விஜய் நன்றி தெரிவிப்பு</title>
		<link>https://oruvan.com/tamil-nadu-chief-minister-vijay-expresses-gratitude-for-sri-lankan-president-anuradhas-greetings/</link>
					<comments>https://oruvan.com/tamil-nadu-chief-minister-vijay-expresses-gratitude-for-sri-lankan-president-anuradhas-greetings/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Tue, 12 May 2026 14:36:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49353</guid>

					<description><![CDATA[<p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருந்த வாழ்த்துக்கு முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது வாழ்த்துச் செய்தியொன்றை எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஜனாதிபதியின் அந்த வாழ்த்துச் செய்திக்கு தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிலளித்துள்ள தமிழக முதலமைச்சர் விஜய், &#8220;இலங்கை ஜனாதிபதி கௌரவ அநுர குமார திசாநாயக்க அவர்களின் வாழ்த்துக்களால் நான் மிகுந்த கௌரவமடைகிறேன். உங்களது அன்பான இந்தச் செயலுக்கு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/tamil-nadu-chief-minister-vijay-expresses-gratitude-for-sri-lankan-president-anuradhas-greetings/">இலங்கை ஜனாதிபதி அநுரவின் வாழ்த்துக்கு தமிழக முதல்வர் விஜய் நன்றி தெரிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருந்த வாழ்த்துக்கு முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.</p>
<p>தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது வாழ்த்துச் செய்தியொன்றை எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.</p>
<p>ஜனாதிபதியின் அந்த வாழ்த்துச் செய்திக்கு தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிலளித்துள்ள தமிழக முதலமைச்சர் விஜய்,</p>
<p>&#8220;இலங்கை ஜனாதிபதி கௌரவ அநுர குமார திசாநாயக்க அவர்களின் வாழ்த்துக்களால் நான் மிகுந்த கௌரவமடைகிறேன். உங்களது அன்பான இந்தச் செயலுக்கு எனது நன்றிகள்&#8221;<br />
எனத் தெரிவித்துள்ளார்.</p>
<p>தமிழ் நாடு முதல்வராக பதவியேற்ற விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு, கலாசாரம், வர்த்தக ரீதியாக ஆழமான பிணைப்பைக் கொண்டுள்ளதை சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p>தமிழக முதலமைச்சராக பதவியேற்ற ஒரு சில நாட்களிலேயே, அண்டை நாட்டுத் தலைவரிடமிருந்து கிடைத்த வாழ்த்தும், அதற்கு முதலமைச்சர் விஜய் அளித்துள்ள பதிலும் அரசியல் வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-49356" src="https://oruvan.com/wp-content/uploads/2026/05/Screenshot-2026-05-12-195913-1.png" alt="" width="596" height="288" /></p>
<p>The post <a href="https://oruvan.com/tamil-nadu-chief-minister-vijay-expresses-gratitude-for-sri-lankan-president-anuradhas-greetings/">இலங்கை ஜனாதிபதி அநுரவின் வாழ்த்துக்கு தமிழக முதல்வர் விஜய் நன்றி தெரிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://oruvan.com/tamil-nadu-chief-minister-vijay-expresses-gratitude-for-sri-lankan-president-anuradhas-greetings/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>அதிகரிக்கும் மின்சாரக் கட்டணம் மற்றும் டொலர் விலை: சாமானிய மக்களின் சமையலறை பட்ஜெட்டுக்கு புதிய சவால்</title>
		<link>https://oruvan.com/rising-electricity-bills-and-dollar-price-new-challenge-to-the-kitchen-budget-of-the-common-man/</link>
					<comments>https://oruvan.com/rising-electricity-bills-and-dollar-price-new-challenge-to-the-kitchen-budget-of-the-common-man/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Darwin Paramasivam]]></dc:creator>
		<pubDate>Tue, 12 May 2026 11:54:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Cost of living]]></category>
		<category><![CDATA[Electricity Tariff Hike]]></category>
		<category><![CDATA[Food Prices.]]></category>
		<category><![CDATA[Sri Lanka Economy]]></category>
		<category><![CDATA[அத்தியாவசியப் பொருட்கள்]]></category>
		<category><![CDATA[இலங்கை பொருளாதாரம்]]></category>
		<category><![CDATA[இலங்கை ரூபாய்]]></category>
		<category><![CDATA[சமையலறை பட்ஜெட்]]></category>
		<category><![CDATA[நாரஹேன்பிட்ட சந்தை]]></category>
		<category><![CDATA[பணவீக்கம்]]></category>
		<category><![CDATA[மின்சாரக் கட்டண உயர்வு]]></category>
		<category><![CDATA[விலைவாசி உயர்வு]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49349</guid>

					<description><![CDATA[<p>இலங்கையில் வாழும் சாதாரண மக்களுக்கு மீண்டும் ஒரு இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது. மின்சாரக் கட்டண உயர்வு மற்றும் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகிய இரண்டும் சேர்ந்து, மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவுகளைக் கடுமையாகப் பாதிக்கத் தொடங்கியுள்ளன. இது குறித்த முக்கிய தகவல்கள் இதோ: மின்சாரக் கட்டண உயர்வு: இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான புதிய மின்சாரக் கட்டண உயர்வுக்கு அனுமதி வழங்கியுள்ளது. குறிப்பாக, மாதத்திற்கு 180 யூனிட்டுகளுக்கு மேல் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/rising-electricity-bills-and-dollar-price-new-challenge-to-the-kitchen-budget-of-the-common-man/">அதிகரிக்கும் மின்சாரக் கட்டணம் மற்றும் டொலர் விலை: சாமானிய மக்களின் சமையலறை பட்ஜெட்டுக்கு புதிய சவால்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p data-path-to-node="3">இலங்கையில் வாழும் சாதாரண மக்களுக்கு மீண்டும் ஒரு இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது. மின்சாரக் கட்டண உயர்வு மற்றும் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகிய இரண்டும் சேர்ந்து, மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவுகளைக் கடுமையாகப் பாதிக்கத் தொடங்கியுள்ளன. இது குறித்த முக்கிய தகவல்கள் இதோ:</p>
<ul data-path-to-node="4">
<li>
<p data-path-to-node="4,0,0"><b data-path-to-node="4,0,0" data-index-in-node="0">மின்சாரக் கட்டண உயர்வு:</b> இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான புதிய மின்சாரக் கட்டண உயர்வுக்கு அனுமதி வழங்கியுள்ளது. குறிப்பாக, மாதத்திற்கு <b data-path-to-node="4,0,0" data-index-in-node="186">180 யூனிட்டுகளுக்கு மேல்</b> மின்சாரம் பயன்படுத்துவோருக்கான கட்டணம் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொழிற்சாலைகள் மற்றும் உணவு உற்பத்தி நிறுவனங்களின் செலவுகளையும் அதிகரிக்கச் செய்யும்.</p>
</li>
<li>
<p data-path-to-node="4,1,0"><b data-path-to-node="4,1,0" data-index-in-node="0">ரூபாயின் வீழ்ச்சி:</b> அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு இந்த ஆண்டில் சுமார் <b data-path-to-node="4,1,0" data-index-in-node="89">3.6% வீழ்ச்சியடைந்துள்ளது</b>. இதனால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் மற்றும் மூலப்பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.</p>
</li>
<li>
<p data-path-to-node="4,2,0"><b data-path-to-node="4,2,0" data-index-in-node="0">அதிர்ச்சியூட்டும் உணவுப் பொருட்கள் விலை:</b> நாரஹேன்பிட்ட பொருளாதார மத்திய நிலையம் போன்ற சந்தைகளில் அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. உதாரணமாக, ஒரு கிலோ <b data-path-to-node="4,2,0" data-index-in-node="171">பீஞ்ச் 700 ரூபாவாகவும்</b>, <b data-path-to-node="4,2,0" data-index-in-node="195">கேரட் 400 ரூபாவாகவும்</b> அதிகரித்துள்ளது. அசைவ உணவுகளைப் பொறுத்தவரை, <b data-path-to-node="4,2,0" data-index-in-node="261">கெலவல்லா மீன் ஒரு கிலோ 2,980 ரூபா</b> வரை விற்பனை செய்யப்படுகிறது.</p>
</li>
<li>
<p data-path-to-node="4,3,0"><b data-path-to-node="4,3,0" data-index-in-node="0">பணவீக்கத்தின் தாக்கம்:</b> கடந்த மார்ச் மாதம் 2.2% ஆக இருந்த கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (பணவீக்கம்), ஏப்ரல் மாதத்தில் <b data-path-to-node="4,3,0" data-index-in-node="122">5.4% ஆக உயர்ந்துள்ளது</b>. அதாவது, கடந்த மாதத்தை விடவும் பொருட்களின் விலை வேகமாக அதிகரித்து வருகின்றது.</p>
</li>
</ul>
<p data-path-to-node="5">சுருக்கமாகச் சொன்னால், ஒரு 5,000 ரூபா தாளை எடுத்துக்கொண்டு சந்தைக்குச் சென்றால், முன்பைப் போல பைகளை நிரப்ப முடியாது என்ற கவலையில் மக்கள் உள்ளனர். மின்சாரக் கட்டண உயர்வும், ரூபாயின் வீழ்ச்சியும் சாதாரண குடும்பங்களின் மாதாந்த பட்ஜெட்டைத் தலைகீழாக மாற்றியுள்ளன.</p>
<p>The post <a href="https://oruvan.com/rising-electricity-bills-and-dollar-price-new-challenge-to-the-kitchen-budget-of-the-common-man/">அதிகரிக்கும் மின்சாரக் கட்டணம் மற்றும் டொலர் விலை: சாமானிய மக்களின் சமையலறை பட்ஜெட்டுக்கு புதிய சவால்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://oruvan.com/rising-electricity-bills-and-dollar-price-new-challenge-to-the-kitchen-budget-of-the-common-man/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
