யாழில் கோர விபத்து – பலர் படுகாயம்

யாழில் கோர விபத்து – பலர் படுகாயம்

யாழ்ப்பாணம் சுண்ணாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதனார் மடம் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர்

இன்று காலை யாழ்ப்பாணம் காங்கேயசுந்துறை வீதியில் மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயம் மற்றும் வெங்கடேஸ்வரர் ஆலயம்
இரண்டிற்கும் இடை நடுவில் இன்று காலை 08. மணியளவில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் காங்கேயெசும் உரை வீதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசந்துறை நோக்கியும் காங்கேசந்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கியும் சென்று கொண்டிருந்த இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

இதன்போது யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசந்துறை நோக்கி பயணித்த ஏனைய இரண்டு மோட்டார் சைக்கிள் அந்த மோட்டார் சைக்கிள்களுடன் மோதி விபத்து சம்பவித்துள்ளதாக சுண்ணாகம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன் போது ஐந்து பேர் படுகாயங்களுக்கு உள்ளாகி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுண்ணாகம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This