இலங்கையின் முதல் நீர் மின்கல நிலையத்தை அமைக்க முயற்சி

இலங்கையின் முதல் நீர் மின்கல நிலையத்தை அமைக்க முயற்சி

இலங்கையின் முதல் நீர் மின்கலமான மஹா ஓயா பம்ப் செய்யப்பட்ட சேமிப்பு மின் திட்டத்தைத் ஆரம்பிப்பதற்கு இலங்கை மின்சார சபை தயாராகியுள்ளது.

மொத்தம் 600 மெகாவாட் திறன் கொண்ட இந்த திட்டம், சூரிய மற்றும் காற்றாலை மின்சாரத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சேமித்து, தேவை அதிகரிக்கும் போது அதை மீண்டும் மின்கட்டமைப்பிற்கு வழங்கும்.

இந்த திட்டம் ஒரு பெரிய அளவிலான எரிசக்தி சேமிப்பு அமைப்பாகும், இது அரநாயக்க மற்றும் நாவலப்பிட்டி பகுதிகளில் அமைந்துள்ள இரண்டு நீர்த்தேக்கங்களை 2.5 கிலோமீட்டர் சுரங்கப்பாதையுடன் இணைப்பதன் மூலம் செயல்படும்.

பிரகாசமான பசுமை எரிசக்தி எதிர்காலத்தை நோக்கிய இலங்கையின் பயணத்திற்கு ஆதரவளிக்குமாறு இலங்கை மின்சார சபை பங்குதாரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This