சிறு​பான்​மை​யின மக்​களுக்கு துணை​யாக திமுக இருக்கும்  – மு.க.ஸ்​டா​லின்

சிறு​பான்​மை​யின மக்​களுக்கு துணை​யாக திமுக இருக்கும் – மு.க.ஸ்​டா​லின்

சிறு​பான்​மை​யின மக்​களுக்கு துணை​யாக திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கும் என தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்​டா​லின் தெரிவித்துள்ளார்.

சென்னை பெரம்​பூரில் இடம்பெற்ற கிறிஸ்​து​மஸ் விழா நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது 3,250 குடும்​பங்​களுக்கு நலத்​திட்ட உதவி​களை வழங்கிய முதலமைச்சர் சர்​வ​தி​கார சக்​தி​களை எதிர்க்​கும் திறன், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கே இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சிறு​பான்​மை​யின மாணவர்​களுக்​காக 14 கல்​லூரி விடு​தி​களில் நூல​கம், உடற்​ப​யிற்சி மற்​றும் விளை​யாட்டு கருவி​கள் போன்ற கட்​டமைப்பு வசதிகளை மேம்​படுத்​தி​யுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்​றைக்கு சிறு​பான்​மை​யின மக்​கள் எத்​தகைய அச்ச உணர்​வோடு வாழ்​கிறார்​கள்.

இந்த நாட்​டின் குடிமக்​களுக்கே அச்​சத்தை வரவைக்​கும் சர்​வதி​கார சக்​தி​களை எதிர்க்​கும் திறன் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கே இருக்கினறது.

உங்​களுக்கு துணை​யாக திமுக​வும், மதச்​சார்​பற்ற முற்​போக்கு கூட்​ட​ணி​யும் உறு​தி​யாக இருக்​கும்.

அதே​போல், நீங்​கள் எங்​களுக்கு துணை​யாக இருக்க வேண்​டும் என முதலமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதேவேளை, 2.87 கோடி​யில் 44 தேவால​யங்​கள் புனரமைப்பு உட்பட பல்​வேறு திட்​டங்​களை தனது அரசாங்கம் செயல்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )