நாடு முழுவதும் தீவிரமடையும் டெங்கு நோய்ப் பரவல்

நாடு முழுவதும் தீவிரமடையும் டெங்கு நோய்ப் பரவல்

ஜனவரி முதலாம் திகதியில் இருந்து தற்போது வரை நாடு முழுவதும் 10,886 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு நோய் கட்டுபாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு, கொழும்பு நகரப் பிரிவு, கம்பஹா, களுத்துறை, மாத்தறை, மாத்தளை, மட்டக்களப்பு, இரத்தினபுரி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் விசேட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குறித்த பகுதிகளில் டெங்கு பரவக்கூடிய 37 இடங்களை அடையாளம் கண்டு, தற்போதுள்ள தரவுகளின் அடிப்படையில் ஒரு சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு களத் திட்டத்தை நடத்தவும் டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு திட்டமிட்டுள்ளது.

இந்நிகழ்ச்சி மார்ச் 27, 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் நடைபெறும் எனவும், இதன்போது, வீடுகள், பள்ளிகள், பணியிடங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வழிபாட்டுத் தலங்கள், பொதுஇடங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் உள்ள பிற வளாகங்கள் கள ஆய்வுக் குழுக்களின் பங்கேற்புடன் கண்காணிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜனவரி முதலாம் திகதியில் இருந்து தற்போது வரை நாடு முழுவதும் 10,886 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு நோய் கட்டுபாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நாட்களில் அவ்வப்போது பெய்யும் மழை காரணமாக எதிர்வரும் நாட்களில் டெங்கு நோயாளிகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This