
கிளரண்டன் ஐயப்பன் ஆலயத்தில் 18ம் படி கருப்பண சுவாமி தரிசனம்
கிளரண்டன் கீழ் பிரிவில் அமைந்துள்ள ஐயப்பன் ஆலயத்தில் கருப்பண சுவாமி சிறப்பு பூஜை நேற்று இரவு (31) 8.00 மணி முதல் இரவு 12 மணிவரை நடைபெற்றிருந்தது.
இந்நிகழ்வில் பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு கருப்பண சுவாமியை தரிசனம் செய்தனர்.
விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டு அதனை தொடர்ந்து பஜனை பாடி, படி பூஜை நடைபெற்றது.
ஐயப்பன் பூஜை இடம்பெற்று ஐயப்பன் பஜனை நடைபெற்ற பின் கருப்பண சுவாமி தரிசனம் இடம்பெற்றிருந்தது.
பக்தர்கள் கருப்பண சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு விஷேட அபிஷேகத்துடன் ஐயப்பன் பூஜைகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES இலங்கை
