டெல்லியில் 1,250 கோடி ரூபா சைபர் மோசடி

டெல்லியில் 1,250 கோடி ரூபா சைபர் மோசடி

இந்தியாவின் டெல்லியில் கடந்த ஓராண்​டில் மட்​டும் மக்​களிட​ம் இருந்து 1,250 கோடி ரூபாவை சைபர் மோசடி கும்​பல் கொள்​ளை​யடித்​துள்​ளது.

அண்மை கால​மாக நிதி மோசடி அதி​கரித்து வரு​வதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அண்மையில் டெல்லி ரோகிணி பகு​தி​யில் வசிக்​கும் 70 வயது முதி​ய​வர் மற்​றும் அவரது மனை​வி​ டிஜிட்​டல் கொடுப்பனவு முறை​யால்
14.85 கோடி ரூபாவை இழந்துள்ளனர்.

கடந்த 2024 ஆம் ஆண்​டில் டெல்லி பிராந்​தி​யத்​தில் சைபர் மோசடி கும்​பல் 1,100 கோடி ரூபாவை மோசடி செய்​ததாகவும் இந்த கும்பலில் பெரும்​பாலானோர் கம்​போடி​யா, வியட்​நாம், லாவோஸ் ஆகிய நாடு​களில் தங்​கி​யிருந்​து, சீனக் கூட்​டாளி​களின் கட்டளைப்​படி செயற்​படு​வோர் என டெல்லி பொலிஸ் மூத்த அதி​காரி ஒரு​வர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“2025 ஆம் ஆண்​டில் டெல்லி பிராந்​தி​யத்​தில் இந்த கும்​பலால் மோசடி செய்​யப்​பட்ட தொகை ரூ.1,250 கோடி​யாக அதி​கரித்​துள்​ளது.

எவ்வாறாயினும் 2024 ஆம் ஆண்டில் மோசடி செய்​யப்​பட்ட தொகை​யில் 10 சதவீதம் மீட்​கப்​பட்​டதாக கூறப்படுகிறது.

2025 ஆம் ஆண்டில் நாடு முழு​வதும் சைபர் மோசடி கும்​பலால் மோசடி செய்யப்​பட்ட தொகை சுமார் 20,000 கோடி ரூபாவாக இருக்​கும் என நம்பப்​படு​கிறது.

இது ஒரு மாநிலத்​தின் வரவு செலவு திட்​டத்​திற்கு இணை​யான தொகை​யாகும்” என்றார்.

 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )