ராஜித சேனாரத்னவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

ராஜித சேனாரத்னவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் விசாரணையில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்து ஆஜர்படுத்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (12) பிடியாணை பிறப்பித்தது.

சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் வாக்குமூலங்களை வழங்குவதைத் தவிர்ப்பதன் மூலம் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிப்பதாக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன்வைத்த உண்மைகளை கருத்தில் கொண்டு கொழும்பு கூடுதல் நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவை பிறப்பித்தார்.

CATEGORIES
TAGS
Share This