சதோசயில் ஊழல் – தேசிய மக்கள் சக்தி மீது முஜிப் ரஹ்மான் குற்றச்சாட்டு

கடந்த நாட்களில் சதோச விற்பனை நிலையங்கள் மூலம் 11,500 கிலோ தரமற்ற அரிசியை விற்பனை செய்ததன் மூலம் பெரும் ஊழல் நடந்துள்ளதாக ஜன பலவேகய கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்தார்.
கூட்டுறவு, வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செலவினத் தலைப்பு மீதான வரவு -செலவுத்திட்ட குழு நிலை விவாதத்தில் நேற்று உரையாற்றும் போதே முஜிபுர் ரகுமான் எம்.பி. இவ்வாறு கூறினார்.
சதோசயில் விலைமனுக்கோரல் ஆவணங்கள் காணாமல் போயுள்ளன. அவை ஜனாதிபதியின் ஆலோசகரான துமிந்த ஹுலங்கமுவவின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாகவும், அசல் விலைமனுக்கோரல் ஆவணங்கள் காணாமல் போனமை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
சதோச இன்று திருடர்களின் கூடாரமாக மாறிவிட்டது என்றும் அவர் குற்றம்சுமத்தினார்.