கனேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் நீதிமன்றத்தில் இரகசிய அறிக்கை சமர்பிப்பு

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கனேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் நீதிமன்றத்தில் இரகசிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
விசாரணையை மேற்கொண்டு வரும் கொழும்பு குற்றப்பிரிவு, கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலியிடம் அதிகாரப்பூர்வ இது தொடர்புடைய அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
அறிக்கையின்படி, நீதிமன்றம் காவல்துறைக்கு பல உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது.
அதன்படி, பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் குழுவிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளன.
கடந்த 19ஆம் திகதி காலை, கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தின் 05ஆம் இல நீதிமன்ற அறையில் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து கொழும்பு குற்றப்பிரிவு தற்போது மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.