
கேகாலையில் மூடப்பட்ட கொழும்பு – கண்டி வீதி
கொழும்பு – கண்டி வீதி வீதியில் கேகாலை, மிஹிபிட்டிய பிரதேசத்தை மூடுவதற்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தீர்மானித்துள்ளது.
அந்த பகுதியில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்த
நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, கொழும்பு – கண்டி வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் கேகாலை பிரதேசத்தில் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறும், அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து வேறு காரணங்களுக்காக அந்தப் பகுதியினூடாகப் பயணிப்பதைத் தவிர்க்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
CATEGORIES இலங்கை
