நவீன வசதிகளுடன் புனரமைக்கப்படும் கொழும்பு கோட்டை ரயில் நிலையம்

நவீன வசதிகளுடன் புனரமைக்கப்படும் கொழும்பு கோட்டை ரயில் நிலையம்

வரலாற்றுச் சிறப்புமிக்க கொழும்பு கோட்டை இரயில் நிலையத்தின் புனரமைப்புப் பணிகள் இன்று அதிகாரப்பூர்வமாகத் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த முயற்சியானது, நிலையத்தின் 109 ஆண்டுகால பாரம்பரியத்தைப் பாதுகாப்பதோடு, நவீன பயணிகள் வசதிகளை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மற்றும் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 2,162.64 மில்லியன் ரூபா செலவில் இத்திட்டம் 15 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த அபிவிருந்த பயணிகளின் வசதியை அதிகரிப்பதோடு, நிலையத்தின் தொல்பொருள் மதிப்பையும் பாதுகாக்கும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

இதன்படி, மருதனை மற்றும் கொம்பனி தெரு முனைகளில் பழைய பாலங்களுக்குப் பதிலாக, மின்தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நவீன பயணிகள் பாலங்கள் கட்டுதல்.

பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு புதிய மூன்று மாடி சேவைக் கட்டிடம்.

ஓல்கொட் மாவத்தையில் குறுக்கே உள்ள மேம்பாலம் உள்ளிட்ட விரிவாக்கப்பட்ட அணுகல் வசதிகள்

நுழைவு மற்றும் வெளியேற்றத்தை நெறிப்படுத்த, மின்-நுழைவாயில் வசதிகளுடன் கூடிய டிஜிட்டல் தொழில்நுட்ப அறிமுகம் என்பன முதல் கட்ட அபிவிருந்த பணிகளின் போது மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நாளாந்தம் இரயில்வே இயக்கத்திற்கு குறைந்தபட்ச இடையூறு ஏற்படும் வகையில் அனைத்து கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்படும் என பிரதி அமைச்சர் குணசேன உறுதியளித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )