Category: சிறப்பு செய்திகள்
டித்வா புயல் ஏற்படுத்திய சேதம் – ஜனாதிபதி அனுரவுடன் அமெரிக்க சிறப்பு தூதுவர் பேச்சு
இலங்கையில் ஏற்பட்ட பேரிடரை தொடர்ந்து தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க சிறப்புத் தூதரும், வெள்ளை மாளிகையின் ஜனாதிபதி பணியாளர் அலுவலகத்தின் இயக்குநருமான செர்ஜியோ கோர், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் பேசியுள்ளார். இன்று ... Read More
இலங்கையை நிலைகுலையச் செய்த பேரிடர் – 400ஐ அண்மிக்கும் உயிரிழப்பு
டித்வா புயல் ஏற்படுத்திய மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட பேரிடர் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 352 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 382,651 குடும்பங்களைச் ... Read More
வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் இன்று மழை பெய்யக்கூடும்
நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய ... Read More
மீட்பு பணியின் போது ஹெலிகாப்டர் விபத்து – தலைமை விமானி உயிரிழப்பு
இயற்கை பேரிடர் காரணமாக வென்னப்புவ - ஜின் ஓயாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும்போது விபத்துக்குள்ளான இலங்கை விமானப்படை ஹெலிகாப்டரின் தலைமை விமானி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த தலைமை விமானி, விண்ட் கமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டிய ... Read More
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை
ஒரு நாடென்ற வகையில் நாம் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான இயற்கை பேரழிவிற்கு முகங்கொடுத்துள்ளோம் என்பதை நாம் அறிவோம். இந்த நாட்டின் வரலாற்றில் மிகவும் சவாலான மீட்பு நடவடிக்கையை நாம் ஆரம்பித்துள்ளோம் என்பதையும் ... Read More
பேரிடர் இறப்புகள் 200 ஐ தாண்டியது – 218 பேரைக் காணவில்லை
சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 212 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, அனர்த்தம் காரணமாக 218 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 273,606 குடும்பங்களைச் சேர்ந்த ... Read More
இலங்கையில் கடந்த மூன்று ஆண்டுகளில் பேரிடர்கள் ஐந்து மடங்கு அதிகரிப்பு
கடந்து மூன்று ஆண்டுகளில் பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள தணிக்கை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் ... Read More
அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகத்தை நிறுவ ஜனாதிபதி அறிவுறுத்தல்
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீளமைக்கத் தேவையான பணிகளுக்காக, அத்தியாவசிய சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில், 'அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகம்' ஒன்றை பிரதமர் அலுவலகத்தை மையமாகக் கொண்டதாக நிறுவுதற்கு ஜனாதிபதி அநுரகுமார ... Read More
உயர்தரப் பரீட்சை காலவரையின்றி ஒத்திவைப்பு
நடைபெறவிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் மற்றும் ஏனைய அனைத்துப் பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே அறிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட பரீட்சைகளை மீளவும் ... Read More
மழை குறைந்தாலும் மண் சரிவு அபாயம் நீங்கவில்லை – பொது மக்களுக்கு எச்சரிக்கை
மழையுடனான காலநிலை குறைவடைந்த போதும் மத்திய மலைப்பகுதிகளில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் நீர் படிப்படியாக கீழ்நோக்கி நகர்ந்து வருகிறது. எனவே வெள்ள அச்சுறுத்தல் தொடர்பாக நீர்ப்பாசனத் திணைக்கள அறிவிப்புகளைத் ... Read More
டிட்வா புயல் முழுமையாக இலங்கையை விட்டு நீங்கியது
இன்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் சில பகுதிகளுக்கு மிதமானது முதல் சற்று கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் அவ்வப்போது காற்று சற்று வேகமாக வீசும். புயல் ... Read More
மாவனெல்ல கோவில் கந்த பகுதியில் மண்சரிவு – நால்வரை காணவில்லை
கேகாலை மாவட்டத்தில் உள்ள மாவனெல்லாவின் கோவில் கந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக மாவனெல்ல மேலதிக மாவட்ட செயலாளர் திலிப் நிஷாந்த தெரிவித்தார். மேலும் இரண்டு பேரை ... Read More












