<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சிறப்பு செய்திகள் Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/category/சிறப்பு-செய்திகள்/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Thu, 07 May 2026 08:56:24 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>சிறப்பு செய்திகள் Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/category/சிறப்பு-செய்திகள்/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>வித்தாயாவின் படுகொலையில்  தாமதிக்கப்பட்ட நீதி எதைக் கூறுகிறது?</title>
		<link>https://oruvan.com/what-does-justice-delayed-in-the-murder-of-witthaya-say/</link>
					<comments>https://oruvan.com/what-does-justice-delayed-in-the-murder-of-witthaya-say/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 07 May 2026 08:56:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[வித்தாயாவின் படுகொலை]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49304</guid>

					<description><![CDATA[<p>2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் புங்குடுதீவில் இடம்பெற்ற சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை, இலங்கையின் வரலாற்றில் மிகுந்த அதிர்ச்சியூட்டிய குற்றச்சம்பவங்களில் ஒன்றாகும். இந்தச் சம்பவம் ஒரு தனிப்பட்ட குற்றமாக மட்டும் இல்லாமல், பெண்கள் பாதுகாப்பு, சட்டத்தின் செயல்திறன் மற்றும் சமூக பொறுப்பு ஆகியவற்றை மையப்படுத்திய தேசிய அளவிலான விவாதமாக மாறியது. வித்தியாவின் வழக்கில் உயர்நீதிமன்றம் கடந்த புதன்கிழமை வழங்கியுள்ள தீர்ப்பின் மூலம் வழக்கின் முக்கிய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. பல ஆண்டுகள் நீண்ட வழக்குப் போராட்டத்திற்கும், [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/what-does-justice-delayed-in-the-murder-of-witthaya-say/">வித்தாயாவின் படுகொலையில்  தாமதிக்கப்பட்ட நீதி எதைக் கூறுகிறது?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் புங்குடுதீவில் இடம்பெற்ற சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை, இலங்கையின் வரலாற்றில் மிகுந்த அதிர்ச்சியூட்டிய குற்றச்சம்பவங்களில் ஒன்றாகும். இந்தச் சம்பவம் ஒரு தனிப்பட்ட குற்றமாக மட்டும் இல்லாமல், பெண்கள் பாதுகாப்பு, சட்டத்தின் செயல்திறன் மற்றும் சமூக பொறுப்பு ஆகியவற்றை மையப்படுத்திய தேசிய அளவிலான விவாதமாக மாறியது.</p>
<p>வித்தியாவின் வழக்கில் உயர்நீதிமன்றம் கடந்த புதன்கிழமை வழங்கியுள்ள தீர்ப்பின் மூலம் வழக்கின் முக்கிய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. பல ஆண்டுகள் நீண்ட வழக்குப் போராட்டத்திற்கும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் கிடைத்த ஒரு நியாயமான பதிலாக இந்தத் தீர்ப்பு பார்க்கப்படுகிறது.</p>
<p>யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கடந்த 2015 ஆம் ஆண்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் முழு நாட்டையும் உலுக்கியிருந்தது.</p>
<p>புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவியான வித்தியா கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.</p>
<p>இந்த வழக்கில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் 2017 ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பின் படி, சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமார் உள்ளிட்ட 7 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து குற்றவாளிகள் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தனர்.</p>
<p>அந்த மேன்முறையீட்டு மனுக்கள் தொடர்பான விசாரணைகள் கடந்த புதன்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவர் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு தீர்ப்பை அறிவித்தது. வழக்கு விசாரணை இடம்பெற்ற நேரத்தில், சிறையில் உள்ள குற்றவாளிகள் ‘Zoom’ தொழிநுட்பம் மூலம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்<wbr />தனர்.</p>
<p>விசாரணையின் போது, குற்றவாளிகளில் ஒருவர் சிறையில் உயிரிழந்திருந்தமை மற்றும் ஏனைய சாட்சிகள், ஆதாரங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில், இரு பிரதிவாதிகள் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.</p>
<p>வழக்கு விசாரணை நிறைவில் முக்கிய குற்றவாளியான சுவிஸ் குமார் உள்ளிட்ட மீதமுள்ள நான்கு பேருக்கு மேல் நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.</p>
<p>நீண்டகால சட்டப் போராட்டத்திற்குப் பின்னர் கிடைத்த இந்தத் தீர்ப்பு, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கும், சமூக நீதிக்குமான ஒரு முக்கிய வெற்றியாகக் கருதப்படுகிறது. இத்தீர்ப்பு பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சட்டங்களின் நடைமுறைப்படுத்தலின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.</p>
<p>இலங்கையில் பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் சட்ட நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என வித்தியாவின் படுகொலைக்கு நீதிகோரிப் போராடிய மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.</p>
<p>இலங்கையில் பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாக்கப் பல சட்டங்கள் இயங்கிவருகின்றன. பாலியல் குற்றங்கள், குடும்ப வன்முறை, குழந்தைகள் பாதுகாப்பு போன்ற துறைகளில் சட்ட அடித்தளம் பலமாக இருந்தாலும், நடைமுறைச் செயற்பாடுகள் பலவீனமாக இருப்பது பெரும் சிக்கலாக உள்ளது.</p>
<p>பல சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு அளிக்க அச்சப்படுகின்றனர். சமூக அழுத்தம், அவமானம், பொலிஸ் செயல்முறை மீதான நம்பிக்கை குறைவு போன்ற காரணிகள் இதற்குக் காரணமாகின்றன. மேலும், வழக்குகள் நீண்ட காலம் நீடிப்பதும் நீதியைத் தாமதப்படுத்துகிறது.</p>
<p>பெண்கள் பாதுகாப்பு என்பதை சட்டங்களை உருவாக்குவதில் மட்டும் செய்ய முடியாது. குறித்த சட்டங்கள் செயல்படுத்தப்படுவது அவசியமாகும். பொலிஸ்துறை, நீதித்துறை, சமூக சேவை அமைப்புகள் மற்றும் கல்வி முறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.</p>
<p>இதற்காக பாலின உணர்வுப் (gender sensitivity) பயிற்சிகள், விரைவு நீதிமன்றங்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் மற்றும் சட்ட உதவி போன்ற பல நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் எனவும் மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.</p>
<p>இலங்கையின் குற்றவியல் நீதித்துறை பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. வழக்குகள் நீண்டகாலம் நிலுவையில் இருப்பது, சாட்சிகள் பாதுகாப்பின்மை, விசாரணை தரம் குறைவு மற்றும் நீதிமன்ற செயல்முறை மந்தம் ஆகியவை முக்கிய பிரச்சினைகளாக உள்ளன.</p>
<p>அதன் காரணமாகத் தான் வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளிக்கானத் தண்டனை உறுதிப்படுத்த ஒரு தசாப்தத்துக்கும் அதிகமான காலம் எடுத்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.</p>
<p>தாமதிக்கப்பட்ட நீதியானது மறுக்கப்பட்ட நீதிக்கு சமமாகும். வித்தியா வழக்கில் இந்தத் தீர்ப்பானது உடனடியாக வழங்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி இடம்பெற்றிருந்தால் இவ்வாறான சம்பவங்கள் சமூகத்தில் இடம்பெறுவது ஓரளவு குறைந்திருக்கும் எனவும் மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.</p>
<p>தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி விசாரணைகளை விரைவுபடுத்துதல், டிஜிட்டல் ஆதாரங்களை ஏற்றுக்கொள்ளும் சட்ட மாற்றங்கள், சாட்சி பாதுகாப்புத் திட்டங்கள் ஆகிய சீர்திருத்தங்கள் இலங்கைக்கு அவசியம். அதன் ஊடாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு விரைவான நீதியை பெற்றுக்கொடுக்க முடியும்.</p>
<p>நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவது ஒரு அரசாங்கத்துக்கு முக்கியமான சவாலாகும். நீதிமன்ற தீர்ப்புகள் தாமதமின்றி, வெளிப்படையாக வழங்கப்படும்போது மட்டுமே மக்கள் நம்பிக்கை அதிகரிக்கும். கடந்தகால அரசுகள் விட்ட தவறை தற்போதைய அரசும் விடக்கூடாது.</p>
<p>அதற்காகவே சமகால அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி அதிகாரத்தை மக்கள் கையளித்திருந்தனர்.</p>
<p>இன்றைய உலகில் நீதியின் தரம் என்பது ஒரு நாட்டின் ஜனநாயகத் தரத்தை நிர்ணயிக்கும் முக்கிய அளவுகோலாக உள்ளது. எனவே, நீதித்துறையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் நாட்டை மேலும் பலப்படுத்தும்.</p>
<p>நீதித்துறையை வலுப்படுத்துவதாகவே தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ளது. என்றாலும்,  நீதித்துறையின் செயல்பாடுகள் இன்னமும் தாமதாகவே உள்ளன. எனவே, வித்தியாவின் வழக்கை முன்னுதாரணமாகக் கொண்டு அரசாங்கம் விரைவான சட்டத்திருத்தங்களை மேற்கொண்டு தாமதமின்றி பாதிக்கப்பட்டத் தரப்பினருக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும்.</p>
<p>சுப்ரமணியம் நிசாந்தன்</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/what-does-justice-delayed-in-the-murder-of-witthaya-say/">வித்தாயாவின் படுகொலையில்  தாமதிக்கப்பட்ட நீதி எதைக் கூறுகிறது?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://oruvan.com/what-does-justice-delayed-in-the-murder-of-witthaya-say/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தமிழக சட்டமன்றத் தேர்தல் &#8211; முன்னிலையில் தவெக</title>
		<link>https://oruvan.com/tamil-nadu-assembly-elections-thaweka-in-the-lead/</link>
					<comments>https://oruvan.com/tamil-nadu-assembly-elections-thaweka-in-the-lead/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Mon, 04 May 2026 05:59:36 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[tvk]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49295</guid>

					<description><![CDATA[<p>தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பலரும் எதிர்பாராத அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 100 இற்கும்  மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக 75 இற்கு மேற்பட்ட இடங்களிலும், திமுக 50 இற்கு மேற்பட்ட இடங்களிலும் உள்ளன. Axis My India கணிப்பின்படி, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதேவேளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/tamil-nadu-assembly-elections-thaweka-in-the-lead/">தமிழக சட்டமன்றத் தேர்தல் &#8211; முன்னிலையில் தவெக</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பலரும் எதிர்பாராத அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 100 இற்கும்  மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.</p>
<p>அதிமுக 75 இற்கு மேற்பட்ட இடங்களிலும், திமுக 50 இற்கு மேற்பட்ட இடங்களிலும் உள்ளன. Axis My India கணிப்பின்படி, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.</p>
<p>இதேவேளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.</p>
<p>எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், கூட்டணி ஆட்சி அமைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன.</p>
<p>இதனிடையே, சென்னையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டுக்க பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/tamil-nadu-assembly-elections-thaweka-in-the-lead/">தமிழக சட்டமன்றத் தேர்தல் &#8211; முன்னிலையில் தவெக</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://oruvan.com/tamil-nadu-assembly-elections-thaweka-in-the-lead/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தமிழகத்தை ஆளப்போவது யார்? கணிப்புகள் காட்டும் திருப்பம்  &#8211; மே 04   ஐ நோக்கிய மக்களின் பார்வை</title>
		<link>https://oruvan.com/who-will-rule-tamil-nadu-the-turn-of-events-as-predicted-by-the-peoples-views-on-may-04/</link>
					<comments>https://oruvan.com/who-will-rule-tamil-nadu-the-turn-of-events-as-predicted-by-the-peoples-views-on-may-04/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Sat, 02 May 2026 12:11:42 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கருத்து கணிப்புகள்]]></category>
		<category><![CDATA[சட்டமன்றத் தேர்தல்]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு]]></category>
		<category><![CDATA[முடிவுகள்]]></category>
		<category><![CDATA[மே 04]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49286</guid>

					<description><![CDATA[<p>வரலாற்றுப் பின்னணி, புதிய அரசியல் முயற்சிகள், மாற்றத்தை எதிர்பார்க்கும் வாக்காளர்கள் இந்த மூன்றின் சங்கமமாக தமிழ்நாடு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. வழக்கமாக திமுக &#8211; அதிமுக என்ற இரு துருவ  அரசியல் போட்டி நிலவிய தமிழ்நாட்டில், இந்த முறை நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மூன்றாவது சக்தியாகக் களமிறங்கியது. தேர்தல் பிரச்சாரங்களில் விஜயைக் காண மக்கள் பெருமளவில் திரண்ட காட்சிகள், மாநிலத்தில் அரசியல் மாற்றத்திற்கான [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/who-will-rule-tamil-nadu-the-turn-of-events-as-predicted-by-the-peoples-views-on-may-04/">தமிழகத்தை ஆளப்போவது யார்? கணிப்புகள் காட்டும் திருப்பம்  &#8211; மே 04   ஐ நோக்கிய மக்களின் பார்வை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>வரலாற்றுப் பின்னணி, புதிய அரசியல் முயற்சிகள், மாற்றத்தை எதிர்பார்க்கும் வாக்காளர்கள் இந்த மூன்றின் சங்கமமாக தமிழ்நாடு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.</p>
<p>தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. வழக்கமாக திமுக &#8211; அதிமுக என்ற இரு துருவ  அரசியல் போட்டி நிலவிய தமிழ்நாட்டில், இந்த முறை நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மூன்றாவது சக்தியாகக் களமிறங்கியது.</p>
<p>தேர்தல் பிரச்சாரங்களில் விஜயைக் காண மக்கள் பெருமளவில் திரண்ட காட்சிகள், மாநிலத்தில் அரசியல் மாற்றத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்தன.  குறிப்பாக இளைஞர்கள், முதன்முறையாக வாக்களிக்கத் தகுதி பெற்றோர் மற்றும் மாற்றத்தை விரும்பும்  மக்களிடையே தவெக மீது கணிசமான ஆர்வம் காணப்பட்டது.</p>
<p>ஆனால், தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் அந்த வரவேற்பை முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை. பல கணிப்புகள் தவெக 10 முதல் 40 தொகுதிகள் வரையிலேயே வெற்றி பெறும் நிலையைக் காட்டுகின்றன. இதற்கு மாறாக, INDIA TODAY &#8211; AXIS MY INDIA கருத்துக் கணிப்பு மாத்திரம் விஜயின் கட்சி 98  முதல் 120 இடங்கள் கைப்பற்றி ஆட்சியமைக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கணித்துள்ளது.</p>
<p>இந்த முரண்பாடு பல கேள்விகளை எழுப்புகிறது. “பிரசாரங்களில் காணப்பட்ட மக்கள் கூட்டம் உண்மையாகவே வாக்குகளாக மாறியதா? ” “மேடைகளில் தெரிந்த ஆதரவு வாக்குச் சாவடிகளில் தொடர்ந்ததா? ” அல்லது  “அமைதியாகத் தீர்மானிக்கப்பட்ட வாக்காளர்களின் மனநிலையை சில கருத்துக் கணிப்புகள் சரியாகப் பதிவு செய்யத் தவறிவிட்டதா?” என்ற சந்தேகங்கள் தற்போது அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகின்றன.</p>
<p>பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கடந்த 23 ஆம் திகதி ஒரே கட்டமாக மொத்தமுள்ள 234  தொகுதிகளுக்கும் நடைபெற்றது.  தமிழ்நாட்டின் தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக 84.69% வாக்குகள் இம்முறை பதிவாகின.</p>
<p>இவ்வாறிருக்க தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் NDTV- PEOPLE&#8217;S PULSE திமுக கூட்டணி 125 முதல் 145 தொகுதிகளும், அதிமுக கூட்டணி 65 முதல் 80  தொகுதிகளும் கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் தவெக 18 முதல் 24 தொகுதிகளையும் ஏனையவை 2 முதல் 6  இடங்களையும் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அதேபோன்று, திமுக கூட்டணி 125 முதல் 145 தொகுதிகள் வரைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைக்கும் என REPUBLIC TV P MARQ கணித்துள்ளது.  அதிமுக கூட்டணி 65 முதல் 85 இடங்களையும், தவெக 16 முதல் 26 தொகுதிகளையும் கைப்பற்றும் எனவும், மற்றயவை 1 முதல் 6 இடங்களை பெறும் எனவும் கணித்துள்ளது.</p>
<p>MATRIZE நடத்தியக் கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 122 முதல் 132 தொகுதிகளும், அதிமுக கூட்டணி 87 முதல் 110 தொகுதிகளும் வெற்றி பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.  மேலும் தவெக 10 முதல் 12 தொகுதிகளிலும், மற்றயவை 1 முதல் 6 இடங்களிலும் வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.</p>
<p>2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியைக் கைப்பற்றும் என Times Now JVC கணித்துள்ளது. அதன்படி அதிமுக கூட்டணி 128 முதல் 147 தொகுதிகளிலும்,  திமுக கூட்டணி 75 முதல் 95 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. தவெக 8 முதல் 15 தொகுதிகள் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>PEOPLE&#8217;S INSIGHT வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 120 முதல் 140 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைக்கும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அதிமுக கூட்டணி 60 முதல் 70 தொகுதிகளிலும், தவெக 30 முதல் 40 இடங்களிலும் வெற்றி பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. மற்றயவை அதிகபட்சம் 4 இடங்களில் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், INDIA TODAY AXIS MY INDIA கருத்துக் கணிப்பில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 98 முதல் 120 இடங்களை கைப்பற்றி  தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.</p>
<p>திமுக கூட்டணி 92 முதல் 110 இடங்களையும், அதிமுக கூட்டணி 22 முதல் 32 தொகுதிகளையும் கைப்பற்றும் எனக் கணித்துள்ளது. அதேநேரம் திமுக மற்றும் தவெக ஒருசேர 35 சதவீத வாக்குகளைப் பெறும் என AXIS MY INDIA கணித்துள்ளது. Chanakya Strategies கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 145 முதல் 160 இடங்களையும், அதிமுக கூட்டணி 50 முதல் 65 தொகுதிகளையும்  கைப்பற்றும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.  தவெக 13 முதல் 18 இடங்களிலும், மற்றயவை 5 முதல் 8 இடங்களிலும் வெற்றி பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.</p>
<p>அக்னி வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளில், திமுக கூட்டணி 169 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 64 தொகுதிகளிலும்  தவெக ஒரு தொகுதியிலும் வெற்றி பெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  VOTE VIBE நடத்திய கருத்துக் கணிப்பில் அதிமுக கூட்டணி 124 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>திமுக கூட்டணி 103 முதல் 113 தொகுதிகளும், தவெக 10 தொகுதிகளும் வெற்றி பெறும் என்றும் VOTE VIBE கணித்துள்ளது. வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை அதிமுக கூட்டணி 39.9 சதவீதமும் திமுக கூட்டணி 38.9 சதவீதமும்  தவெக 15.8 சதவீதமும் பெறும் எனத் தெரிவித்துள்ளது.</p>
<p>அதேபோன்று, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி குறித்த கணிப்புகள் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளன. சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு கிராமப்புறங்களில்  ஓரளவு செல்வாக்கு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி அதிகபட்சமாக 0 முதல் 6 இடங்கள் வரை மட்டுமே பெற வாய்ப்பு  உள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.</p>
<p>தமிழ்நாட்டில் எந்தவொரு கட்சிக்கும் குறைந்தது 118 இடங்கள் கிடைக்கவில்லை என்றால், அது தொங்கு சட்டமன்றமாக அமையும் என்பதையே கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன. அவ்வாறான சூழலில், சிறிய கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமையவே அதிக வாய்ப்புள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.</p>
<p>கருணாநிதி &#8211; ஜெயலலிதா காலத்திற்குப் பிறகு உருவான அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் இரண்டாவது சட்டமன்றத் தேர்தலாக இது அமைந்துள்ள நிலையில், இந்த முறை மக்களின் தீர்ப்பு எந்தத் திசையில் செல்லும் என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>தமிழ்நாடு தேர்தல் அரசியலில் மக்கள் கூட்டம், சமூக ஊடகத் தாக்கம், நட்சத்திரக் கவர்ச்சி ஆகியவை வெற்றிக்கான ஒரே அளவுகோலாக இருக்க  முடியாது என்பதையும், அதேவேளை பாரம்பரியக் கணக்கீடுகள் புதிய அரசியல் அலைகளை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாமல் போகலாம் என்பதையும் இந்த தேர்தல் நினைவூட்டுகிறது. விஜயின் தவெக உண்மையில் “அமைதியான அரசியல் எழுச்சியை உருவாக்கியுள்ளதா?” அல்லது “அது வெறும் பிரச்சார வெப்பமா? என்பது வாக்கு எண்ணிக்கையிலேயே தெளிவாகும்.</p>
<p>எதுவாக இருந்தாலும், இந்தத் தேர்தல் தமிழ்நாட்டில் இரு கட்சி ஆதிக்க அரசியலை சவாலுக்கு உட்படுத்தியத் தேர்தலாகவும், விஜயின் அரசியல்  வருகை கணிப்புகளையும் கணக்குகளையும் குழப்பிய தேர்தலாகவும் வரலாற்றில் பதிவாகும்.</p>
<p>மாற்றம் ஏற்படுமா? அல்லது “தற்போதைய ஆட்சி தொடருமா?“  என்ற இறுதி கேள்விக்கான பதில் மே 4 ஆம் திகதி தெரியவரும்.</p>
<p>The post <a href="https://oruvan.com/who-will-rule-tamil-nadu-the-turn-of-events-as-predicted-by-the-peoples-views-on-may-04/">தமிழகத்தை ஆளப்போவது யார்? கணிப்புகள் காட்டும் திருப்பம்  &#8211; மே 04   ஐ நோக்கிய மக்களின் பார்வை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://oruvan.com/who-will-rule-tamil-nadu-the-turn-of-events-as-predicted-by-the-peoples-views-on-may-04/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>இந்​தி​யா​வில் இருந்து திருடப்​பட்ட 657 பழங்​கால சிலைகளை திருப்பி அளித்த அமெரிக்கா</title>
		<link>https://oruvan.com/us-returns-657-ancient-statues-stolen-from-india/</link>
					<comments>https://oruvan.com/us-returns-657-ancient-statues-stolen-from-india/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 01 May 2026 13:28:25 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49280</guid>

					<description><![CDATA[<p>இந்​தி​யா​வில் இருந்து திருடப்​பட்ட 657 பழங்​கால சிலைகளை அமெரிக்கா திருப்பி அளித்துள்ளது. அவற்​றின் பெறுமதி இந்திய மதிப்பில் 133 கோடி ரூபா என இந்திய வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது. இந்​தி​யா​வில் இருந்து திருடப்​பட்ட பழங்​கால சிலைகள், புராதன பொருட்​கள் அமெரிக்கா மற்​றும் ஐரோப்​பிய நாடு​களுக்கு காலனித்துவக் காலத்தில் கடத்​தப்​பட்டிருந்தன. பிரதமர் நரேந்​திர மோடி வெளி​நாடு​களுக்கு பயணம் மேற்​கொள்​ளும்​போது, பழங்​கால அரிய பொருட்​களை இந்​தி​யா​விடம் ஒப்​படைக்​கு​மாறு குறித்த நாடு​களின் அரசுகளிடம் வலி​யுறுத்தி வந்திருந்தார். அதன் பிரகாரம் ​இந்​தி​யா​வில் இருந்து [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/us-returns-657-ancient-statues-stolen-from-india/">இந்​தி​யா​வில் இருந்து திருடப்​பட்ட 657 பழங்​கால சிலைகளை திருப்பி அளித்த அமெரிக்கா</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்​தி​யா​வில் இருந்து திருடப்​பட்ட 657 பழங்​கால சிலைகளை அமெரிக்கா திருப்பி அளித்துள்ளது.</p>
<p>அவற்​றின் பெறுமதி இந்திய மதிப்பில் 133 கோடி ரூபா என இந்திய வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.</p>
<p>இந்​தி​யா​வில் இருந்து திருடப்​பட்ட பழங்​கால சிலைகள், புராதன பொருட்​கள் அமெரிக்கா மற்​றும் ஐரோப்​பிய நாடு​களுக்கு காலனித்துவக் காலத்தில் கடத்​தப்​பட்டிருந்தன.</p>
<p>பிரதமர் நரேந்​திர மோடி வெளி​நாடு​களுக்கு பயணம் மேற்​கொள்​ளும்​போது, பழங்​கால அரிய பொருட்​களை இந்​தி​யா​விடம் ஒப்​படைக்​கு​மாறு குறித்த நாடு​களின் அரசுகளிடம் வலி​யுறுத்தி வந்திருந்தார்.</p>
<p>அதன் பிரகாரம் ​இந்​தி​யா​வில் இருந்து திருடப்​பட்டு அமெரிக்கா​வுக்கு கடத்​தப்​பட்ட 657 பழங்​கால சிலைகள், அரிய பொருட்​கள் திருப்பி அளிக்​கப்​பட்டுள்​ளன.</p>
<p>அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த 28 ஆம் திகதி நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் இந்​திய தூதரக அதி​காரி ராஜலட்​சுமி கடாமிடம் இந்த பொருட்கள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/us-returns-657-ancient-statues-stolen-from-india/">இந்​தி​யா​வில் இருந்து திருடப்​பட்ட 657 பழங்​கால சிலைகளை திருப்பி அளித்த அமெரிக்கா</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://oruvan.com/us-returns-657-ancient-statues-stolen-from-india/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பிக்குகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்</title>
		<link>https://oruvan.com/new-restrictions-for-monks/</link>
					<comments>https://oruvan.com/new-restrictions-for-monks/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 01 May 2026 12:15:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49276</guid>

					<description><![CDATA[<p>இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பௌத்த பிக்குகளுக்கு புதிய கட்டாய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி, வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பௌத்த பிக்குகள், தத்தமது மூத்த பிக்கு, பிராந்திய பௌத்த தலைவர் மற்றும் அந்தந்த பீடங்களின் மகாநாயக்க தேரர் ஆகியோரிடமிருந்து பரிந்துரைகளைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அத்துடன், இந்தச் சட்டம் முன்னரே இயற்றப்பட்டிருந்தாலும், தற்போது இது கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/new-restrictions-for-monks/">பிக்குகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பௌத்த பிக்குகளுக்கு புதிய கட்டாய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.</p>
<p>இதன்படி, வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பௌத்த பிக்குகள், தத்தமது மூத்த பிக்கு, பிராந்திய பௌத்த தலைவர் மற்றும் அந்தந்த பீடங்களின் மகாநாயக்க தேரர் ஆகியோரிடமிருந்து பரிந்துரைகளைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.</p>
<p>அத்துடன், இந்தச் சட்டம் முன்னரே இயற்றப்பட்டிருந்தாலும், தற்போது இது கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>அண்மையில் தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டிருந்த பௌத்த பிக்குகள் தொடர்பில் வெளியான சர்ச்சைக்குரிய கருத்துகளை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/new-restrictions-for-monks/">பிக்குகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://oruvan.com/new-restrictions-for-monks/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>வலிகாமத்தில் மக்கள் போராட்டம்</title>
		<link>https://oruvan.com/peoples-protest-in-valikamath/</link>
					<comments>https://oruvan.com/peoples-protest-in-valikamath/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 01 May 2026 09:35:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[People's protest in Valikamath]]></category>
		<category><![CDATA[வலிகாமத்தில் மக்கள் போராட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49269</guid>

					<description><![CDATA[<p>யாழ்ப்பாணத்தின் வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி, குறித்த காணிகளின் உரிமையாளர்கள் இன்று  போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டமானது இன்று வலிகாமம் வடக்கு பகுதிகளில் உள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக இடம்பெற்றது. வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/peoples-protest-in-valikamath/">வலிகாமத்தில் மக்கள் போராட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>யாழ்ப்பாணத்தின் வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி, குறித்த காணிகளின் உரிமையாளர்கள் இன்று  போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.</p>
<p>இந்த போராட்டமானது இன்று வலிகாமம் வடக்கு பகுதிகளில் உள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக இடம்பெற்றது.</p>
<p>வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டது.</p>
<p>யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில், அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.</p>
<p>இந்நிலையில், தமது காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வருகின்றனர்.</p>
<p>அதன் பிரகாரம் தொழிலாளர் இன்றைய தினமும் போராட்டத்தை நடத்தியதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டார்.</p>
<p data-start="23" data-end="163">
<p>The post <a href="https://oruvan.com/peoples-protest-in-valikamath/">வலிகாமத்தில் மக்கள் போராட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://oruvan.com/peoples-protest-in-valikamath/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>uber, pick me ஓட்டுநர்களுக்கு ஊழியர் சேமலாப நிதிய சலுகையை வழங்க அரசாங்கம் ஆலோசனை</title>
		<link>https://oruvan.com/government-proposes-to-provide-employee-provident-fund-benefits-to-uber-pick-me-drivers/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Apr 2026 06:41:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[uber pick me]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49243</guid>

					<description><![CDATA[<p>நாட்டில் தற்போது உருவாக்கப்பட்டு வரும் விரிவான சமூகப் பாதுகாப்பு கொள்கையின் கீழ், ஊபர் (Uber) மற்றும் பிக்மி (PickMe) போன்ற செயலி வழிப் போக்குவரத்து மற்றும் விநியோக சேவைகளில் ஈடுபடும் பணியாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்தத் திட்டத்தின் ஊடாக, குறித்த பணியாளர்களின் பணிப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், அவர்களின் ஓய்வுக்கால வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான சலுகைகளை வழங்கவும் தொழில் அமைச்சு திட்டமிட்டுள்ளது. இது குறித்து தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிஸ்ஸ தெரிவிக்கையில், செயலி [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/government-proposes-to-provide-employee-provident-fund-benefits-to-uber-pick-me-drivers/">uber, pick me ஓட்டுநர்களுக்கு ஊழியர் சேமலாப நிதிய சலுகையை வழங்க அரசாங்கம் ஆலோசனை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாட்டில் தற்போது உருவாக்கப்பட்டு வரும் விரிவான சமூகப் பாதுகாப்பு கொள்கையின் கீழ், ஊபர் (Uber) மற்றும் பிக்மி (PickMe) போன்ற செயலி வழிப் போக்குவரத்து மற்றும் விநியோக சேவைகளில் ஈடுபடும் பணியாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.</p>
<p>இந்தத் திட்டத்தின் ஊடாக, குறித்த பணியாளர்களின் பணிப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், அவர்களின் ஓய்வுக்கால வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான சலுகைகளை வழங்கவும் தொழில் அமைச்சு திட்டமிட்டுள்ளது.</p>
<p>இது குறித்து தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிஸ்ஸ தெரிவிக்கையில்,</p>
<p>செயலி வழிப் பணியாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையில் முறையான &#8216;தொழில் வழங்குநர் &#8211; பணியாளர்&#8217; (Employer-Employee relationship) உறவுநிலை சட்டரீதியாகத் தெளிவாக இல்லாதபோதும், அவர்களை ஒரு சமூகப் பாதுகாப்பு வலையமைப்பிற்குள் கொண்டு வருவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது.</p>
<p>இவ்வாறான பணியாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவது உலகளாவிய ரீதியில் விவாதிக்கப்படும் ஒரு விடயமாகும்.</p>
<p>பொதுவாக ஒரு பணியில் சேரும்போது வழங்கப்படும் நியமனக் கடிதம், கடமைக்கு வரும் மற்றும் செல்லும் நேரத்தைக் கட்டுப்படுத்துதல் போன்ற காரணிகளைக் கொண்டே ஒரு பணி உறவு தீர்மானிக்கப்படுகிறது.</p>
<p>எனினும், செயலி வழிப் பணிகளில் இவ்வாறான கட்டுப்பாடுகள் இல்லாத சூழலிலும் இவர்களுக்கான உரிமைகளை வழங்க அரசாங்கம் முன்னுரிமை அளிக்கிறது.</p>
<p>இந்த வேலைத்திட்டத்தில் ஊபர் மற்றும் பிக்மி போன்ற நிறுவனங்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் அந்த நிறுவனங்களுடன் அமைச்சின் மட்டத்தில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p>
<p>நிறுவனங்களின் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள தரவுகளின்படி, குறித்த செயலிகளில் பணியாற்றுபவர்களில் 60 சதவீதமானோர் ஏனைய தொழில்களில் ஈடுபட்டுக்கொண்டே பகுதிநேரமாக இந்தப் பணிகளைச் செய்கின்றனர். எஞ்சிய 40 சதவீதமானோர் இதனை முழுநேரத் தொழிலாகக் கொண்டுள்ளனர்.</p>
<p>முழுநேரப் பணியாளர்களாக அடையாளம் காணப்படும் 40 சதவீதமானோரைத் தனியாக வகைப்படுத்தி, அவர்களை முறையான சமூகப் பாதுகாப்பு முறைமைக்குள் இணைக்க அமைச்சின் செயலாளர் உறுதியளித்துள்ளார்.</p>
<p>குறிப்பாக, முறையான தொழில் வழங்குநர் ஒருவரை அடையாளம் காண முடியாத சூழலிலும், இவர்களுக்கு ஊழியர் சேமலாப நிதிய (EPF) வசதிகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டு வருகின்றது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/government-proposes-to-provide-employee-provident-fund-benefits-to-uber-pick-me-drivers/">uber, pick me ஓட்டுநர்களுக்கு ஊழியர் சேமலாப நிதிய சலுகையை வழங்க அரசாங்கம் ஆலோசனை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சனத்தின் 18 ஆண்டுகால சாதனையை முறியடித்த ரிகெல்டன்</title>
		<link>https://oruvan.com/rickelton-breaks-sanath-jayasuriyas-18-year-record/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Apr 2026 06:19:21 +0000</pubDate>
				<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Cricket News]]></category>
		<category><![CDATA[IPL]]></category>
		<category><![CDATA[IPL 2026]]></category>
		<category><![CDATA[Ryan Rickelton]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49244</guid>

					<description><![CDATA[<p>ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை ரியான் ரிகெல்டன் படைத்துள்ளார். வெறும் 44 பந்துகளில் அவர் சதம் அடித்திருந்தார். இதன் மூலம் சனத் ஜயசூரியவின் 18 ஆண்டு கால சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. சனத் ஜயசூரிய 2008ம் ஆண்டு மும்மை அணி சார்பில் 45 பந்துகளில் சதம் அடித்து இந்தச் சாதனையை நிகழ்த்தினார். எனினும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இந்தப் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/rickelton-breaks-sanath-jayasuriyas-18-year-record/">சனத்தின் 18 ஆண்டுகால சாதனையை முறியடித்த ரிகெல்டன்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை ரியான் ரிகெல்டன் படைத்துள்ளார்.</p>
<p>வெறும் 44 பந்துகளில் அவர் சதம் அடித்திருந்தார். இதன் மூலம் சனத் ஜயசூரியவின் 18 ஆண்டு கால சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.</p>
<p>சனத் ஜயசூரிய 2008ம் ஆண்டு மும்மை அணி சார்பில் 45 பந்துகளில் சதம் அடித்து இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.</p>
<p>எனினும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 243 ஓட்டங்களை குவித்திருந்தது.</p>
<p>தென்னாப்பிரிக்க துடுப்பாட்ட வீரர் ரியான் ரிகெல்டன் 44 பந்துகளில் தனது சதத்தை நிறைவுசெய்து, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆட்டமிழக்காமல் 123 ஓட்டங்களை குவித்தார்.</p>
<p>இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அடிக்கப்பட்ட அதிவேக சதம் மற்றும் அந்த அணியின் வரலாற்றில் அதிகபட்ச தனிநபர் ஓட்டம் ஆகிய சாதனைகளை அவர் முறியடித்தார்.</p>
<p>எவ்வாறாயினும், இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/rickelton-breaks-sanath-jayasuriyas-18-year-record/">சனத்தின் 18 ஆண்டுகால சாதனையை முறியடித்த ரிகெல்டன்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஈரான் போரால் கடும் நெருக்கடியில் டிரம்ப் &#8211; மூன்று வழிகள் மட்டுமே உள்ளன</title>
		<link>https://oruvan.com/trump-in-dire-straits-over-iran-war-only-three-options-available/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Apr 2026 05:56:00 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[donald trump]]></category>
		<category><![CDATA[Iran War]]></category>
		<category><![CDATA[usa]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49240</guid>

					<description><![CDATA[<p>ஈரானுக்கு எதிரான தற்போதைய இராணுவ நடவடிக்கை தொடர்பாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எதிர்கொண்டிருந்த காலக்கெடு மே முதலாம் திகதியான நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்கச் சட்டமான போர் அதிகாரச் சட்டத்தின்படி, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் ஜனாதிபதியால் 60 நாட்களுக்கு மேல் இராணுவ நடவடிக்கையைத் தொடர முடியாது. இந்நிலையில், ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்து 60 நாட்கள் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி, டிரம்பிற்கு தற்போது நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லை என்றும், இது அவரை மூன்று சாத்தியமான [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/trump-in-dire-straits-over-iran-war-only-three-options-available/">ஈரான் போரால் கடும் நெருக்கடியில் டிரம்ப் &#8211; மூன்று வழிகள் மட்டுமே உள்ளன</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஈரானுக்கு எதிரான தற்போதைய இராணுவ நடவடிக்கை தொடர்பாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எதிர்கொண்டிருந்த காலக்கெடு மே முதலாம் திகதியான நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.</p>
<p>அமெரிக்கச் சட்டமான போர் அதிகாரச் சட்டத்தின்படி, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் ஜனாதிபதியால் 60 நாட்களுக்கு மேல் இராணுவ நடவடிக்கையைத் தொடர முடியாது.</p>
<p>இந்நிலையில், ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்து 60 நாட்கள் நிறைவுக்கு வந்துள்ளது.</p>
<p>இதன்படி, டிரம்பிற்கு தற்போது நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லை என்றும், இது அவரை மூன்று சாத்தியமான வழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க நிர்பந்திக்கும் என்றும் தெரியவந்துள்ளது.</p>
<p>அந்த வகையில், ஈரானுடன் ஒரு அமைதி ஒப்பந்தம் செய்துகொள்வதே முதல் வழியாகும், அதன் மூலம் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும்.</p>
<p>அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நிறுத்தி, கடல் முற்றுகையை நீக்கினால், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதாக ஈரான் ஒரு நிபந்தனைக்குட்பட்ட சலுகையை முன்வைத்துள்ளது.</p>
<p>எனினும், இந்த சாத்தியக்கூறு பலவீனமானதாகக் கருதப்படுகிறது.</p>
<p>இரண்டாவது வழி, இராணுவ நடவடிக்கைக்கான அங்கீகாரத்தை காங்கிரஸிடம் கோருவதாகும், இதற்கு எளிய பெரும்பான்மை தேவை.</p>
<p>இந்த நிலையில், போரைத் தொடர முடியும் என்பதுடன் தரைவழி நடவடிக்கை உட்பட மேலதிக நடவடிக்கைகளும் சாத்தியமாகும். எனினும் இந்த சாத்தியக்கூறு நடுத்தரமானது என விவரிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மூன்றாவது மற்றும் அதிக சாத்தியமான சூழ்நிலை என்னவென்றால், காலக்கெடு முடிந்த பிறகும் ஜனாதிபதி டிரம்ப் அதைப் புறக்கணித்துப் போரைத் தொடர்வதுதான்.</p>
<p>இது ஒருவித சட்ட மற்றும் அரசியல் நெருக்கடிக்கு வழிவகுத்து, வெள்ளை மாளிகைக்கும் காங்கிரஸுக்கும் இடையிலான மோதலை மேலும் தீவிரப்படுத்தக்கூடும்.</p>
<p>இந்நிலையில், டிரம்ப் ஒரு கடினமான சூழ்நிலையில் இருப்பதாகவும், அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அரசியல் அல்லது சட்டரீதியான அபாயங்களைக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மேலும் எந்த வழியும் தெளிவான வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கவில்லை எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p>
<p><strong>அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம் ஏன் முடங்கியுள்ளது?</strong></p>
<p>பல முக்கிய அம்சங்களில் உள்ள கருத்து வேறுபாடுகள் காரணமாக, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான சாத்தியமான ஒப்பந்தம் இன்னும் முடங்கியுள்ளது.</p>
<p>அதேவேளையில், இரு நாடுகளின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மீது உலகத்தின் கவனம் குவிந்துள்ளது.</p>
<p>அறிக்கைகளின்படி, போர் நிறுத்தத்திற்கு ஈடாக ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தில் எந்தவொரு பெரிய சலுகைகளையும் வழங்காததால், அந்நாடு முன்வைத்த சமீபத்திய முன்மொழிவுகளுக்கு டிரம்ப் ஒப்புக்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.</p>
<p><strong><em>ஈரானின் அணுசக்தித் திட்டம்</em></strong></p>
<p>முக்கியமான சர்ச்சைகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ஈரானின் அணுசக்தித் திட்டம் ஆகும்.</p>
<p>இதில், ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது.</p>
<p>ஆனால் அத்தகையத் தடைகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இருக்க வேண்டும் என்று ஈரான் வாதிடுகிறது.</p>
<p><strong><em>யுரேனியம் படிவுகள்</em></strong></p>
<p>யுரேனிய இருப்பும் ஒரு முக்கியப் பிரச்சினையாகும். ஈரானிடம் உள்ள சுமார் 400 கிலோகிராம் செறிவூட்டப்பட்ட</p>
<p>யுரேனியத்தின் மீது அமெரிக்கா முழுமையானக் கட்டுப்பாட்டைக் கோருகிறது, ஆனால் ஈரான் இந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளது.</p>
<p><strong><em>ஹார்முஸ் நீரிணை</em></strong></p>
<p>மறுபுறம், ஹார்முஸ் நீரிணையும் பதற்றத்தின் மையமாகக் காணப்படுகின்றது. அங்கு, அமெரிக்கக் கடற்படை முற்றுகையை நீக்கினால் மட்டுமே தடைகளை நீக்க முடியும் என்ற நிபந்தனையுடன் ஈரான் தடைகளைத் தொடர்ந்து விதித்துள்ளது.</p>
<p>அதேவேளையில், ஒரு உடன்பாடு எட்டப்படும் வரை முற்றுகை தொடரும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p>
<p><strong><em>முடக்கப்பட்ட சொத்துக்களை மீட்டெடுத்தல்</em></strong></p>
<p>இந்த ஒப்பந்தத்திற்கு ஈடாக, பொருளாதாரத் தடைகளை நீக்குமாறும், சுமார் 20 பில்லியன் டொலர் மதிப்புள்ள முடக்கப்பட்டச் சொத்துக்களைத் திருப்பித் தருமாறும் ஈரான் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
<p><strong><em>சேதங்களுக்கான இழப்பீடு</em></strong></p>
<p>மேலும், அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களுக்காக ஈரான் ஏறத்தாழ 279 பில்லியன் டொலர் இழப்பீடு கோரியுள்ளது.</p>
<p>இது பேச்சுவார்த்தைகளில் மற்றொரு பெரும் தடையாக அமைந்துள்ளது.</p>
<p><strong><em>ஈரானின் பிராந்திய செல்வாக்கு</em></strong></p>
<p>பிராந்திய செல்வாக்கும் ஒரு சிக்கலான பிரச்சினையாகும்.</p>
<p>லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா மற்றும் காசாவில் உள்ள ஹமாஸ் உள்ளிட்ட தனது கூட்டாளிகளுக்கான ஆதரவை ஈரான் குறைத்துக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா விரும்புகையில், ஈரான் இந்த நிலைப்பாட்டை மறுத்துள்ளது.</p>
<p>நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த அடிப்படைக் கருத்து வேறுபாடுகளைத் தீர்க்காமல் ஒரு விரிவான உடன்பாட்டை எட்டுவது தற்போது கடினமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/trump-in-dire-straits-over-iran-war-only-three-options-available/">ஈரான் போரால் கடும் நெருக்கடியில் டிரம்ப் &#8211; மூன்று வழிகள் மட்டுமே உள்ளன</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க புதிய அதிகாரசபை &#8211; ஜனாதிபதி தலைமையில் முக்கிய தீர்மானம்</title>
		<link>https://oruvan.com/new-authority-to-protect-the-central-highlands-important-decision-under-the-leadership-of-the-president/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Apr 2026 04:45:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[அநுர குமார]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49235</guid>

					<description><![CDATA[<p>மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்காக புதிய அதிகாரசபை ஒன்றை நிறுவும் செயற்பாட்டின் முன்னேற்றத்தை ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கடந்த டிட்வா சூறாவளியின் போது ஏற்பட்ட மண்சரிவுகளால் மத்திய மலைநாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டதுடன், நாட்டின் இதயம் போன்ற மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மேம்படுத்துவதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார். அதன்படி, உயர் நீரேந்துப் பிரதேசங்களில் நிலவும் சுற்றாடல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், மத்திய [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/new-authority-to-protect-the-central-highlands-important-decision-under-the-leadership-of-the-president/">மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க புதிய அதிகாரசபை &#8211; ஜனாதிபதி தலைமையில் முக்கிய தீர்மானம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்காக புதிய அதிகாரசபை ஒன்றை நிறுவும் செயற்பாட்டின் முன்னேற்றத்தை ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.</p>
<p>கடந்த டிட்வா சூறாவளியின் போது ஏற்பட்ட மண்சரிவுகளால் மத்திய மலைநாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டதுடன், நாட்டின் இதயம் போன்ற மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மேம்படுத்துவதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.</p>
<p>அதன்படி, உயர் நீரேந்துப் பிரதேசங்களில் நிலவும் சுற்றாடல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதற்கும் எனத் தனியான அதிகாரசபை ஒன்றை நிறுவுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. இந்தச் செயல்முறை தொடர்பான முன்னேற்றம் மற்றும் சட்ட ஏற்பாடுகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டதுடன், அது தொடர்பான முன்மொழிவுகளும் கருத்துகளும் முன்வைக்கப்பட்டன.</p>
<p>அந்த அனைத்து முன்மொழிவுகளையும் ஆலோசனைகளையும் கருத்திற்கொண்டு, இதன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இங்கு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.</p>
<p>இலங்கையின் உயர் நீரேந்துப் பிரதேசங்களின் சுற்றாடல் மறுசீரமைப்பு மற்றும் முகாமைத்துவம் ஆகிய பணிகள் இந்தப் புதிய அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்படுவதுடன், தேசிய நீர் பாதுகாப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பு, அனர்த்த அபாயக் குறைப்பு, பொருளாதார மற்றும் வலுசக்தி செயற்திறன், காலநிலை மாற்றங்களுக்கு இசைவாக்கம் அடைதல் மற்றும் அவற்றின் பாதிப்புகளைக் குறைத்தல், இயற்கை மூலதனக் கணக்கீடு ஆகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக, நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பையும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படும்.</p>
<p>ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளரும் வலுசக்தி அமைச்சின் செயலாளருமான ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்க, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க உள்ளிட்ட அமைச்சுகளின் செயலாளர்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள், அரச அதிகாரிகள், சூழலியலாளர்கள், இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டுத் துறைசார் நிபுணர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.</p>
<p><img fetchpriority="high" decoding="async" class="alignnone size-full wp-image-49238" src="https://oruvan.com/wp-content/uploads/2026/04/683409481_1467410655428359_5874181611599524004_n.jpg" alt="" width="1600" height="1053" /> <img decoding="async" class="alignnone size-full wp-image-49236" src="https://oruvan.com/wp-content/uploads/2026/04/685778070_1467410162095075_8516709571662609587_n.jpg" alt="" width="1600" height="781" /></p>
<p>The post <a href="https://oruvan.com/new-authority-to-protect-the-central-highlands-important-decision-under-the-leadership-of-the-president/">மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க புதிய அதிகாரசபை &#8211; ஜனாதிபதி தலைமையில் முக்கிய தீர்மானம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
