பசிலுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

பசிலுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்ஷ சுகவீனமுற்று வெளிநாட்டில் இருப்பதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்ததையடுத்து
மாத்தறை பிரதான நீதவான் அருண புத்ததாச வழக்கை ஒத்திவைத்தார்.

மாத்தறை – ப்ரவுன்சில் பகுதியில் 1.5 ஏக்கர் நிலத்தை 50 மில்லியன் ரூபாவிற்கு கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கு விசாரணையே
இன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்பட்டது.

பசில் ராஜபக்ஷவின் மனைவியின் சகோதரியான புண்ய காந்தி என்பவரின் பெயரில், இந்தக் காணி 50 மில்லியன் ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் 2017 ஆம் ஆண்டு நிதி குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

 

Share This