தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவையில் மாற்றம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவையில் மாற்றம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவையில் இன்று முதல் முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று (10) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பல புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்றனர்.

அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்தவும் நெறிப்படுத்தவும் 2026 வரவு செலவுத் திட்டத்திற்கு ஏற்ப அமைச்சரவை மறுசீரமைப்பை மேற்கொள்ள அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, இன்று பதவியேற்ற புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளனர்.

பிமல் ரத்நாயக்க – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாடு
அனுர கருணாதிலக்க – துறைமுகங்கள், சிவில் விமான போக்குவரத்து
சுசில் ரணசிங்க – வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் பொறுப்பாகவும் பிரதி அமைச்சர்களாக,
ஆச்சார்ய அனில் ஜயசிங்க – திட்டமிடல் பிரதி அமைச்சர்
டி.பி சமன் – வீடமைப்பு, நீர் வழங்கல் பிரதி அமைச்சர்
எம்.எம்.மொஹமட் மூனீர் – மதவிவகார கலாசார பிரதி அமைச்சர்
வைத்தியர் மூதித ஹங்சகவிஜயமுனி – சுகாதார பிரதி அமைச்சர்
அரசிந்த செனரத் விதாரண – காணி மற்றும் நீர்பாசன பிரதி அமைச்சர்.
எச்.எம்.தினிது சமன் குமார – இளைஞர் விவகார பிரதி அமைச்சர்.
யு.டி.திசாந்த ஜயவீர – பொருளாதார பிரதி அமைச்சர்
ஆச்சார்ய கௌசல்ய ஆரியரத்ன – ஊடக பிரதி அமைச்சர்
எம்.ஐ.எம். அர்கம் – மின்சக்தி பிரதி அமைச்சர்

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )