பஸ் சாரதிகள் ஆசனப்பட்டிகளை (Seat belt) அணிவது கட்டாயம்

இலங்கை போக்குவரத்து சபை உட்பட் சகல பயணிகள் போக்குவரத்து பஸ்களின் சாரதிகள் ஆசனப்பட்டிகளை (Seat belt)
அணிவது கட்டாயமாக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து சபையின் தலைவர் பி.ஏ. சந்திரபாலா தெரிவித்தார்.
இதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் சாரதிகள் ஆசனப்பட்டிகளை அணிவது கட்டாயமாக்கப்படவுள்ளது.
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் சர்வதேச தரம் வாய்ந்த நடைமுறைகளுக்கமைய போக்குவரத்து
பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான முயற்சி எனவும் அவர் ஊடகங்களுக்கு நேற்று தெரிவித்தார்.