Breaking – ரணில் விக்கிரமசிங்க கைது

Breaking – ரணில் விக்கிரமசிங்க கைது

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறிது நேரத்திற்கு முன்பு குற்றப் புலனாய்வு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு சென்ற பயணம் தொடர்பான விசாரணைக்காக அவர் இன்று குற்றப் புலனாய்வு பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளராக இருந்த சமன் ஏகநாயக்க மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளராக இருந்த சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமும் பொலிஸார் ஏற்கனவே வாக்குமூலம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This