ஹவானா நீதிமன்றம் வளாகத்தில் குண்டு தாக்குதல் – மக்கள் வெளியேற்றம்

ஹவானா நீதிமன்றம் வளாகத்தில் குண்டு தாக்குதல் – மக்கள் வெளியேற்றம்

வட அயர்லாந்தின் தலைநகரான பெல்ஃபாஸ்டின்  (Belfast ) ஹவானா நீதிமன்றம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பைப் குண்டு வீசப்பட்டதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது, அந்த பைப் குண்டு காரொன்றின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

இதைத்தொடர்ந்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, அதனை பாதுகாப்பாக அகற்றி ஆய்வுக்காக எடுத்துச் சென்றதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )