மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞரின் சடலம் மீட்பு

மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞரின் சடலம் மீட்பு

அங்குனுகொலபெலஸ்ஸ, அபேசேகர கிராமப் பகுதியில் இன்று (13) காலை கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இளைஞனின் உடலுக்கு அருகில் அவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மற்றும் கையடக்க தொலைபேசியும் கிடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட இளைஞர் அபேசேகர கிராமத்தில் உள்ள அமி எல பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

CATEGORIES
Share This