<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Rasmila, Author at Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/author/rasmila/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/author/rasmila/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Mon, 08 Jun 2026 07:22:10 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Rasmila, Author at Oruvan.com</title>
	<link>https://oruvan.com/author/rasmila/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஆயுத சூப்பர் மார்க்கெட்டும் முள்ளிவாய்க்கால் பேரழிவும்  கொலம்பகேயின் வாக்குமூலத்தால் அம்பலமாகும் சீன முகம்</title>
		<link>https://oruvan.com/mullivaikkal-disaster-former-navy-chief-exposes-chinas-weapons-supermarket-conspiracy/</link>
		
		<dc:creator><![CDATA[Rasmila]]></dc:creator>
		<pubDate>Mon, 08 Jun 2026 07:18:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA["Take Weapons Now]]></category>
		<category><![CDATA[Pay Later" – Admiral Colombage Strips China’s Deadly Mask in Eelam Tamil Genocide]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[போர்]]></category>
		<category><![CDATA[முள்ளிவாய்க்கால்]]></category>
		<category><![CDATA[வடக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49501</guid>

					<description><![CDATA[<p>ஈழத்தமிழினத்தின் வரலாற்றைச் சோகமயமாக மாற்றிய முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னணியில், சர்வதேச விதிகளைப் புறந்தள்ளி சீனா எவ்வாறு ஒரு ‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’ போலச் செயற்பட்டது என்பதை இலங்கைக் கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஜயநாத் கொலம்பகேயின் அண்மைய உரை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றழிக்கப்பட்டு, ஈழத்தமிழினத்தின் வரலாறே குருதியால் எழுதப்பட்டதன் பின்னணியில், உலக வல்லரசுகளின் புவிசார் அரசியல் சதுரங்க ஆட்டம் இருந்தது என்பது உலகறிந்த உண்மை. ஆயினும், தமிழினப் படுகொலைக்குச் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/mullivaikkal-disaster-former-navy-chief-exposes-chinas-weapons-supermarket-conspiracy/">ஆயுத சூப்பர் மார்க்கெட்டும் முள்ளிவாய்க்கால் பேரழிவும்  கொலம்பகேயின் வாக்குமூலத்தால் அம்பலமாகும் சீன முகம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஈழத்தமிழினத்தின் வரலாற்றைச் சோகமயமாக மாற்றிய முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னணியில், சர்வதேச விதிகளைப் புறந்தள்ளி சீனா எவ்வாறு ஒரு ‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’ போலச் செயற்பட்டது என்பதை இலங்கைக் கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஜயநாத் கொலம்பகேயின் அண்மைய உரை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.</p>
<p>முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றழிக்கப்பட்டு, ஈழத்தமிழினத்தின் வரலாறே குருதியால் எழுதப்பட்டதன் பின்னணியில், உலக வல்லரசுகளின் புவிசார் அரசியல் சதுரங்க ஆட்டம் இருந்தது என்பது உலகறிந்த உண்மை. ஆயினும், தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச விதிகளைப் புறந்தள்ளி சீனா எவ்வாறு ‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’டைத் திறந்து பின்னணியில் நின்றது என்பதை, இலங்கை அரசாங்கத்தின் உயர் அதிகாரியாகவும் கடற்படையின் தளபதியாகவும் இருந்த அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தற்போது பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.</p>
<p>கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேசக் கல்வி மையத்தில் அண்மையில் அவர் ஆற்றிய உரை, தமிழ் மக்களின் நெஞ்சில் உள்ள ஆறாத வடுக்களை மீண்டும் கிளறியுள்ளதுடன், சீனாவின் உண்மையான கொடூர முகத்தையும் அம்பலப்படுத்தியுள்ளது.</p>
<p>இந்த வெற்றிக் களிப்புரை, சிங்களத் தேசத்தின் வீரத்தினால் போர் வெல்லப்படவில்லை, மாறாகச் சீனாவின் மூலோபாய வர்த்தக வெறியினாலும் அதன் நிபந்தனையற்ற இராணுவ ஆதரவினாலும்தான் ஈழ நிலம் பேரழிவிற்குள் தள்ளப்பட்டது என்ற கசப்பான உண்மையை உரத்துச் சொல்கிறது.</p>
<p><strong>‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’ சதித் திட்டம்</strong></p>
<p>2006–2009 வரையான காலப்பகுதியில், தமிழ் மக்கள் பாதுகாப்பு வளையங்களுக்குள் முடக்கப்பட்டிருந்த வேளையில், இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகள் ‘பேரழிவு ஆயுதங்களை’ வழங்க மறுத்துத் தடைகளை விதித்திருந்தன. &#8220;பேரழிவு ஆயுதங்கள் இல்லாமல் எவ்வாறு ஒரு போரை எதிர்கொண்டு எதிரிகளை அழிக்க முடியும்?&#8221; என்று கொலம்பகே தனது உரையில் கேலியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.</p>
<p>இலங்கை இராணுவம் திணறிய அந்த இக்கட்டான தருணத்தில்தான், சீனா கொழும்பு மற்றும் காலித் துறைமுகங்களுக்குள் தனது சொந்தப் பாதுகாப்புக் கிடங்குகளை அமைத்து ஆயுத விநியோகத்தை முன்னெடுத்தது.</p>
<p>&#8220;இது ஒரு ஷொப்பிங் பட்டியலை எடுத்துக் கொண்டு ஆயுத சூப்பர் மார்க்கெட்டுக்குச் செல்வது போன்றதாகும். நீங்கள் அங்கு சென்று உங்களுக்குத் தேவையான ஆயுதங்களைச் சேகரித்து உடனடியாகப் போர்க்களத்தில் பயன்படுத்தலாம்&#8221; என்ற கொலம்பகேயின் வாக்குமூலம் அதிர்ச்சியளிக்கக்கூடியது.</p>
<p>முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களின் உடல்கள் சிதறிக்கொண்டிருந்தபோது, கொழும்புத் துறைமுகத்தில் சீனாவின் ஆயுதக் கிடங்குகளின் கதவுகள் அகலத் திறந்திருந்தன. தமிழ் மக்களின் மரணங்களை சீனா தனது புவிசார் அரசியல் சதுரங்கத்தின் இலாபக் கணக்காகவே பார்த்தது என்பதை இந்த வாக்குமூலம் அப்பட்டமாக நிரூபித்துள்ளது.</p>
<p><strong>அபிவிருத்தி என்ற மாயையும் திட்டமிட்ட உள்நுழைவும்</strong></p>
<p>போர் முடிவடைந்த 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் ஒரு நெடுஞ்சாலை கூட இருக்கவில்லை என்பதை கொலம்பகே தனது உரையில் வெளிப்படையாகச் சுட்டிக்காட்டியுள்ளார். போரினால் உலுக்கப்பட்டிருந்த இலங்கை, சர்வதேச சமூகத்திடமிருந்து நிதி உதவிகளைப் பெற முடியாமல் ஒரு வெறிச்சோடிய நிலையை எதிர்கொண்டது. இந்த உள்நாட்டுப் பலவீனத்தையே சீனா தனக்கான நுழைவாயிலாக மாற்றிக்கொண்டது.</p>
<p>இரண்டாயிரத்துப் பதினொன்று முதல் இரண்டாயிரத்துப் பதிமூன்று வரையான மிகக் குறுகிய காலப்பகுதிக்குள் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு &#8211; கட்டுநாயக்க நெடுஞ்சாலை, மத்தள விமான நிலையம் போன்ற பிரமாண்டமான திட்டங்களை சீனா முடுக்கிவிட்டது. இது ஏதோ இலங்கையின் மீதான அன்பினால் செய்யப்பட்ட முதலீடல்ல, மாறாகத் தென்னிலங்கையைத் தனது வர்த்தகக் கடன் பொறிக்குள் நிரந்தரமாகப் பூட்டி வைப்பதற்காகச் சீனா விரித்த மிக நுட்பமான பொருளாதார வலை என்பதை கொலம்பகேயின் உரை நமக்குத் தெளிவுபடுத்துகின்றது.</p>
<p><strong>‘பணம் பிறகு, பிணங்கள் இப்போது’</strong></p>
<p>&#8220;ஆயுதங்களை எடுத்துச் சென்று உடனடியாகப் பயன்படுத்துங்கள், பணத்தைப் பிறகு தாருங்கள்&#8221; என்று கொலம்பகே குறிப்பிடும் சீனாவின் இந்தச் சலுகை, இலங்கை அரசுக்கு வழங்கப்பட்ட வெறும் இராணுவக் கடன் அல்ல.</p>
<p>‘பொருட்களைப் பெற்றுக்கொண்டு பிறகு பணம் செலுத்துங்கள்’ என்ற சீனாவின் ஏற்பாடு, இலங்கை இராணுவத்திற்கு வழங்கப்பட்ட சலுகை அல்ல, அது தமிழ் இனத்தை முற்றாக அழிப்பதற்காக எழுதப்பட்ட மரண சாசனமாகும். தமிழ் மக்களைக் கொன்று குவிக்கச் சீனா செய்த இந்த ஆயுத முதலீடு, போருக்குப் பிந்தைய காலத்தில் பேரினவாத அரசாங்கத்தை முற்றாகத் தன்வசப்படுத்துவதற்கான ஒரு தந்திரோபாய நகர்வாகும்.</p>
<p>போர் முடிந்த மறுகணமே, இந்த ஆயுத விநியோக நிறுவனங்கள் ஒரே இரவில் ‘கட்டுமான நிறுவனங்களாக’ அவதாரமெடுத்தன. பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் கொன்றழிக்கப்பட்டுக் கிடந்தபோது, அந்தப் பிணங்களின் மீதுதான் சீனாவின் கொழும்புத் துறைமுக நகரமும், தெற்கு அதிவேக நெடுஞ்சாலைகளும் நுரைச்சோலை மின்நிலையமும் கட்டப்பட்டுள்ளன என்பதையும் கொலம்பகே தனது உரையின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.</p>
<p>இன்று இலங்கையில் பளபளக்கும் அதிவேக நெடுஞ்சாலைகளின் அடித்தளங்கள், தமிழ் மக்களின் குருதியினாலும் முள்ளிவாய்க்கால் சாம்பலினாலும் மெழுகப்பட்டவை என்பதைச் சிங்களத் தேசமும், சீனப் பேரரசும் மறைக்கத் துடித்தாலும், அவர்களின் சொந்த அதிகாரிகளின் வாக்குமூலங்களே அதை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.</p>
<p><strong>வடக்கு &#8211; கிழக்கைக் குறிவைக்கும் சீனாவின் ‘மென் அதிகார’ வியூகம்</strong></p>
<p>தென்னிலங்கையைத் தனது கடன் பொறிக்குள் சிக்க வைத்து, அம்பாந்தோட்டை துறைமுகம் உட்படப் பல மூலோபாயப் பகுதிகளைத் தன்வசப்படுத்திய சீனாவுக்கு, கடந்த பல வருடங்களாக வடக்கு &#8211; கிழக்கு என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றது. ஈழத்தமிழர்களின் தாயக நிலத்தின் மீது நேரடியாகக் கால்வைக்க முடியாமல் சீனா இப்போதும் தவித்துக் கொண்டிருக்கின்றது.</p>
<p>இதற்குக் காரணம், தமிழ் மக்களின் உறுதியான ஒரே நோக்க அரசியல் கோட்பாடும், தாயகக் கோட்பாடும் ஆகும். தமிழ் மக்களின் இந்த அரசியல் இருப்பை உடைத்துத் தவிடுபொடியாக்கும் சீனாவின் அத்தனை முயற்சிகளுக்கும், வெளிப்புறச் சக்தியான இந்தியாவின் பிராந்தியப் பாதுகாப்பு நலன்களும், தலையீடுகளும் பெரும் முட்டுக்கட்டையாக அமைந்துள்ளன.</p>
<p>அத்துடன், தமிழர் பகுதி அரசியல் தலைமைகளின் இறுக்கமான பிடியும், சீனாவின் நேரடி ஊடுருவலுக்குப் பாரிய தடையாக இருந்து வருகின்றது. இருப்பினும், சீனா தனது காய்நகர்த்தல்களைக் கைவிட்டதாக இல்லை. நேரடியாக வடக்கு &#8211; கிழக்கிற்குள் நுழைய முடியாத சூழ்ச்சி ஆட்டத்தை அது இப்போது மிக நிதானமாகவும் தந்திரமாகவும் அரங்கேற்றத் தொடங்கியுள்ளது.</p>
<p><strong>வாழ்வாதார முகமூடியும் தமிழ் மக்களின் விழிப்புணர்வும்</strong></p>
<p>நேரடி இராணுவ அல்லது பொருளாதாரத் திட்டங்கள் மூலம் நுழைய முற்பட்டால் இந்தியாவின் எதிர்ப்பையும் தமிழ் மக்களின் கொந்தளிப்பையும் சந்திக்க நேரிடும் என்பதைச் சீனா நன்கு அறிந்துள்ளது. இதனால், ‘மென் அதிகார’ (Soft Power) அரசியலைச் சீனா கையில் எடுத்துள்ளது.</p>
<p>வடக்கு &#8211; கிழக்கின் கடற்றொழிலாளர் அமைப்புகள், உள்ளூர் முக்கியப் புள்ளிகள், சில அடிவருடி அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகளைக் கைக்குள் போட்டுகொண்டு படிப்படியாக, மெதுவாக உள்நுழையும் சதித்திட்டங்களை சீனா நகர்த்திக் கொண்டிருக்கின்றது. வறுமையை முதலாக்கி, வாழ்வாதார உதவிகள் என்ற போர்வையிலும், கடலட்டைப் பண்ணைகள், உலர் உணவு விநியோகம் என்ற முகமூடியணிந்தும் தமிழ் மக்களின் மனங்களை வெல்லும் நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன.</p>
<p>இன்றுவரை சர்வதேச அரங்கில் தமிழ் மக்களுக்கான ஐநா மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட தளங்களில் நீதி மறுக்கப்படுவதற்குப் பின்னணியில், இந்த ‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’ நடத்திய சீனாவின் வீட்டோ அதிகாரக் கரங்களே முதன்மையாக இருக்கின்றன என்பதைத் தமிழ் சமூகம் மறந்துவிடக்கூடாது. ஜெனிவாவில் தமிழர்களுக்கு எதிராகப் பகிரங்கமாக நின்றுகொண்டு, யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் வந்து உதவிப் பொருட்கள் வழங்குவது தமிழ் மக்களின் அரசியல் விழிப்புணர்வை மழுங்கடிக்கும் சதியன்றி வேறில்லை.</p>
<p><strong>நிலப்பறிப்பின் நீண்டகாலப் பேராபத்து</strong></p>
<p>கடலட்டைப் பண்ணைகள், முதலீடுகள் என்ற போர்வையில் வடக்கு &#8211; கிழக்கின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்புகளையோ அல்லது கடல் வளங்களையோ ஏதேனுமோர் அடிப்படையில் சீனாவுக்குத் தாரை வார்ப்பது, தமிழ் இனத்தின் எதிர்காலத்திற்குப் பாரிய, நீண்டகாலப் பேராபத்தாய் முடியும்.</p>
<p>தென்னிலங்கையைப் போல நமது தாயக நிலத்தையும் சீனா தனது ஆதிக்கப் பிடிக்குள் கொண்டு வந்தால், தமிழ் மக்களின் சுயாட்சி மற்றும் சுயநிர்ணய உரிமைக்கான அரசியல் கோரிக்கைகள் சர்வதேச அரங்கில் முற்றாக நீர்த்துப் போகச் செய்யப்படும். அதுமட்டுமன்றி, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பிராந்தியப் போர்க்களமாக நமது பூர்வீக நிலம் மாறும் அபாயமும் உண்டு. நிலம் என்பது வெறும் பொருளல்ல, அது தமிழர்களின் இறையாண்மை மற்றும் வரலாற்றுத் தொடர்ச்சியின் அடையாளம் என்பதை உணர்ந்து, அதனைப் பாதுகாப்பது நமது முதன்மைக் கடமையாகும்.</p>
<p>அட்மிரல் கொலம்பகேயின் இந்த வாக்குமூலம் தமிழ் மக்களுக்கு உணர்த்தும் பாடம் என்னவெனில், புவிசார் சர்வதேச அரசியலில் எந்த நாடும் நமக்கு நிரந்தர நண்பனும் அல்ல, பகையாளியும் அல்ல. சீனாவுக்குத் தேவைப்பட்டது தமிழர்களின் தாயக நிலத்தின் மூலோபாய முக்கியத்துவமே தவிர, இங்கு வாழும் தமிழ் மக்களின் உரிமைகளோ, அவர்களின் உயிர்களோ அல்ல. தமது உறவுகளின் எலும்புகளின் மேல் கட்டப்பட்ட சீனக் கட்டுமானங்களையும், அவர்களின் தந்திரோபாய உதவிகளையும் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டிய வரலாற்றுத் தருணம் இதுவாகும்.</p>
<p>உள்நாட்டுக் கைக்கூலிகளைப் பயன்படுத்திச் சீனா நடத்தும் இந்த மெதுவான ஊடுருவல் குறித்துத் தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகளும், சமூக ஆர்வலர்களும் விழிப்படைய வேண்டும். நமது தாயக நிலத்தை மற்றொரு வல்லரசின் சூறையாடலுக்குத் தாரைவார்ப்பது, முள்ளிவாய்க்காலில் மடிந்த ஆன்மாக்களுக்குச் செய்யும் துரோகம்.</p>
<p>சீனா விரிக்கும் சதிவலையைத் தவிடுபொடியாக்கி, நமது அரசியல் அபிலாஷைகளை உறுதியுடன் காப்பதே ஈழத்தமிழினத்தின் இன்றைய அவசரத் தேவையாகும்.</p>
<p>The post <a href="https://oruvan.com/mullivaikkal-disaster-former-navy-chief-exposes-chinas-weapons-supermarket-conspiracy/">ஆயுத சூப்பர் மார்க்கெட்டும் முள்ளிவாய்க்கால் பேரழிவும்  கொலம்பகேயின் வாக்குமூலத்தால் அம்பலமாகும் சீன முகம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தியவன்னத் தவளைகளும் உலகப் போர் ஆபத்தும் ; 2022 இன் படிப்பினைகளை மறந்ததா இலங்கை</title>
		<link>https://oruvan.com/global-war-threats-and-political-inaction-is-sri-lanka-forgetting-the-lessons-of-2022/</link>
		
		<dc:creator><![CDATA[Rasmila]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Jun 2026 07:04:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முகப்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரிசி]]></category>
		<category><![CDATA[இஸ்ரேல்]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[யூரியா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49463</guid>

					<description><![CDATA[<p>&#8211; Dharmaraja Rasmila ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே நீடித்து வரும் பிராந்தியப் போர்ச் சூழல், உலகப் பொருளாதாரத்திற்கு ஏற்படுத்தி வரும் தாக்கம் மிகப் பயங்கரமானது. உலகளாவிய இந்த நெருக்கடி ஒருபுறமிருக்க, இலங்கையின் தற்போதைய நிலையைச் சரியாகப் புரிந்துகொள்ள நாம் 2022 ஆம் ஆண்டின் கசப்பான யதார்த்தங்களை மீண்டும் உற்றுநோக்க வேண்டியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றபோது 110 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் மதிப்பு, அவர் நாட்டை விட்டு வெளியேறும்போது [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/global-war-threats-and-political-inaction-is-sri-lanka-forgetting-the-lessons-of-2022/">தியவன்னத் தவளைகளும் உலகப் போர் ஆபத்தும் ; 2022 இன் படிப்பினைகளை மறந்ததா இலங்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>&#8211; Dharmaraja Rasmila</p>
<p>ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே நீடித்து வரும் பிராந்தியப் போர்ச் சூழல், உலகப் பொருளாதாரத்திற்கு ஏற்படுத்தி வரும் தாக்கம் மிகப் பயங்கரமானது.</p>
<p>உலகளாவிய இந்த நெருக்கடி ஒருபுறமிருக்க, இலங்கையின் தற்போதைய நிலையைச் சரியாகப் புரிந்துகொள்ள நாம் 2022 ஆம் ஆண்டின் கசப்பான யதார்த்தங்களை மீண்டும் உற்றுநோக்க வேண்டியுள்ளது.</p>
<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றபோது 110 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் மதிப்பு, அவர் நாட்டை விட்டு வெளியேறும்போது 370 ரூபாவைக் கடந்து சென்றமை நம் அனைவருக்கும் நினைவிருக்கும். ஆனால், 2022 ஆம் ஆண்டில் இன்றைய நாளைப்போல உலகப் போர்களோ அல்லது சர்வதேசச் சந்தையில் பாரிய எரிபொருள் விலை அதிகரிப்போ இருந்திருக்கவில்லை. கொவிட் பெருந்தொற்றுப் பரவியது உண்மைதான் என்றாலும், அதனை உலகின் ஏனைய நாடுகள் அழுத்தங்களுக்கு மத்தியிலும் மிக அற்புதமாக மேலாண்மை செய்திருந்தன என்றே சொல்லவேண்டும்.</p>
<p>இந்த நிலையில், ஈஸ்டர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இலங்கையின் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்ததை நாம் ஒப்புக்கொண்டேயாகவேண்டும். இருப்பினும், 2022 இல் ஏற்பட்ட அந்தப் பொருளாதார நெருக்கடிக் காலத்தில் ஒரு கிலோ பருப்பு 700 ரூபாவுக்கும் ஒரு கிலோ சீனி 500 ரூபாவுக்கும் விற்கப்பட்டதுடன், அவை தலா ஒன்று அல்லது இரண்டு கிலோ என்ற கட்டுப்பாடுகளுடனேயே மிகக் கடினமாகப் பெறப்பட்டன. உள்நாட்டு வெங்காயத்தில் இருந்து ஒரு கட்டுக் கீரை வரை அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அனைத்தும் உச்சத்தைத் தொட்டன.</p>
<p>அத்துடன், வரலாறு காணாத வகையில் நான்கு வருடங்களுக்கும் மேலாக வாகன இறக்குமதி முற்றிலும் தடைப்பட்டிருந்தது.</p>
<p>இலங்கை வரலாற்றின் மிக மோசமான 70 சதவீதப் பணவீக்கம் அப்போதுதான் பதிவாகியது. இதற்கெல்லாம் சர்வதேசக் காரணிகள் எதுவும் இருக்கவில்லை. மாறாக, ஆட்சியாளர்களின் தவறான நிதி நிர்வாகமும் நிதி ஒழுக்கமின்மையுமே பிரதான காரணங்களாகும்.</p>
<p>திறந்த பொருளாதாரக் கொள்கைக்குள் நுழைந்து 48 ஆண்டுகள் கடந்த பின்னரும், இலங்கை இன்றுவரை வெறும் 6 முதல் 7 பில்லியன் டொலர் வரையிலான ஓர் ஏழ்மையான, சொற்பமான வெளிநாட்டுக் கையிருப்பைக் கொண்ட நாடாகவே நீடிக்கிறது.</p>
<p>அதிலும் கணிசமான பகுதி சீனாவினால் வழங்கப்பட்ட &#8216;சுவாப்&#8217; (Swap) நிதியுதவியாகும். இதற்கு நேர்மாறாக, சீனாவிடம் 3 முதல் 4 ட்ரில்லியன் டொலர்களும், வியட்நாமிடம் 87 முதல் 90 பில்லியன் டொலர்களும் வெளிநாட்டுக் கையிருப்பு உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>தற்போதைய உலகப் போர்ச் சூழலால் சர்வதேசச் சந்தையில் விலைகள் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளன.</p>
<p>யூரியா 151 சதவீதத்தாலும், டீசல் 148 சதவீதத்தாலும், பெட்ரோல் 136 சதவீதத்தாலும், உரம் 135 சதவீதத்தாலும், நிலக்கரி 112 சதவீதத்தாலும், அரிசி 107 சதவீதத்தாலும் விலை அதிகரிப்பைக் கண்டுள்ளன.</p>
<p>குறிப்பாக, உலகளாவிய உர வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பகுதி ஈரான், கட்டார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய வளைகுடா நாடுகள் சூழ்ந்துள்ள &#8216;ஹோர்முஸ் நீரிணை&#8217; வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.</p>
<p>தற்போது இப்பாதையில் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள தடைகளால், உரத் தொழிற்சாலைகளின் உற்பத்திச் செலவு மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது.</p>
<p>போருக்கு முன்னர் 150 டொலராக இருந்த ஒரு தொன் சல்பூரிக் அமிலத்தின் விலை, தற்போது 1,000 டொலரை நெருங்கியுள்ளது.</p>
<p>உலகமே இத்தகைய பாரிய பொருளாதாரப் பேரழிவை எதிர்கொண்டுள்ள இந்த இக்கட்டான தருணத்தில், தியவன்ன நாடாளுமன்றத்தில் ஆட்சி பீடத்தில் உள்ள ஆளுங்கட்சியினர் சிலர் இன்னும் அலங்காரப் பொம்மைகளைப் போல எவ்விதப் பொறுப்பும் இன்றி நாடாளுமன்றில் கதிரைகளைச் சூடாக்கிவருகின்றனர்.</p>
<p>மறுபுறம் எதிர்க்கட்சியினரோ, &#8216;இன்று ஆட்சியைத் தாருங்கள், நாம் உடனே விலைவாசியைக் குறைப்போம்&#8217; என்று எவ்விதத் தெளிவான பொருளாதாரத் திட்டமும் இன்றி ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.</p>
<p>எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தியவன்ன ஏரியில் இருக்கும் தவளைகளைப் போலப் பயனில்லாமல் சத்தமிடுவதைத் தவிர்த்து, உலக நிலைவரத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பிராந்தியப் போர் முடியும் வரையிலாவது உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பது பற்றி ஆராய்ந்து, பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வுகளைத்தேட ஒன்றிணைய வேண்டும், என்பதே இன்றைய காலத்தின் அவசியமான தேவையாகும்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/global-war-threats-and-political-inaction-is-sri-lanka-forgetting-the-lessons-of-2022/">தியவன்னத் தவளைகளும் உலகப் போர் ஆபத்தும் ; 2022 இன் படிப்பினைகளை மறந்ததா இலங்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>உலகப் பொருளாதாரத்தின் அதிர்வுகளும்  இலங்கையினது களநிலை யதார்த்தமும்  வெறும் அரசியல் பேச்சுகள் தீர்வாகுமா?</title>
		<link>https://oruvan.com/stop-the-rhetoric-sri-lanka-warned-of-2022-style-crisis-amid-global-war-and-rising-trade-deficit/</link>
		
		<dc:creator><![CDATA[Rasmila]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Jun 2026 06:52:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முகப்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[அரசியல்வாதிகள்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இஸ்ரேல்]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[எண்ணெய் விலை]]></category>
		<category><![CDATA[எரிபொருள்]]></category>
		<category><![CDATA[எரிவாயு]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49468</guid>

					<description><![CDATA[<p>&#8220;எண்ணெய் விலையைக் குறையுங்கள், வாகனங்களுக்கு வரி விதிக்காதீர்கள், மின்சாரக் கட்டணத்தைக் குறையுங்கள்! நாங்கள் ஆட்சியில் இருந்திருந்தால் இதையெல்லாம் எப்போதோ குறைத்திருப்போம்&#8221; – தற்போதைய அரசியல் சூழலில் இலங்கையின் எதிர்க்கட்சியினரிடம் இருந்து தினமும் கேட்கக்கூடிய வழக்கமான மேடைப் பேச்சுகள் இவைதான். உண்மையாகவே எரிபொருள், மின்சாரம் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைந்தால், இந்த நாட்டின் குடிமக்களாகிய நமக்கும் அது பெரும் மகிழ்ச்சிதான். வரிகள் குறைக்கப்பட்டால் அது சாதாரண அடித்தட்டு மக்களுக்குப் பாரியதொரு நிவாரணமாக அமையும் என்பதில் எவ்வித [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/stop-the-rhetoric-sri-lanka-warned-of-2022-style-crisis-amid-global-war-and-rising-trade-deficit/">உலகப் பொருளாதாரத்தின் அதிர்வுகளும்  இலங்கையினது களநிலை யதார்த்தமும்  வெறும் அரசியல் பேச்சுகள் தீர்வாகுமா?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>&#8220;எண்ணெய் விலையைக் குறையுங்கள், வாகனங்களுக்கு வரி விதிக்காதீர்கள், மின்சாரக் கட்டணத்தைக் குறையுங்கள்! நாங்கள் ஆட்சியில் இருந்திருந்தால் இதையெல்லாம் எப்போதோ குறைத்திருப்போம்&#8221; – தற்போதைய அரசியல் சூழலில் இலங்கையின் எதிர்க்கட்சியினரிடம் இருந்து தினமும் கேட்கக்கூடிய வழக்கமான மேடைப் பேச்சுகள் இவைதான்.</p>
<p>உண்மையாகவே எரிபொருள், மின்சாரம் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைந்தால், இந்த நாட்டின் குடிமக்களாகிய நமக்கும் அது பெரும் மகிழ்ச்சிதான். வரிகள் குறைக்கப்பட்டால் அது சாதாரண அடித்தட்டு மக்களுக்குப் பாரியதொரு நிவாரணமாக அமையும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. அதைப் பற்றி மீண்டும் நாம் புதிதாகச் சொல்வதற்கு எதுவும் இல்லை.</p>
<p>இந்த நாட்டின் குடிமக்களாகிய நமக்கும் அது புரிகிறது, நாமும் அதைத்தான் விரும்புகிறோம். ஆனால், இந்த நேரத்தில் நமது நாடு ஓர் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நாம் தனித்து வாழும் தீவு அல்ல. நாமும் அந்த உலகளாவிய பொருளாதாரச் சங்கிலித் தொடரின் ஓர் அங்கமே. எனவே, சர்வதேச ரீதியாக ஏற்படும் அதிர்வுகள் நம்மை நேரடியாகப் பாதிக்கும் என்பதை நாம் இந்த யதார்த்தமான கோணத்தில்தான் பார்க்க வேண்டியுள்ளது. அதை விடுத்து வெற்று மேடைப் பேச்சுகளைப் பேசிக்கொண்டிருப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை.</p>
<p>சர்வதேச அரசியல் அரங்கில் அமெரிக்காவும் ஈரானும் தற்போது &#8216;நெருப்பும் நீரும்&#8217; போல மிகக் கடுமையான முரண்பாடுகளுடன் மோதிக்கொள்கின்றன.</p>
<p>ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையிலான பிராந்திய யுத்தம் தொடங்கி மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. இந்த யுத்தம் உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தி வரும் பொருளாதாரத் தாக்கம் நமக்கு மட்டுமல்ல, சுமார் 700 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கையிருப்பை மார்புதட்டி வைத்துள்ள இந்தியா போன்ற பிரமாண்டமான நாடுகளுக்கே இப்போது வலிக்கத் தொடங்கியிருக்கிறது.</p>
<p>டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடைவது நாம் அறிந்ததே. கடந்த மூன்று வருடங்களின் பின்னர், ஓர் அமெரிக்க டொலருக்கு 350 ரூபாவைச் செலுத்த வேண்டிய அவல நிலை கடந்த வாரம் நேர்ந்தது.</p>
<p>அதேநேரம், 700 பில்லியன் டொலர் கையிருப்பு வைத்துள்ள இந்தியாவின் நாணய மதிப்பும்கூட இந்த மே மாதத்தில் டொலருக்கு நிகராக 97 ரூபா வரை வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. நம்மிடம் இருப்பதோ வெறும் 7 அல்லது 7.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே. ஓர் எண்ணெய் கப்பலைக்கூட வரவழைப்பதற்கு நம்மிடம் 50 மில்லியன் டொலர் கையிருப்பு இல்லாமல், நாடே எரிபொருள் வரிசைகளில் நின்ற கசப்பான கடந்த கால வரலாறு நமக்கு மறந்துவிடக்கூடாது.</p>
<p>இலங்கை மற்றும் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் நாணய மதிப்புகள் அமெரிக்க டொலருக்கு நிகராக ஏன் வீழ்ச்சியடைகின்றன? உலகளாவிய மற்றும் உள்நாட்டு அழுத்தங்கள் இதற்கு எவ்வாறு காரணமாகின்றன??, என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.</p>
<p>முதலாவதாக, இந்தியாவும் நம்மைப் போலத்தான் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் ஒரு நாடு. இந்த வளைகுடா யுத்தம் காரணமாக சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகி வருகிறது. இப்போதும், இந்த வினாடியிலும் அது நடந்து கொண்டிருக்கிறது. அதன் விளைவாக, எண்ணெய்க்காகச் செலுத்த வேண்டிய டொலரின் அளவு இரு நாடுகளுக்கும் பல மடங்கு அதிகரித்துள்ளது.</p>
<p>இரண்டாவதாக, சர்வதேச முதலீட்டாளர்கள் தற்போது வளர்ந்து வரும் சந்தைகளில் உள்ள தங்களது பங்குகளை விற்றுவிட்டு, அதிக லாபமும் பாதுகாப்பும் தரும் அமெரிக்கச் சொத்துகளில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். அப்படியென்றால் என்ன நடக்கும்? இந்தியாவிலிருந்து வெளியேறும் இந்த முதலீட்டாளர்கள் உள்நாட்டு ரூபாக்களை விற்றுவிட்டு டொலர்களை வாங்குவார்கள். அப்போது ரூபா இன்னும் பலவீனமடையும். அதாவது மூலதனம் முழுவதும் அமெரிக்கா நோக்கிப் பாய்வது நடக்கிறது.</p>
<p>மறுபுறம், நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை ஆண்டுக்காண்டு அதிகரித்துச் செல்வது மற்றுமொரு ஆபத்தான அறிகுறியாகும். ஏற்றுமதி வருமானத்தை விட, இறக்குமதிச் செலவு அதிகரிப்பதே வர்த்தகப் பற்றாக்குறையாகும். கடந்த 2023 இல் 4.9 பில்லியன் டொலராக இருந்த வர்த்தகப் பற்றாக்குறை, 2024 இல் 6.1 பில்லியன் டொலராக உயர்ந்தது.</p>
<p>கடந்த 2025 ஆம் ஆண்டில் ஆடை மற்றும் தேயிலை ஏற்றுமதியும், வெளிநாட்டுப் பண அனுப்புதல்களும் சாதனை அளவில் அதிகரித்த போதிலும், வர்த்தகப் பற்றாக்குறை 7.9 பில்லியன் டொலராக மேலும் மோசமடைந்தது. இதற்கு 2025 இல் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டமையும், நுகர்வுப் பொருட்களுக்கான தேவை எகிறியமையுமே காரணமாகும். ஏற்றுமதி வருமானம் உயர்ந்த போதிலும், நாம் கொண்டு வரும் பொருட்களுக்கான இறக்குமதிச் செலவு பல மடங்கு அதிகரித்தது.</p>
<p>தற்போது 2026 ஆம் ஆண்டின் ஆரம்ப மாதங்களில், இந்த யுத்தச் சூழலால் எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளுடன் கப்பல் கட்டணங்களும், காப்புறுதிச் செலவுகளும் சர்வதேச அளவில் உயர்ந்துவிட்டன. இந்தத் தருணத்தில், ரூபா வீழ்ச்சியைத் தடுக்கவும் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கவும் நாம் எதைச் செய்தாலும் வெளிநாட்டுக் கையிருப்பை, அதாவது டொலரின் அளவை அதிகரிக்க வேண்டியது கட்டாயமாகும். இல்லையென்றால், எண்ணெய்க் கப்பல் ஒன்றைக்கூடக் கொண்டுவருவதற்கு 50 மில்லியன் டொலர் இல்லாமல் மக்கள் வரிசைகளில் நின்ற அதே பழைய நிலைமை மீண்டும் உருவாகிவிடும்.</p>
<p>எனவே, நாடாளுமன்றத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் வெறும் கூச்சல்களைப் போட்டுக் கொண்டிருக்காமல், உலக நிலைவரத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உலகப் பொருளாதார நெருக்கடிக்கு, குறைந்தது இந்த மத்திய கிழக்கு யுத்தம் முடியும் வரையிலாவது எவ்வாறு முகங்கொடுப்பது என்பது பற்றிப் பேச வேண்டும். அதுவரை, குடிமக்களாகிய நாம் எரிபொருள் நுகர்வைக் கண்டிப்பாகக் குறைக்க வேண்டும்.</p>
<p>முடிந்தவரை பயணங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கும். நாம் பரிமாறிக்கொள்ளும் சோற்றுத் தட்டில் ஒரு சோற்றுப் பருக்கையையேனும் குப்பைத் தொட்டியில் போடாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய ஓர் இக்கட்டான காலத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.</p>
<p>வர்த்தகப் பற்றாக்குறைத் தரவுப்பட்டியல்</p>
<p>2023 ஆம் ஆண்டு: 4.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள்</p>
<p>2024 ஆம் ஆண்டு: 6.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள்</p>
<p>2025 ஆம் ஆண்டு: 7.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (வாகன இறக்குமதிக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் விளைவு)</p>
<p>குறிப்பு: 2026 ஆம் ஆண்டின் தற்போதைய உலகச் சூழலில், ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாகக் கப்பல் மற்றும் காப்புறுதிக் கட்டணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றமை இலங்கையின் பொருளாதார மீட்சிக்குக் கூடுதல் சவாலாக மாறியுள்ளது.</p>
<p>&#8211; Dharmaraja Rasmila</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/stop-the-rhetoric-sri-lanka-warned-of-2022-style-crisis-amid-global-war-and-rising-trade-deficit/">உலகப் பொருளாதாரத்தின் அதிர்வுகளும்  இலங்கையினது களநிலை யதார்த்தமும்  வெறும் அரசியல் பேச்சுகள் தீர்வாகுமா?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நெருப்பு வளையத்திற்குள் தகிக்கும் பூமி ; WMO எச்சரிக்கும் இரட்டைப் பேராபத்து தென்னாசியாவுக்குக் காத்திருக்கும் சவால்</title>
		<link>https://oruvan.com/devastating-drought-and-power-crisis-loom-over-south-asia-amid-extreme-ocean-warming/</link>
		
		<dc:creator><![CDATA[Rasmila]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Jun 2026 06:46:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முகப்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[(El Niño]]></category>
		<category><![CDATA[(National Geographic]]></category>
		<category><![CDATA[Oceana]]></category>
		<category><![CDATA[எல் நினோ]]></category>
		<category><![CDATA[கோதுமை]]></category>
		<category><![CDATA[நெல்]]></category>
		<category><![CDATA[பேராபத்து]]></category>
		<category><![CDATA[மழைப்பொழிவு]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49465</guid>

					<description><![CDATA[<p>தொழிநுட்ப வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் மனித நாகரிகத்திற்கு, இயற்கை தனது மிக உக்கிரமான எச்சரிக்கையை விடுக்கத் தொடங்கியுள்ளது. புவிக்கோளத்தின் வளிமண்டல வெப்பமும், பெருங்கடல்களின் கொதிநிலையும் முன்னெப்போதும் இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ள சூழலில், உலக வானிலை அமைப்பு (WMO &#8211; World Meteorological Organization) வெளியிட்டுள்ள புதிய பருவகால அறிக்கை ஒட்டுமொத்த உலக நாடுகளையும் உலுக்கியுள்ளது. இந்த ஆண்டின் மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தொடக்கத்தில் தற்காலிக அமைதி காப்பது போல் தெரிந்த பசிபிக் பெருங்கடல், தற்போது [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/devastating-drought-and-power-crisis-loom-over-south-asia-amid-extreme-ocean-warming/">நெருப்பு வளையத்திற்குள் தகிக்கும் பூமி ; WMO எச்சரிக்கும் இரட்டைப் பேராபத்து தென்னாசியாவுக்குக் காத்திருக்கும் சவால்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தொழிநுட்ப வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் மனித நாகரிகத்திற்கு, இயற்கை தனது மிக உக்கிரமான எச்சரிக்கையை விடுக்கத் தொடங்கியுள்ளது.</p>
<p>புவிக்கோளத்தின் வளிமண்டல வெப்பமும், பெருங்கடல்களின் கொதிநிலையும் முன்னெப்போதும் இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ள சூழலில், உலக வானிலை அமைப்பு (WMO &#8211; World Meteorological Organization) வெளியிட்டுள்ள புதிய பருவகால அறிக்கை ஒட்டுமொத்த உலக நாடுகளையும் உலுக்கியுள்ளது.</p>
<p>இந்த ஆண்டின் மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தொடக்கத்தில் தற்காலிக அமைதி காப்பது போல் தெரிந்த பசிபிக் பெருங்கடல், தற்போது அசுர வேகத்தில் வெப்பமடைந்து வருவதாக செயற்கைக்கோள் தரவுகள் எச்சரிக்கின்றன.</p>
<p>இதன் விளைவாக, உலகமே அஞ்சிய &#8216;எல் நினோ&#8217; (El Niño) காலநிலை அதிகாரப்பூர்வமாக உருவெடுக்கத் தொடங்கியுள்ளது. இது ஒரு தற்காலிக வானிலை மாற்றம் அல்ல &#8211; மாறாக உலகளாவிய உணவுப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சமநிலைக்கு விடுக்கப்பட்டுள்ள &#8216;போர்ப் பிரகடனம்&#8217; என்றே காலநிலை வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.</p>
<p>ஆய்வாளர்களின் புதிய தரவுகளின்படி, மனித நடவடிக்கைகளால் ஏற்கனவே தீவிரமடைந்துள்ள புவி வெப்பமயமாதல், பசிபிக் பெருங்கடலின் இந்த அசாதாரண வெப்ப அலையை மேலும் உந்தித்தள்ளி, வரலாற்றிலேயே மிகக் கொடூரமானதொரு &#8216;சூப்பர் எல் நினோ&#8217; (Super El Niño) பேராபத்தாக உருவெடுக்கும் என்ற அச்சத்தை உலகளாவிய காலநிலை விஞ்ஞானிகள் மத்தியில் வலுப்படுத்தியுள்ளது.</p>
<p><strong>அறிவியலின் இறுதி எச்சரிக்கை</strong></p>
<p>உலகளாவிய கணினி மாதிரிகளின் முன்கணிப்பின்படி, பசிபிக் பெருங்கடலின் &#8216;நினோ 3.4&#8217; (மத்திய பசிபிக் பெருங்கடல் பகுதி) பிராந்தியத்தின் வெப்பநிலை இயல்பை விட 1.5°C வரை அதிகரிக்கும் என 100 வீதம் உறுதியாகக் கணிக்கப்பட்டுள்ளது.</p>
<p>வழக்கமாக வசந்த காலத்தில் நிலவும் காலநிலை முன்கணிப்புச் சவால்களையும் தாண்டி, அனைத்து அறிவியல் மாதிரிகளும் இவ்வளவு ஒத்த கருத்துடன் எச்சரிப்பது உலக வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.</p>
<p>இந்த எல் நினோ தீவிரமடைதலானது, இதே காலகட்டத்தில் இந்தியப் பெருங்கடலில் உருவாகும் &#8216;நேர்மறை இந்தியப் பெருங்கடல் இருமுனை&#8217; (Positive IOD) மாற்றத்துடன் கைகோர்க்கவுள்ளது.</p>
<p>இந்த இரு பேராபத்துகளின் கூட்டுச் சேர்க்கை காரணமாக, உலகெங்கிலும் உள்ள நிலப்பரப்புகளில் 70% முதல் 80% வரை கடுமையான வெப்ப அலைகள் வீசக்கூடும்.</p>
<p>இதன் விளைவாக, உலக வரைபடம் இரு தீவிர எல்லைகளைச் சந்திக்கவுள்ளது. ஒருபுறம் அமேசான் காடுகளும், அவுஸ்ரேலியாவும், தென்கிழக்கு ஆசியாவும் வறட்சியின் பிடியில் கருகவுள்ள நிலையில், மறுபுறம் மத்திய பசிபிக் பகுதிகள் முன்னெப்போதும் இல்லாத பெருவெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.</p>
<p><strong>வரலாற்றை மிஞ்சும் விபரீதம்</strong></p>
<p>கடந்த காலங்களில் 1982-1983 மற்றும் 1997-1998 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட &#8216;சூப்பர் எல் நினோ&#8217; உலகப் பொருளாதாரத்திற்கு மரண அடியைக் கொடுத்ததுடன், பில்லியன் கணக்கான டொலர்கள் இழப்பையும் ஏற்படுத்தியது.</p>
<p>மிக அண்மையில் 2015-2016 இல் ஏற்பட்ட தாக்கத்தால் உலகளவில் கடுமையான உணவுப் பற்றாக்குறையும் கொடிய சூறாவளிகளும் தோன்றின. தற்போதைய பொருளாதாரப் பகுப்பாய்வுகளின்படி, இம்முறை உருவாகும் எல் நினோ தாக்கத்தால் உலகளாவிய வர்த்தகம், விநியோகச் சங்கிலி மற்றும் எரிசக்திச் சந்தை ஆகியவை முன்னெப்போதும் இல்லாத அளவு பாரிய நிதி நெருக்கடியைச் சந்திக்க நேரிடும், என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p>
<p>சூழலியல் பாதுகாப்பு அமைப்பான &#8216;ஒசியானா&#8217; (Oceana) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இதனால் &#8216;கடலின் நுரையீரல்&#8217; என்று அழைக்கப்படும் பவளப்பாறைகள் வெளிறி அழியும் (Coral Bleaching) பேராபத்து இந்த ஆண்டின் பிற்பகுதியில் மிகத் தீவிரமடையவுள்ளது.</p>
<p>கடல்சார் பல்லுயிர் பெருக்கம் மற்றும் மீன்பிடித் தொழிற்துறைக்கு இது மீளமுடியாத பேரிடியாக அமையும்.</p>
<p>அத்துடன், பூமியின் மாபெரும் காபன் உறிஞ்சிகளான காடுகள் கருகி, கட்டுக்கடங்காத காட்டுத்தீயை உருவாக்குவதன் மூலம் வளிமண்டல காபன் உமிழ்வு பல மடங்கு அதிகரிக்கும்.</p>
<p><strong>தென்னாசியாவின் நிலை என்ன?</strong></p>
<p>உலக வானிலை அமைப்பின் கணிப்பின்படி, இந்த இரட்டைத் தாக்கத்தின் மிகப்பெரிய பாதிப்பை இந்தியத் துணைக்கண்டமும் இலங்கையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.</p>
<p>நஷனல் ஜியோகிராபிக் (National Geographic) இதழின் ஆய்வுக் கட்டுரையின்படி, இந்த எல் நினோ சுழற்சியானது தென்னாசியப் பிராந்தியத்தின் உயிர்நாடியான தென்மேற்குப் பருவமழைப் பொழிவை முற்றாகச் சீர்குலைத்து, மிக மோசமான வறட்சிக்கு வழிவகுக்கும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>
<p>இலங்கையின் உள்ளூர் காலநிலை மற்றும் பொருளாதாரத் தரவுகளின்படி, மழைப்பொழிவுக் குறைவால் நெல், கோதுமை மற்றும் இலங்கையின் பிரதான ஏற்றுமதிப் பயிரான தேயிலை ஆகியவற்றின் விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கடுமையான உணவுப் பணவீக்கமும், வாழ்வாதாரப் பாதிப்பும் தலைதூக்கும்.</p>
<p>இலங்கையைப் பொறுத்தமட்டில் நீர்மின் உற்பத்தியை பெருமளவில் நம்பியிருக்கும் நாடு என்ற ரீதியில், பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்து கடுமையான மின்சார நெருக்கடியும் ஏற்பட வாய்ப்புள்ளது. குடிநீர் ஆதாரங்கள் வற்றிப்போதால், மனித &#8211; யானை மோதல்கள் அதிகரிக்கும் அபாயமும் உள்ளது.</p>
<p>இது வெறும் வானிலை அறிக்கை அல்ல. நாடுகள் தங்களின் தழுவல் கொள்கைகளையும் நீர் மேலாண்மைத் திட்டங்களையும் போர்க்கால அடிப்படையில் மாற்றியமைக்க வேண்டும் என்பதற்கான இறுதி எச்சரிக்கை!</p>
<p>இயற்கையின் இந்த உக்கிரத்தை எதிர்கொள்ள உலக நாடுகள் ஒன்றிணைந்து காபன் உமிழ்வைக் குறைப்பதும், உள்நாட்டு அளவில் நீர் மற்றும் உணவு ஆதாரங்களைப் பாதுகாப்பதும் மட்டுமே வரவிருக்கும் பேராபத்தில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் ஒரே கேடயமாகும்.</p>
<p>The post <a href="https://oruvan.com/devastating-drought-and-power-crisis-loom-over-south-asia-amid-extreme-ocean-warming/">நெருப்பு வளையத்திற்குள் தகிக்கும் பூமி ; WMO எச்சரிக்கும் இரட்டைப் பேராபத்து தென்னாசியாவுக்குக் காத்திருக்கும் சவால்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அதிகாரப் போட்டியால் முடங்கிய இலங்கை சைக்கிளோட்டத் துறை: 7 ஆண்டுகளாகத் தொடரும் சர்வதேசத் தடை</title>
		<link>https://oruvan.com/sri-lankan-cycling-hit-by-mismanagement-international-ban-continues-for-7-years/</link>
		
		<dc:creator><![CDATA[Rasmila]]></dc:creator>
		<pubDate>Wed, 27 May 2026 10:49:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முகப்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Sri Lankan cycling industry]]></category>
		<category><![CDATA[இலங்கை சைக்கிளோட்டத் துறை]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49418</guid>

					<description><![CDATA[<p>இலங்கை சைக்கிளோட்ட சம்மேளனத்தில் நிலவும் பல்வேறுபட்ட குழப்பநிலை மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் காரணமாக, சர்வதேச சைக்கிளோட்டப் போட்டிகளில் இலங்கையின் பங்களிப்பானது 2019ஆம் ஆண்டு முதல், அதாவது கடந்த 7 ஆண்டுகளாக முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. இந்த 7 ஆண்டு காலக்கட்டத்தில், தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே உட்பட ஆறு விளையாட்டுத்துறை அமைச்சர்கள் பதவி வகித்துள்ள போதிலும், அதிகாரிகளுக்கு இடையே நிலவும் தொடர்ச்சியான அதிகாரப் போட்டிகள் காரணமாக இந்தக் குழப்பநிலைக்கு இதுவரை எவராலும் தீர்வைக் காண முடியவில்லை. [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lankan-cycling-hit-by-mismanagement-international-ban-continues-for-7-years/">அதிகாரப் போட்டியால் முடங்கிய இலங்கை சைக்கிளோட்டத் துறை: 7 ஆண்டுகளாகத் தொடரும் சர்வதேசத் தடை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கை சைக்கிளோட்ட சம்மேளனத்தில் நிலவும் பல்வேறுபட்ட குழப்பநிலை மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் காரணமாக, சர்வதேச சைக்கிளோட்டப் போட்டிகளில் இலங்கையின் பங்களிப்பானது 2019ஆம் ஆண்டு முதல், அதாவது கடந்த 7 ஆண்டுகளாக முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த 7 ஆண்டு காலக்கட்டத்தில், தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே உட்பட ஆறு விளையாட்டுத்துறை அமைச்சர்கள் பதவி வகித்துள்ள போதிலும், அதிகாரிகளுக்கு இடையே நிலவும் தொடர்ச்சியான அதிகாரப் போட்டிகள் காரணமாக இந்தக் குழப்பநிலைக்கு இதுவரை எவராலும் தீர்வைக் காண முடியவில்லை.</p>
<p>இலங்கை சைக்கிளோட்ட சம்மேளனத்திற்கான (2024 &#8211; 26) தேர்தலை கடந்த 2024 ஜூலை 25 அன்று நடத்துவதற்கு இறுதியாக எடுக்கப்பட்ட முயற்சியும், நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக தோல்வியில் முடிவடைந்தது.</p>
<p>இதனால் தற்போது இலங்கையின் சைக்கிளோட்ட நிர்வாக விவகாரங்கள் அனைத்தும் விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவரது அனுமதியுடன் சில உள்நாட்டு சைக்கிளோட்டப் போட்டிகள் தற்போது நடத்தப்பட்டு வந்தாலும், சர்வதேசப் போட்டிகளில் இலங்கை பங்கேற்பதற்கான வாய்ப்புகள் முற்றிலும் அற்றுப்போயுள்ளன.</p>
<p>இலங்கை தேசிய சைக்கிளோட்ட அணி கடைசியாக 2019 டிசம்பரில் நேபாளத்தின் காத்மாண்டுவில் நடைபெற்ற 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளிலும் (SAG Games), அதே ஆண்டில் நடைபெற்ற ஆசிய சம்பியன்ஷிப் தொடரிலும் பங்கேற்றிருந்தது.</p>
<p>அந்த காத்மாண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை அணி இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் நான்கு வெண்கலப் பதக்கங்களையும் வென்று சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>இந்த நிர்வாகக் குழப்பங்களின் பின்னணி 2022 மே 29 அன்று நடைபெற்ற தேர்தலுடன் தீவிரமடைந்தது.</p>
<p>அப்போது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் அமல் ஹர்ஷ டி சில்வா, அதே ஆண்டு ஜூலை மாதம் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டதால் தனது தலைவர் பதவியை இராஜினாமா செய்தார். அதன் பின்னர் சம்மேளனம் சுமார் ஏழு மாதங்கள் தலைவரின்றியே இயங்கியது. அதனைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல்களால் 2024 ஜூலையில் நடத்தவிருந்த தேர்தலும் நீதிமன்ற உத்தரவால் ஒத்திவைக்கப்பட்டது.</p>
<p>குறிப்பிடத்தக்க அம்சமாக, உள்நாட்டில் பல நிர்வாக மாற்றங்கள் ஏற்பட்டாலும், சர்வதேச சைக்கிளோட்ட சம்மேளனம் (UCI) இன்னமும் 2018-19 காலப்பகுதியில் தலைவராக இருந்த சர்வதேச நடுவர் என். கருணாரத்ன உள்ளிட்ட செயற்குழுவையே இலங்கையின் உத்தியோகபூர்வ நிர்வாகமாக இன்றுவரை அங்கீகரித்துள்ளது.</p>
<p>முன்னதாக, தங்களது பதவிக்காலத்தில் தணிக்கை அறிக்கைகளை (Audit Reports) சமர்ப்பிக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் கீழ் என். கருணாரத்ன, செயலாளர் நிஹால் குலசேகர மற்றும் பொருளாளர் சேனக ரணசிங்க ஆகியோருக்கு விளையாட்டுத்துறை அமைச்சு நீண்டகாலத் தடை விதித்திருந்தது. எனினும், தற்போதைய அமைச்சர் சுனில் குமார கமகே பதவியேற்றதும் அத்தடையை நீக்கினார். அதேவேளை, சம்மேளனத்தின் சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் இவர்களுக்கு எதிரான வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது.</p>
<p>இவ்வாறான சூழலில், இலங்கையின் தற்போதைய நிர்வாக நெருக்கடி குறித்து அறிவித்துள்ள சர்வதேச சைக்கிளோட்ட சம்மேளனம் (UCI), இலங்கையானது சர்வதேசப் போட்டிகளில் மீண்டும் பங்கேற்க வேண்டுமாயின், அது சர்வதேச நடுவர் என். கருணாரத்னவின் நேரடி மேற்பார்வையின் கீழ் மட்டுமே சாத்தியமாகும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lankan-cycling-hit-by-mismanagement-international-ban-continues-for-7-years/">அதிகாரப் போட்டியால் முடங்கிய இலங்கை சைக்கிளோட்டத் துறை: 7 ஆண்டுகளாகத் தொடரும் சர்வதேசத் தடை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் தமது விடைத்தாள்களைப் பார்வையிட உரிமை உண்டு: மேன்முறையீட்டு நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு</title>
		<link>https://oruvan.com/students-who-have-appeared-for-the-examination-have-the-right-to-view-their-answer-sheets/</link>
		
		<dc:creator><![CDATA[Rasmila]]></dc:creator>
		<pubDate>Wed, 27 May 2026 10:44:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முகப்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை திறந்த பல்கலைக்கழகம்]]></category>
		<category><![CDATA[பரீட்சை]]></category>
		<category><![CDATA[பொதுப் பரீட்சை]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49415</guid>

					<description><![CDATA[<p>தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவர்கள் தமது விடைத்தாள்கள் மற்றும் புள்ளி விபரங்களைச் சட்டபூர்வமாகப் பெற்றுக்கொள்ள உரிமையுடையவர்கள் என மேன்முறையீட்டு நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது. பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் விடைத்தாள்களை வழங்க மறுத்து, இலங்கை திறந்த பல்கலைக்கழகம் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை நிராகரித்தே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டத்துறைப் பரீட்சையில் தோற்றிய தனது [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/students-who-have-appeared-for-the-examination-have-the-right-to-view-their-answer-sheets/">பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் தமது விடைத்தாள்களைப் பார்வையிட உரிமை உண்டு: மேன்முறையீட்டு நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவர்கள் தமது விடைத்தாள்கள் மற்றும் புள்ளி விபரங்களைச் சட்டபூர்வமாகப் பெற்றுக்கொள்ள உரிமையுடையவர்கள் என மேன்முறையீட்டு நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.</p>
<p>பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் விடைத்தாள்களை வழங்க மறுத்து, இலங்கை திறந்த பல்கலைக்கழகம் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை நிராகரித்தே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.</p>
<p>கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டத்துறைப் பரீட்சையில் தோற்றிய தனது மகளின் விடைத்தாள்கள் மற்றும் புள்ளிகளை வழங்குமாறு, ஆர்.ஏ.ஜனக ரோஷான் ரணசிங்க என்பவர் விடுத்த கோரிக்கையை பல்கலைக்கழக நிர்வாகம் நிராகரித்திருந்தது.</p>
<p>பொதுப் பரீட்சை நடைமுறைகளின் இரகசியத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை இதனால் பாதிக்கப்படும் எனக் கூறியே இந்தத் தகவல் பல்கலைக்கழகத்தினால் மறுக்கப்பட்டது.</p>
<p>எனினும், பாதிக்கப்பட்ட தரப்பினர் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவை நாடியபோது, விடைத்தாள்களை வழங்குமாறு ஆணைக்குழு உத்தரவிட்டது. இதனை எதிர்த்தே திறந்த பல்கலைக்கழக நிர்வாகம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.</p>
<p>இந்த மனுவை விரிவாக விசாரித்த நீதிமன்றம், அனைத்து வகையான பொதுப் பரீட்சைகளின் போதும் கல்வி நிறுவனங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு உட்பட வேண்டும் எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.</p>
<p>அத்துடன், மதிப்பீடு செய்தவர்களின் அடையாளங்களை இரகசியமாகப் பேணிப் பாதுகாப்பது, மாணவர்களின் விடைத்தாள்களைப் பாதுகாப்பது மற்றும் பெறுபேறுகளின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றுக்கு இடையிலான முரண்பாடுகள் எழும்போது, அதற்குத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.</p>
<p>மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான மொஹமட் லஃபார் மற்றும் பீ.குமாரரத்தினம் ஆகியோரடங்கிய நீதிபதிகள் குழாம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.</p>
<p>இத்தீர்ப்பானது, நாட்டின் கல்வித் துறையில் மற்றும் பரீட்சை முறைகளில் வெளிப்படைத்தன்மையையும், மாணவர்களுக்கான பொறுப்புக்கூறலையும் சட்டரீதியாக உறுதிப்படுத்துவதில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.</p>
<p>The post <a href="https://oruvan.com/students-who-have-appeared-for-the-examination-have-the-right-to-view-their-answer-sheets/">பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் தமது விடைத்தாள்களைப் பார்வையிட உரிமை உண்டு: மேன்முறையீட்டு நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்தியா &#8211; இலங்கை தரைப்பாலம்: பிராந்தியப் பொருளாதாரத்தை மாற்றியமைக்குமா மாபெரும் திட்டம்?</title>
		<link>https://oruvan.com/new-report-sees-major-upside-in-india-sri-lanka-land-bridge-proposal/</link>
		
		<dc:creator><![CDATA[Rasmila]]></dc:creator>
		<pubDate>Wed, 27 May 2026 10:37:19 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[New report sees major upside in India-Sri Lanka land bridge proposal]]></category>
		<category><![CDATA[இந்தியா - இலங்கை தரைப்பாலம்]]></category>
		<category><![CDATA[ராமர் பாலம்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49410</guid>

					<description><![CDATA[<p>&#8211;  தர்மராஜா ரஸ்மிலா &#160; ஆசியப் பிராந்தியத்தின் மிக முக்கிய புவிசார் அரசியல் நகர்வாகப் பார்க்கப்படும் &#8216;இந்தியா &#8211; இலங்கை தரைப்பாலத் திட்டம்&#8217;, இலங்கைத் தீவின் பொருளாதார விதியை முற்றிலுமாக மாற்றியமைக்கும் வல்லமை கொண்டது எனப் புதிய ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கும் &#8216;மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்&#8217; அண்மையில் வெளியிட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பில், இத்திட்டத்தின் மூலம் இலங்கைக்குக் கிடைக்கவுள்ள நீண்டகால வர்த்தக நன்மைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. &#8216;இந்திய-இலங்கை தரைவழி இணைப்பை மதிப்பிடுதல்&#8217; என்ற தலைப்பில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/new-report-sees-major-upside-in-india-sri-lanka-land-bridge-proposal/">இந்தியா &#8211; இலங்கை தரைப்பாலம்: பிராந்தியப் பொருளாதாரத்தை மாற்றியமைக்குமா மாபெரும் திட்டம்?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>&#8211;  தர்மராஜா ரஸ்மிலா</p>
<p>&nbsp;</p>
<p>ஆசியப் பிராந்தியத்தின் மிக முக்கிய புவிசார் அரசியல் நகர்வாகப் பார்க்கப்படும் &#8216;இந்தியா &#8211; இலங்கை தரைப்பாலத் திட்டம்&#8217;, இலங்கைத் தீவின் பொருளாதார விதியை முற்றிலுமாக மாற்றியமைக்கும் வல்லமை கொண்டது எனப் புதிய ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.</p>
<p>கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கும் &#8216;மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்&#8217; அண்மையில் வெளியிட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பில், இத்திட்டத்தின் மூலம் இலங்கைக்குக் கிடைக்கவுள்ள நீண்டகால வர்த்தக நன்மைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.</p>
<p>&#8216;இந்திய-இலங்கை தரைவழி இணைப்பை மதிப்பிடுதல்&#8217; என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த உத்தியோகபூர்வ ஆய்வில், இரு நாடுகளுக்கும் இடையே அமையவுள்ள நேரடிச் சாலைத் தொடர்பானது இருதரப்பு வர்த்தகம், சுற்றுலா மற்றும் பிராந்திய உட்கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.</p>
<p><strong>முரண்பாடுகளும் சாத்தியக்கூறுகளும்</strong></p>
<p>அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற உலகளாவிய கண்டுபிடிப்பு மற்றும் தலைமைத்துவ மாநாட்டில் உரையாற்றிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான நிலப்பரப்புத் தொடர்பை விவரித்திருந்தார்.</p>
<p>இவ்வளவு அருகாமையில் இருந்தும் நேரடித் தரைவழித் தொடர்பு இல்லாமல் இருப்பது ஒரு வரலாற்று முரண்பாடு என்றும், இத்திட்டத்தின் பின்னாலுள்ள பொறியியல் மற்றும் வணிகக் காரணங்கள் மிகவும் வலுவானவை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அவரின் இந்த உரைக்கு பின்னரே, இந்த விவகாரம் மீண்டும் இரு நாட்டு ஊடகங்களிலும் பிரதான பேசுபொருளாக மாறியுள்ளது.</p>
<p><strong>9 மணித்தியாலங்களாகச் சுருங்கும் போக்குவரத்து</strong></p>
<p>தற்போதைய திட்டமிடலின்படி, இந்தியாவின் தனுஷ்கோடியையும் இலங்கையின் தலைமன்னாரையும் இணைக்கும் வகையில் அதிவேகச் சாலை மற்றும் தொடருந்துப் பாலங்கள் அமைக்கப்படவுள்ளன. இது இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்வழிப் போக்குவரத்துத் தாமதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>தற்போதுள்ள கடல்வழிச் சுங்க நடைமுறைகள் மற்றும் துறைமுக நெரிசல்கள் காரணமாக, கப்பல் மூலம் சரக்குகளைக் கொண்டு சேர்க்கக் குறைந்தபட்சம் 40 முதல் அதிகபட்சமாக 122 மணித்தியாலங்கள் வரை எடுக்கிறது. ஆனால், இப்புதிய தரைப்பாலம் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில், இதே சரக்குப் போக்குவரத்தை வெறும் 9 மணித்தியாலங்களுக்குள் மிக எளிதாக நிறைவு செய்துவிட முடியும் எனப் புள்ளவிபரங்கள் தெரிவிக்கின்றன.</p>
<p><strong>விழிஞ்சம் துறைமுகப் போட்டியும் கொழும்புத் துறைமுகத்தின் எதிர்காலமும்</strong></p>
<p>இந்தியாவின் கேரள மாநிலத்தில் அண்மையில் திறக்கப்பட்ட விழிஞ்சம் ஆழ்கடல் துறைமுகம், சர்வதேசக் கப்பல் போக்குவரத்தில் கொழும்புத் துறைமுகத்திற்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இத்தகைய பிராந்தியப் போட்டிகளுக்கு மத்தியில், இந்தத் தரைப்பாலம் கொழும்புத் துறைமுகத்தின் வர்த்தக எல்லையைத் தென்னிந்தியா வரை விரிவாக்கம் செய்யும். இதனால் கொழும்புத் துறைமுகத்தின் சர்வதேசப் போட்டித்திறன் மேலும் பலமடங்கு உயரும்.</p>
<p><strong>மாகாணப் பொருளாதார எழுச்சியும் சூழலியல் எச்சரிக்கையும்</strong></p>
<p>இந்த நேரடித் தரைவழி இணைப்பானது இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் தலைகீழாக மாற்றியமைக்கக் கூடியது. குறிப்பாக, வரும் 2034ஆம் ஆண்டளவில் சுமார் ஒரு டிரில்லியன் டொலர் பொருளாதாரமாக அசுர வளர்ச்சி காணவுள்ள தென்னிந்தியாவின் (குறிப்பாக தமிழ்நாட்டின்) சந்தையுடன், இலங்கையின் பின்தங்கிய மாகாணங்கள் நேரடியாகத் தொடர்பு கொள்ள இத்திட்டம் வழிவகுக்கும்.</p>
<p>குறைந்த செலவிலான இந்தத் தரைவழி அணுகுமுறை, தென்னிந்தியப் பயணிகளை இலங்கை நோக்கி அதிகளவில் ஈர்க்கும் என்பதால், உள்ளூர் மாகாணங்களில் பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும்.</p>
<p>இருப்பினும், இத்திட்டத்தின் சாதகங்களை விவரித்துள்ள மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளது. பாக்கு நீரிணை மற்றும் ராமர் பாலம் (ஆதாம் பாலம்) அமைந்துள்ள கடல் பகுதி, அரிய கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் வனவிலங்குகளின் வாழ்விடங்களைக் கொண்ட அதீத உணர்திறன் மிக்க மண்டலமாகும். எனவே, இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பாக, சர்வதேசத் தரத்திலான விரிவான சூழலியல் தாக்க மதிப்பீடு (EIA) செய்யப்படுவது கட்டாயமாகும் என அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/new-report-sees-major-upside-in-india-sri-lanka-land-bridge-proposal/">இந்தியா &#8211; இலங்கை தரைப்பாலம்: பிராந்தியப் பொருளாதாரத்தை மாற்றியமைக்குமா மாபெரும் திட்டம்?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>&#8216;பைத்தியக்காரன் கோட்பாடும்&#8217; மீண்டும் ஒரு சுயெஸ் கால்வாய் வரலாறும்</title>
		<link>https://oruvan.com/the-madman-theory-and-a-revisited-suez-canal-story/</link>
		
		<dc:creator><![CDATA[Rasmila]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Apr 2026 07:48:21 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முகப்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Madman Theory]]></category>
		<category><![CDATA[Suez Canal]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[எண்ணெய்க் கப்பல்]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[பிரிட்டன்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்ஸன்]]></category>
		<category><![CDATA[ஹோர்முஸ்]]></category>
		<category><![CDATA[ஹோர்முஸ் நீரிணை]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49182</guid>

					<description><![CDATA[<p>மூன்றாம் உலகப்போரின் விளிம்பில் வல்லரசுகள்? &#8216;பைத்தியக்காரன் கோட்பாடும்&#8217; மீண்டும் ஒரு சுயெஸ் கால்வாய் வரலாறும் தடுமாறும் அமெரிக்கா &#8211; சீறும் சீனா! ஹோர்முஸ் போர்க்களத்தின் முழுமையான அலசல் &#160; ஈரானுக்கு எதிராக இஸ்ரேலுடன் கைகோர்த்துத் தொடுத்த போரின் விளைவாக, இன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒரு இக்கட்டான நிலையில் நிற்கிறார். &#8216;கௌரவத்தைக்&#8217; காப்பாற்றிக்கொண்டு எவ்வாறு வெளியேறுவது என்று தெரியாமல் அவர் தடுமாறிக்கொண்டிருப்பதாகவே சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வியட்நாம், ஈராக், மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களில் அமெரிக்கா [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-madman-theory-and-a-revisited-suez-canal-story/">&#8216;பைத்தியக்காரன் கோட்பாடும்&#8217; மீண்டும் ஒரு சுயெஸ் கால்வாய் வரலாறும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><strong>மூன்றாம் உலகப்போரின் விளிம்பில் வல்லரசுகள்?</strong></p>
<p><strong>&#8216;பைத்தியக்காரன் கோட்பாடும்&#8217; மீண்டும் ஒரு சுயெஸ் கால்வாய் வரலாறும்</strong></p>
<p>தடுமாறும் அமெரிக்கா &#8211; சீறும் சீனா! ஹோர்முஸ் போர்க்களத்தின் முழுமையான அலசல்</p>
<p>&nbsp;</p>
<p>ஈரானுக்கு எதிராக இஸ்ரேலுடன் கைகோர்த்துத் தொடுத்த போரின் விளைவாக, இன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒரு இக்கட்டான நிலையில் நிற்கிறார். &#8216;கௌரவத்தைக்&#8217; காப்பாற்றிக்கொண்டு எவ்வாறு வெளியேறுவது என்று தெரியாமல் அவர் தடுமாறிக்கொண்டிருப்பதாகவே சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.</p>
<p>வியட்நாம், ஈராக், மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களில் அமெரிக்கா சந்தித்த வரலாற்றுத் தோல்விகளின் வரிசையில், ஈரானும் ஒரு தீராத பிரச்சினையாக மாறிவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.</p>
<p>*நிக்ஸனின் &#8216;பைத்தியக்காரன் கோட்பாடு&#8217; (Madman Theory):*</p>
<p>முன்னாள் ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்ஸன் 1968-இல் கையாண்ட அதே &#8216;பைத்தியக்காரன் கோட்பாட்டை&#8217; இன்று ட்ரம்ப் கையில் எடுத்துள்ளார். &#8220;நான் எதையும் செய்யத் துணிந்துவிட்டேன், அணுவாயுதப் பொத்தான் என் கைக்கு அருகில்தான் இருக்கிறது&#8221; என எதிராளியைப் பயமுறுத்திப் பணிய வைப்பதே இந்தத் தந்திரம்.</p>
<p>ஈரானின் நாகரிகத்தை ஒரே இரவிலேயே அழிப்பேன், என ட்ரம்ப் விடுத்த மிரட்டல்கள் இதன் ஒரு பகுதியே. எனினும், அன்று நிக்ஸன் எதிர்கொண்ட அதே கதியையே இன்று ட்ரம்ப்பும் சந்திக்க நேரிடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.</p>
<p>*பாகிஸ்தானின் தூதுவமும் தற்காலிகப் போர்நிறுத்தமும்*</p>
<p>ஈரான் அரசு தற்போது பிளவுபட்டுள்ள நிலையில், ஒரு புதிய திருப்பமாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க, ஈரானின் மீதான நேரடி இராணுவத் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.</p>
<p>இருப்பினும், ஈரானியத் துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகை தொடரும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.</p>
<p>*சீனாவின் நுழைவும் நேரடி மோதல் அச்சமும்&#8221;</p>
<p>ஈரானியத் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் இந்த முற்றுகை, இப்போது மற்றொரு உலக வல்லரசான சீனாவை உள்ளே இழுத்துள்ளது. ஈரானியக் கச்சா எண்ணெயின் முக்கிய இறக்குமதியாளரான சீனா, தனது எண்ணெய்க் கப்பல்களைப் பாதுகாக்க 48ஆவது பாதுகாப்புப் படைப்பிரிவை (Task Force 48) அரபிக்கடலில் நிலைநிறுத்தியுள்ளது.</p>
<p>டாங்ஷான் (122) மற்றும் தாகிங் (576) போன்ற சீனாவின் நவீன ஏவுகணை அழிப்புக் கப்பல்கள் இந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளன.</p>
<p>ஈரானிய எண்ணெயைச் சுமந்து வரும் சீனக் கப்பல்களை அமெரிக்கா சோதனையிட முயன்றால், அது இரு வல்லரசுகளுக்கும் இடையே ஒரு நேரடிப் போராக வெடிக்கக்கூடும் என சர்வதேச ஊடகங்கள் எச்சரிக்கின்றன.</p>
<p>*வரலாறு திரும்புகிறதா? &#8211; சுயெஸ் கால்வாய் பாடம்*</p>
<p>இன்றைய ஹோர்முஸ் நீரிணை நெருக்கடி, 1956-ஆம் ஆண்டு நிகழ்ந்த சுயெஸ் கால்வாய் நெருக்கடியை நினைவூட்டுகிறது. அன்று எகிப்தின் மீது படையெடுத்த பிரிட்டன், இறுதியில் சர்வதேச அழுத்தங்களால் பின்வாங்க நேரிட்டதுடன், அதன் பிரதமர் அந்தொனி ஈடன் பதவி விலகவும் அது வழிவகுத்தது. அதேபோன்றதொரு இராஜதந்திரத் தோல்வியை நோக்கி அமெரிக்கா தள்ளப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.</p>
<p>*துப்பாக்கி விசையிலேயே விரல்!*</p>
<p>*இது ஈரானின் எச்சரிக்கை*</p>
<p>அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை ஒரு நேரடிப் பகைமைச் செயலாகவே ஈரான் கருதுகிறது. &#8220;நாங்கள் எப்போதும் துப்பாக்கி விசையிலேயே கை வைத்துள்ளோம்; தாக்குதல் மீண்டும் தொடங்கினால் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட இலக்குகள் மீது உடனடிப் பதிலடி கொடுக்கத் தயாராக இருக்கிறோம்&#8221; என ஈரானின் ஊடகப் பேச்சாளர் இப்ராஹிம் ஸோல்பகாரி கடுமை நிறைந்த தொனியில் தெரிவித்துள்ளார்.</p>
<p>மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை மூடிவைத்திருக்கும் ஈரான், முற்றுகை நீங்கும் வரை அதைத் திறக்கப்போவதில்லை, என்பதில் உறுதியாக உள்ளது.</p>
<p>அமெரிக்காவின் இராணுவ வலிமை ஒருபுறம் இருந்தாலும், சீனாவின் தலையீடு மற்றும் ஈரானின் தரைப்படை வலு ஆகியவற்றால் ட்ரம்ப்பின் இராஜதந்திரம் பெரும் சவாலைச் சந்தித்துள்ளது.</p>
<p>இந்த &#8220;யுத்தச் சதுரங்கத்தில்&#8221; அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்பதை உலகம் அச்சத்துடன் கவனித்துக்கொண்டிருக்கிறது.</p>
<p>&#8211; த.ரஸ்மிலா</p>
<p>The post <a href="https://oruvan.com/the-madman-theory-and-a-revisited-suez-canal-story/">&#8216;பைத்தியக்காரன் கோட்பாடும்&#8217; மீண்டும் ஒரு சுயெஸ் கால்வாய் வரலாறும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஜனாதிபதி புடினைச் சந்திக்க ஈரான் வெளிவிகார அமைச்சர் மொஸ்கோ பயணம்</title>
		<link>https://oruvan.com/araghchi-to-meet-putin/</link>
		
		<dc:creator><![CDATA[Rasmila]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Apr 2026 05:26:25 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முகப்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Abbas Araghchi]]></category>
		<category><![CDATA[putin]]></category>
		<category><![CDATA[இஸ்லாமாபாத்]]></category>
		<category><![CDATA[ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி]]></category>
		<category><![CDATA[மொஸ்கோ]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49149</guid>

					<description><![CDATA[<p>ஈரான் மற்றும் அமெரிக்க &#8211; இஸ்ரேல் இடையிலான போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) இன்று ரஷ்யாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். மொஸ்கோ சென்றடையும் அவர், இன்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின் போது ஈரான் &#8211; ரஷ்ய இருதரப்பு உறவுகள் மட்டுமன்றி, பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் சர்வதேச ரீதியில் நிலவும் போர்ச் சூழல் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது. பாகிஸ்தான் மற்றும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/araghchi-to-meet-putin/">ஜனாதிபதி புடினைச் சந்திக்க ஈரான் வெளிவிகார அமைச்சர் மொஸ்கோ பயணம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஈரான் மற்றும் அமெரிக்க &#8211; இஸ்ரேல் இடையிலான போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) இன்று ரஷ்யாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.</p>
<p>மொஸ்கோ சென்றடையும் அவர், இன்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p>
<p>இந்தச் சந்திப்பின் போது ஈரான் &#8211; ரஷ்ய இருதரப்பு உறவுகள் மட்டுமன்றி, பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் சர்வதேச ரீதியில் நிலவும் போர்ச் சூழல் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது.</p>
<p>பாகிஸ்தான் மற்றும் ஓமானுக்கான விஜயங்களைத் தொடர்ந்து ரஷ்யா சென்றுள்ள Araghchi, போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவின் ஆதரவை நாடியுள்ளதாகக் கருதப்படுகிறது.</p>
<p>இதனிடையே, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நடைபெறவிருந்த அமெரிக்க &#8211; ஈரான் நேரடிப் பேச்சுவார்த்தைக்கான திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திடீரென ரத்து செய்துள்ளார்.</p>
<p>நீண்டதூரப் பயணம் என்பது நேர விரயம் எனக் குறிப்பிட்ட ட்ரம்ப், ஈரானியர்கள் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளார்.</p>
<p>அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான ஈரானின் மோதல் தற்போது தற்காலிகப் போர்நிறுத்த நிலையில் உள்ள போதிலும், ஈரானால் மூடப்பட்டுள்ள ஹோர்முஸ் நீரிணை காரணமாக உலகளவில் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.</p>
<p>இந்த எரிசக்தி நெருக்கடி மற்றும் பிராந்தியப் பதற்றங்களுக்குத் தீர்வு காண ரஷ்யா ஒரு முக்கிய மத்தியஸ்தராகச் செயற்படும் என சர்வதேச அரசியல் அவதானிகள் எதிர்பார்க்கின்றனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/araghchi-to-meet-putin/">ஜனாதிபதி புடினைச் சந்திக்க ஈரான் வெளிவிகார அமைச்சர் மொஸ்கோ பயணம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அவுஸ்திரேலிய கடன் நிதி திருட்டு குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த சுரேன் ராகவன் கோரிக்கை</title>
		<link>https://oruvan.com/suren-raghavan-demands-independent-investigation-into-australian-loan-fund-theft/</link>
		
		<dc:creator><![CDATA[Rasmila]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Apr 2026 05:18:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அவுஸ்திரேலியா]]></category>
		<category><![CDATA[முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49145</guid>

					<description><![CDATA[<p>அவுஸ்திரேலியாவுக்குச் செலுத்த வேண்டிய கடன் தொகை திருடப்பட்டமை தொடர்பில் சுதந்திரமான மற்றும் கட்சி சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், ஜனாதிபதி நேரடியாகத் தலையிட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் இதற்கான விசாரணைக் குழுவை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களைத் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யாது, முழுமையாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும், இழக்கப்பட்ட நிதியைச் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/suren-raghavan-demands-independent-investigation-into-australian-loan-fund-theft/">அவுஸ்திரேலிய கடன் நிதி திருட்டு குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த சுரேன் ராகவன் கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அவுஸ்திரேலியாவுக்குச் செலுத்த வேண்டிய கடன் தொகை திருடப்பட்டமை தொடர்பில் சுதந்திரமான மற்றும் கட்சி சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் கோரிக்கை விடுத்துள்ளார்.</p>
<p>கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், ஜனாதிபதி நேரடியாகத் தலையிட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் இதற்கான விசாரணைக் குழுவை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.</p>
<p>இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களைத் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யாது, முழுமையாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும், இழக்கப்பட்ட நிதியைச் சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட பணத்திலிருந்து மீள வசூலிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p>
<p>மேலும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிதியமைச்சர் பதவியிலிருந்து விலகி, அந்தப் பொறுப்பைத் தகுதியான அதிகாரியிடம் ஒப்படைத்துவிட்டு இந்தச் சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.</p>
<p>திறைசேரியின் பாதுகாப்பு கேள்விக்குறியானால் எவரும் நாட்டில் முதலீடு செய்ய முன்வர மாட்டார்கள் என எச்சரித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன், இது குறித்து அரசாங்கம் உடனடியாகப் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/suren-raghavan-demands-independent-investigation-into-australian-loan-fund-theft/">அவுஸ்திரேலிய கடன் நிதி திருட்டு குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த சுரேன் ராகவன் கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
