Author: admin

கடந்த 10 நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 80,000 ஐ அண்மித்தது

admin- August 13, 2025

நாட்டிற்கு வருகைத்தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த மாதத்தின் கடந்த 10 நாட்களில், 77 ஆயிரத்து 482 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை ... Read More

இந்தியாவிலிருந்து மிதந்து வரும் கழிவுகளின் அளவு அதிகரிப்பு

admin- August 13, 2025

இந்தியாவிலிருந்து நாட்டின் சமுத்திர கட்டமைப்பிற்குள் மிதந்து வரும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளின் அளவு அதிகரித்துள்ள நிலையில் சுற்றாடல் அமைச்சு விசேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. மன்னார், யாழ்ப்பாணம், கற்பிட்டி, நீர்கொழும்பு ஆகிய கடற்பிராந்தியங்களில் அதிகளவான கழிவுகள் ... Read More

மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம்

admin- August 13, 2025

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன்படி, WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 63.07 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அத்துடன், ... Read More

காணிப்பத்திரம் வழங்கும் ஹிமிகம தேசிய வேலைத்திட்டம் இன்று அங்குரார்ப்பணம்

admin- August 13, 2025

காணிப்பத்திரம் வழங்கும் ஹிமிகம தேசிய வேலைத்திட்டம் இன்று (13) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. கிளிநொச்சி பளை மத்திய கல்லூரி பிரதான மண்டபத்தில் காலை 09 மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்பமானது. கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி ... Read More

ஜனாதிபதி மற்றும்  அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் இடையே சந்திப்பு

admin- August 12, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் (Paul Stephens) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. தனது பதவிக்காலம் நிறைவடைந்து இலங்கையை விட்டு வெளியேறும் ... Read More

சிறப்புரிமை இரத்து தொடர்பில் சந்திரிக்காவின் விசேட அறிக்கை

admin- August 12, 2025

சிறப்புரிமைகள் இரத்து செய்யப்படுவதற்கு எதிராக, முன்னாள் ஜனாதிபதிகள் நால்வருடன் இணைந்து தாமும் போராடுவதாக வெளியாகியுள்ள தகவல்களை  முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மறுத்துள்ளார். சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் ... Read More

ஜனாதிபதி மற்றும் வியட்நாம் ரொக்ஸ் குழுமத்தின் பிரதானிகள் இடையே சந்திப்பு

admin- August 12, 2025

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் வியட்நாமின் ரொக்ஸ் குழுமத்தின் ஆலோசனைக் குழுவின் தலைவர் மற்றும் கடல்சார் வணிக கூட்டு பங்கு வங்கியின் (MSB) தலைவர் டிரன் அன் துவன் (Tran Anh Tuan) ... Read More

வனாத்தமுல்லவில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை

admin- August 12, 2025

பொரளை – வனாத்தமுல்லவில் இலங்கை பொலிஸ் திணைக்களம் புதிய பொலிஸ் நிலையமொன்றை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளது. இந்த பகுதியில் அண்மைக்காலமாக பல துப்பாக்கிச் சூடு சம்பவங்களும், பல்வேறு குற்றச் செயல்களும் பதிவாகியுள்ளதுடன் மேலும் போதைப்பொருள் கடத்தல் ... Read More

இந்திய கடற்படை கப்பல் நாட்டை வந்தடைந்தது

admin- August 12, 2025

இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் ராணா கப்பல் இன்று காலை திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது. திருகோணமலை துறைமுகத்திற்கு வந்தடைந்த கப்பலை இலங்கை கடற்படை உத்தியோகப்பூர்வமாக வரவேற்றது. இந்த கப்பல் ராஜ்புத் வகுப்பைச் சேர்ந்தது எனவும் 147 ... Read More

மீகொடயில் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் உயிரிழப்பு

admin- August 12, 2025

மீகொட பகுதியில் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி காயமடைந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சாந்த முதுன்கொடுவ உயிரிழந்துள்ளார். எடிகல பகுதியில் அவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது இன்று பகல் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. ... Read More

இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களின் பணிப்புறக்கணிப்பு 02 ஆவது நாளாகவும் தொடர்கிறது

admin- August 12, 2025

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு இன்றும் 02 ஆவது நாளாக தொடர்கிறது. இராமேஸ்வரத்தில் உள்ள மீன்பிடித் துறைமுகங்களில் ... Read More

பொலன்னறுவை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

admin- August 12, 2025

சிறுபோக கொள்முதல் திட்டத்தின் ஒரு பகுதியாக, பொலன்னறுவை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நடவடிக்கைகளை நெல் சந்தைப்படுத்தல் சபை இன்று முதல் ஆரம்பிக்கவுள்ளது. அறுவடைப் பகுதியில் ஏற்பட்ட பின்னடைவுகள் காரணமாக கொள்முதல் செயல்முறை தாமதமானதாக சபையின் ... Read More