Author: admin
பதில் அமைச்சர்கள் ஐவர் நியமனம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதன் காரணமாக 05 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, ஜனாதிபதியின் கீழ் காணப்படும் டிஜிட்டல் பொருளாதாரம், பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி ... Read More
காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும் – கடற்றொழில் அமைச்சர்
யாழ் மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் 2624.29 ஏக்கர் நிலப்பரப்பு எதிர்வரும் காலங்களில் படிப்படியாக விடுவிக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது ... Read More
எலிகாய்ச்சல் கட்டுக்குள் – ஏழு பேருக்கு காய்ச்சல் உறுதி
யாழ்.மாவட்டத்தில் லெப்டோபைரோசிஸ் எனப்படும் எலிக்காய்ச்சலால் பதிவான உயிரிழப்புகளில் 07 பேருக்கு இந்த காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 76 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். ... Read More
ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகளை திறப்பு
பலத்த மழை வீழ்ச்சி காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு வான் கதவு தலா இரண்டு அடியும், மற்ற இரண்டு வான்கதவுகள் தலா மூன்று அடியும் திறக்க ... Read More
தாய்லாந்தில் வெடிகுண்டுத் தாக்குதல் – மூவர் பலி
தாய்லாந்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் மக்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் சுமார் மூவர் உயிரிழந்துள்ளனர். வடக்கு தக் மாகாணத்தில் உள்ள உம்பாங் மாவட்டத்தில் வருடந்தோறும் நடைபெறும் கண்காட்சி நிகழ்வொன்றில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. சம்பவத்தில் ... Read More
வெள்ளவத்தையில் போதைப்பொருட்களுடன் மூவர் கைது
வெள்ளவத்தையில் கொக்கெய்ன் மற்றும் குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலிங்வூட் மாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் 36 கிராம் கொக்கெய்ன் மற்றும் 203 கிராம் ... Read More
இஸ்ரேலில் விதிமுறைகளை மீறிய 17 இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு
இஸ்ரேலில் உள்ள 17 இலங்கைப் பிரஜைகள், வேலை ஒப்பந்தங்களை மீறியதற்காக இலங்கைக்கு திருப்பியனுப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். நாடுகடத்தப்பட்டவர்கள் விவசாய வேலை விசாவில் இஸ்ரேலுக்கு சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் நியமிக்கப்பட்ட ... Read More
ஜனாதிபதி இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் – பிரதமர் மோடியுடனான சந்திப்பு நாளை
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று பிற்பகல் இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்கிறார். ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறையாகும். இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக மற்றும் ... Read More
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 46,934 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். இதன்படி, மேல் ... Read More
மாளிகாகந்தயில் துப்பாக்கி பிரயோகம் – பெண் ஒருவர் காயம்
கொழும்பு மாளிகாகந்த நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் அடையாளந்தெரியாத நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந்தெரியாத நபர் துப்பாக்கி ... Read More
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான ஆய்வுகள் ஆரம்பம்
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான ஆய்வுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட்டுள்ள மின்சார உற்பத்திக்கான எரிபொருள் விலை தொடர்பான அறிக்கையை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் ... Read More
சபாநாயகரின் பதவி விலகலை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்
சபாநாயகர் அசோக ரன்வலவின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஏற்றுக்கொண்டார். இதனை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் ... Read More












